அதிகாலையில் கோரம்.. டயர் வெடித்து விபத்துக்குள்ளாகி எரிந்த பஸ்.. 25 பயணிகள் கருகி பலி

Jul 01, 2023,10:02 AM IST
நாக்பூர்:   மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா அருகே நடந்த கோரமான  விபத்தில் பஸ் தீப்பிடித்து எரிந்ததில், 25 பயணிகள் உயிரோடு கருகி பலியானார்கள்.

இன்று அதிகாலையில் இந்த சம்பவம் சம்ருத்தி - மஹாமார்க் நெடுஞ்சாலையில் நடந்துள்ளது. பஸ் ஓடிக் கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளானது. தொடர்ந்து பஸ்சில் தீப்பிடித்துக் கொண்டதால், தீயில் சிக்கி 25 பயணிகள் பரிதாபமாக கருகிப் போனார்கள். இறந்தவர்களில் 3 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.  எட்டு பேர் காயத்துடன் உயிர் தப்பினர்.



இந்தப் பேருந்தில் 33 பயணிகள் இருந்துள்ளனர். புனேவுக்கு இந்த பேருந்து சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை புல்தானா என்ற இடம் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென விளக்குக் கம்பம் ஒன்றில் மோதி சாலையோரம் கவிழ்ந்தது. டயர் வெடித்ததால் பஸ் தாறுமாறாக ஓடி சாலையோர  விளக்குக் கம்பத்தில் மோதியதாக கூறப்படுகிறது. அதேவேகத்தில் பஸ் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. தீ வேகமாக பஸ்ஸுக்குள் பரவியதால் உள்ளே இருந்தவர்கள் தீயில் சிக்கிக் கொண்டனர்.

இந்த விபத்தில் பஸ் டிரைவர் உள்பட 8 பேர் காயத்துடன் உயிர் தப்பினர். அவர்களை புல்தானாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளும் காணும் பணி நடந்து வருகிறது. அதிகாலையில் நடந்து விட்ட இந்த கோரமான விபத்து மற்றும் உயிரிழப்பால் மகாராஷ்டிராவில் சோகம் நிலவுகிறது. சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கலும் அதிர்ச்சியும் தெரிவித்துள்ள மகாராஷ்டிரா  முதல்வர் ஏக்நாத் ஷிண்டே,  உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீட்டை அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்கப் மரண வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை

news

தமிழக சட்டசபைத் தேர்தல் 2026 : வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.. நாளை மனுக்கள் பரிசீலனை

news

இது GenZ காலம்.. திருமணங்களுக்கு முற்றுப்புள்ளியா?

news

ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதல்

news

Mayiladuthurai Kitchen: மைக்ரோவேவ் இல்லாமல் ரவா கேக்கா?.. ஆமாங்க ஆமா!

news

கோவில் மணி.. Temple bell.. அடிப்பதால் என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?

news

சொல்லாமலே புரியும் அன்னை வீடு… சொல்லியும் புரியாத புகுந்த வீடு!

news

Monday Motivation: புதையுண்டு காத்திருந்தேன்.. பல்லூழிக்காலமாய்.. காலம் உயர்த்தும்!

news

இயற்கை ஒரு மாபெரும் ஆசிரியர்... The greatest lessons I have learnt is

அதிகம் பார்க்கும் செய்திகள்