புதிய நாடாளுமன்ற திறப்பு.. திமுக, காங்கிரஸ், திரினமூல் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பு

May 24, 2023,11:23 AM IST
டெல்லி : புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள்புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.  மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் புறக்கணிக்க போவதை ஏற்கனவே அறிவித்து விட்டது.

இதேபோல விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் புறக்கணிப்பு முடிவை அறிவித்துள்ளது.

டில்லியின் மத்திய பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழா மே 28 ம் தேதியன்று நடைபெற உள்ளது. பிரதமர் மோடி இந்த கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார். பார்லிமென்ட் கட்டிடத்தை ஜனாதிபதி தானே திறந்து வைக்க வேண்டும். பிரதமர் எப்படி திறந்து வைக்கலாம்? இது ஜனாதிபதியை அவமதிக்கும் செயல் எனக் கூறி எதிர்க்கட்சிகள் இவ்விழாவை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்து வருகின்றனர்.



மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதிலும் உள்ள எதிர்க்ட்சிகள் ஒன்று திரண்டு வரும் நிலையில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நேற்று சந்தித்து பேசி உள்ளார். இதைத் தொடர்ந்து டில்லியில் அதிகாரிகள் மாற்றப்பட்டது குறித்தும் மத்திய அரசிடம் கேள்வி கேட்டுள்ளது ஆம் ஆத்மி கட்சி.

நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவிற்கு ஜனாதிபதியை அழைக்காதது அவரை அவமதிப்பதாகும். இது பழங்குடியின மக்களையே அவமதித்தது போன்றது. இந்த விழாவை ஆம்ஆத்மி புறக்கணிப்பதுடன் பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்த போவதாக ஆம்ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் ட்வீட் செய்துள்ளார். 

ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதியை நாடாளுமன்றத் திறப்பு விழாவிற்கு அழைக்காமல் பிரதமர் மோடி கட்டிடத்தை திறப்பது அவர்களை அவமதிப்பதை போன்றது. மத்திய அரசு தொடர்ந்து அவமதித்து வருகிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

திமுக, விசிக, கம்யூனிஸ்டுகள் புறக்கணிப்பு

முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும், கட்டிட திறப்பு விழாவிற்கு தனக்கு அழைப்பு வரவில்லை என நேற்று ட்வீட் செய்திருந்தார். தற்போதைய ஜனாதிபதி திரெளபதி முர்முவிற்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. அவர் தான் இந்தியாவின் முதல் குடிமகன். ஒட்டுமொத்த இந்திய குடிமக்களின் முதல் பிரதிநிதி அவர். கட்டிட திறப்பின் போது அரசு தனது ஜனநாயக மதிப்பையும் , அரசியலைப்பு முக்கியத்துவத்தையும் அளிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் சார்பில் ட்வீட் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டவை நாடாளுமன்றத் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. பல்வேறு முக்கிய எதிர்க்கட்சிகளும் திறப்பு விழாவை புறக்கணிக்கவுள்ளதால் இந்த நிகழ்வு பரபரப்பாகியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

news

100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்

news

அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி

news

சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!

news

மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!

news

அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்

news

NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்

news

நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு

news

பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!

அதிகம் பார்க்கும் செய்திகள்