அதிகாலையில் கோரம்.. டயர் வெடித்து விபத்துக்குள்ளாகி எரிந்த பஸ்.. 25 பயணிகள் கருகி பலி

Jul 01, 2023,10:02 AM IST
நாக்பூர்:   மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா அருகே நடந்த கோரமான  விபத்தில் பஸ் தீப்பிடித்து எரிந்ததில், 25 பயணிகள் உயிரோடு கருகி பலியானார்கள்.

இன்று அதிகாலையில் இந்த சம்பவம் சம்ருத்தி - மஹாமார்க் நெடுஞ்சாலையில் நடந்துள்ளது. பஸ் ஓடிக் கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளானது. தொடர்ந்து பஸ்சில் தீப்பிடித்துக் கொண்டதால், தீயில் சிக்கி 25 பயணிகள் பரிதாபமாக கருகிப் போனார்கள். இறந்தவர்களில் 3 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.  எட்டு பேர் காயத்துடன் உயிர் தப்பினர்.



இந்தப் பேருந்தில் 33 பயணிகள் இருந்துள்ளனர். புனேவுக்கு இந்த பேருந்து சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை புல்தானா என்ற இடம் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென விளக்குக் கம்பம் ஒன்றில் மோதி சாலையோரம் கவிழ்ந்தது. டயர் வெடித்ததால் பஸ் தாறுமாறாக ஓடி சாலையோர  விளக்குக் கம்பத்தில் மோதியதாக கூறப்படுகிறது. அதேவேகத்தில் பஸ் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. தீ வேகமாக பஸ்ஸுக்குள் பரவியதால் உள்ளே இருந்தவர்கள் தீயில் சிக்கிக் கொண்டனர்.

இந்த விபத்தில் பஸ் டிரைவர் உள்பட 8 பேர் காயத்துடன் உயிர் தப்பினர். அவர்களை புல்தானாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளும் காணும் பணி நடந்து வருகிறது. அதிகாலையில் நடந்து விட்ட இந்த கோரமான விபத்து மற்றும் உயிரிழப்பால் மகாராஷ்டிராவில் சோகம் நிலவுகிறது. சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கலும் அதிர்ச்சியும் தெரிவித்துள்ள மகாராஷ்டிரா  முதல்வர் ஏக்நாத் ஷிண்டே,  உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீட்டை அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்