மகாராஷ்டிரா பஸ் விபத்து...உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார் மோடி

Jul 01, 2023,11:04 AM IST
டில்லி : மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா அருகே நடந்த கோரமான  விபத்தில் பஸ் தீப்பிடித்து எரிந்ததில், 25 பயணிகள் உயிரோடு கருகி பலியானார்கள். இதில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரண தொகை அறிவித்துள்ளார் பிரதமர் மோடி.

மகாராஷ்டிராவில் யவட்மால் பகுதியில் இருந்து புனே நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் சம்ருதி மகாமார்க் எக்ஸ்பிரஸ்வேயில் புல்தானா அருகே திடீரென தீப்பற்றி எரிந்து, விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 25 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். 8 பேர் காயமடைந்துள்ளனர். 



\இந்த விபத்து தொடர்பாக பஸ்சின் டிரைவர் மற்றும் கன்டெக்டர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். விபத்து குறித்து விசாரைண நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 மும் நிவாரணம் அறிவித்துள்ளார் பிரதமர் மோடி.

இந்த விபத்து மிகவும் வேதனை அளிப்பதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்வதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் மீண்டும் வர வேண்டும் என்றும் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

Vizhinjam Port: விழிஞ்ஞம் துறைமுகம்.. இந்தியா மற்றும் கேரளாவின் வர்த்தக வளர்ச்சியில் புது அத்தியாயம்

news

நேஷனல் ஹெரால்டு வழக்கில்.. சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு.. டெல்லி கோர்ட் நோட்டீஸ்

news

3, 5,8 வகுப்பு மாணவர்களை.. fail ஆக்கும் நடைமுறையை ஒருபோதும் ஏற்க முடியாது: அமைச்சர் அன்பில் மகேஷ்

news

பாகிஸ்தான் வான்வெளி மூடப்படுவதால்.. ஏர் இந்தியா நிறுவனத்துக்கு $600 மில்லியன் இழப்பு!

news

வெயிலிலிருந்து தப்ப.. நீண்ட நேரம் AC இயக்கினால்.. என்னென்ன பிரச்சினையெல்லாம் வரும் தெரியுமா?

news

மதுரை சித்திரை திருவிழா... 4ம் தேதி முதல் பொருட்காட்சி.. 45 நாட்களுக்கு!

news

என் இதயமே.. மீண்டும் ஒரு காதல் கதையில் ஷிகர் தவான்.. இன்ஸ்டாவில் குவியும் வாழ்த்துகள்!

news

பயணிகளின் கோரிக்கையை ஏற்று.. புறநகர் ஏசி ரயில்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.. தெற்கு ரயில்வே!

news

வாழ்த்து மழையில் நனையும்‌.. டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம்.. கொண்டாடும் ரசிகர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்