மகாராஷ்டிரா பஸ் விபத்து...உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார் மோடி

Jul 01, 2023,11:04 AM IST
டில்லி : மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா அருகே நடந்த கோரமான  விபத்தில் பஸ் தீப்பிடித்து எரிந்ததில், 25 பயணிகள் உயிரோடு கருகி பலியானார்கள். இதில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரண தொகை அறிவித்துள்ளார் பிரதமர் மோடி.

மகாராஷ்டிராவில் யவட்மால் பகுதியில் இருந்து புனே நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் சம்ருதி மகாமார்க் எக்ஸ்பிரஸ்வேயில் புல்தானா அருகே திடீரென தீப்பற்றி எரிந்து, விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 25 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். 8 பேர் காயமடைந்துள்ளனர். 



\இந்த விபத்து தொடர்பாக பஸ்சின் டிரைவர் மற்றும் கன்டெக்டர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். விபத்து குறித்து விசாரைண நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 மும் நிவாரணம் அறிவித்துள்ளார் பிரதமர் மோடி.

இந்த விபத்து மிகவும் வேதனை அளிப்பதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்வதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் மீண்டும் வர வேண்டும் என்றும் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

கோவை, நீலகிரிக்கு அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

news

கட்ட பஞ்சாயத்து செய்யவா மக்கள் ஓட்டு போட்டார்கள்? பூவை ஜெகன் மூர்த்திக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

news

ஐபிஎல் லைட்டை நாங்கதான் ஹேக் பண்ணோம் தெரியுமா.. காமெடி செய்த பாகிஸ்தான் அமைச்சர்!

news

ரஜினிகாந்த், விஜயகாந்தை விட விஜய் என்ன பெரிய ஆளா? தவாக தலைவர் வேல்முருகன்

news

2026ல் தொடங்குகிறது சென்சஸ் கணக்கெடுப்பு.. முதலில் லடாக், காஷ்மீரில் தொடங்கும்.. மத்திய அரசு

news

பாமகவின் இரு தலைவர்களும் பேச வேண்டும்: பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி

news

தமிழ்நாட்டை கத்தி.. அரிவாள்.. துப்பாக்கி பாதைக்கு கொண்டு சென்றுள்ள திமுக அரசு: எடப்பாடி பழனிச்சாமி

news

இஸ்ரேல் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தினால்.. எங்களுக்காக பாகிஸ்தான் பதில் தரும்.. ஈரான்

news

இஸ்ரேலுக்கு முழுமையான பதிலடி தருவோம்.. அதுவரைக்கும் போர் நிறுத்தம் கிடையாது.. ஈரான் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்