அடுத்த வைரஸ் வருது ரெடியாகிக்கோங்க.. எச்சரிக்கும் உலக சுகாதார மையம்

May 25, 2023,09:26 AM IST
நியூயார்க் : உருமாறிய அடுத்த வைரஸ் உலகம் முழுவதிலும் நோய் தொற்றை பரப்ப வர உள்ளது. அதனால் அனைவரும் அதை எதிர்கொள்ள தயாராக இருந்து கொள்ளும் படி உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ராஸ் அதனம் கிரிபேரியசஸ் எச்சரித்துள்ளார்.

2019 ம் ஆண்டின் இறுதியிலேயே கொரோனா பெருந்தோற்று உலக நாடுகளை மிரட்ட துவங்கி விட்டது. கொரோனா பெரும் தோற்றிற்கு அனைத்து நாடுகளும் லட்சக்கணக்கான உயிர்களை பலிகொடுத்துள்ளன. கோவிட் 19 க்கு பிறகும் உருமாறி பல வைரஸ்கள் அடுத்தடுத்து உருவாகி உலகையே ஸ்தம்பிக்க வைத்து விட்டன. கோவிட் 19 ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து பல நாடுகளால் இன்னும் மீண்டு வர முடியவில்லை. மக்களின் வாழ்க்கை முறை மாறி உள்ளது.



இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய டெட்ராஸ், கோவிட் 19 பெருந்தொற்றின் அவசர நிலை உலகம் முழுவதும் முடிவுக்கு வந்து விட்டதாக தெரிவித்தார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த 76 வது உலக சுகாதார கூட்டத்தில் பேசிய போது, உருமாறிய மற்றொரு வகை வைரஸ் புதிய வகையான நோயினை பரப்பி,மிரட்ட உள்ளது. இது உலகம் முழுவதும் அதிகப்படியான உயிர்களை கொல்லும் நோயாக இருக்கும் என  எச்சரித்துள்���ார். 

அடுத்த பெருந்தொற்று வந்து வீட்டின் கதவை தட்டுவதற்குள் நாம் தெளிவாக முடிவெடுத்து, அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். கோவிட் 19 உடல் ரீதியான பல சவால்களை நம் முன் வைத்து விட்டு சென்றுள்ளது. இதனால் உலகம் முழுவதும் சுகாதார ஒழுங்குமுறைகளை முறைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அனைவரும் இருக்கிறோம். 

மருத்துவமனைகள், மருத்துவர்கள், சுகாதாரா முன்பணியாளர்கள் என அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும். அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும்.

சுகாதார அவசர நிலையை சமாளிக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். கொரோனாவை போன்ற பயங்கர பேரழிவை இனி ஒரு போதும் இந்த உலகம் எதிர்கொள்ளக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!

news

துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!

news

பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது

news

விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு.. முதல் முறையாக.. தேமுதிக பொதுக்குழு கூட்டம்.. 30ம் தேதி!

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்