மகாராஷ்டிரா பஸ் விபத்து...உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார் மோடி

Jul 01, 2023,11:04 AM IST
டில்லி : மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா அருகே நடந்த கோரமான  விபத்தில் பஸ் தீப்பிடித்து எரிந்ததில், 25 பயணிகள் உயிரோடு கருகி பலியானார்கள். இதில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரண தொகை அறிவித்துள்ளார் பிரதமர் மோடி.

மகாராஷ்டிராவில் யவட்மால் பகுதியில் இருந்து புனே நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் சம்ருதி மகாமார்க் எக்ஸ்பிரஸ்வேயில் புல்தானா அருகே திடீரென தீப்பற்றி எரிந்து, விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 25 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். 8 பேர் காயமடைந்துள்ளனர். 



\இந்த விபத்து தொடர்பாக பஸ்சின் டிரைவர் மற்றும் கன்டெக்டர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். விபத்து குறித்து விசாரைண நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 மும் நிவாரணம் அறிவித்துள்ளார் பிரதமர் மோடி.

இந்த விபத்து மிகவும் வேதனை அளிப்பதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்வதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் மீண்டும் வர வேண்டும் என்றும் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

பிரதமர் குற்றம் சாட்டியது திமுகவை தான்... தமிழர்களை அல்ல: தமிழிசை சவுந்தர் ராஜன் பேட்டி!

news

வண்ணதாசன் - ஒரு சிறு இசை - சிறுகதை நூல்.. மதிப்புரை!

news

ரூ.3,250 கோடி ஒப்பந்தம்... தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு!

news

நவம்பர் மாதமே வருக வருக.. 30 நாட்கள் கொண்ட நான்கு மாதங்களில்.. கடைசி மாதம்!

news

இரும்புப் பெண் இந்திரா காந்தி.. இன்னும் சில பத்தாண்டுகள் இருந்திருந்தால்.. இந்தியா எப்போதோ வல்லரசு!

news

பீகாரில் 1 கோடி பேருக்கு வேலை.. பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்.. தேஜகூ தேர்தல் அறிக்கை

news

தமிழர்களை எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை: கனிமொழி

news

நகை வாங்க இதுவே சரியான தருனம்... இன்று தங்கம் வெள்ளி விலையில் எந்தமாற்றமும் இல்லை!

news

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்.. சூடு பிடித்தது சிபிஐ விசாரணை.. இன்ஸ்பெக்டரிடம் முக்கிய விசாரணை

அதிகம் பார்க்கும் செய்திகள்