"பேய் மழை வரும்.. திகுதிகுன்னு தீப்பிடித்து எரியும்".. பதற வைக்கும் ஸ்வர்ணலதா!

Jul 10, 2023,01:26 PM IST
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் பேய் மழை பெய்யும்.. அதேபோல பெருமளவில் தீவிபத்துகளும் நடைபெறும் என்றி கூறி அதிர வைத்துள்ளார் "ஆரக்கிள்" ஸ்வர்ணலதா.

ஓங்குதாங்கான குரலில் பாடி கலக்கும் ஸ்வர்ணலதாவை நமக்குத் தெரியும்.. அது யாரு இந்த ஆரக்கிள் ஸ்வர்ணலதா என்று நீங்க கேட்கும் மைன்ட் வாய்ஸ் இங்கேயும் கேட்குது. வாங்க தொடர்ந்து படிப்போம்.



தெலங்கானாவைச் சேர்ந்தவர்தான் இந்த ஸ்வர்ணலதா. இவருக்கு ஆரக்கிள் ஸ்வர்ணலதா என்று பெயர். இவர் பல்வேறு கணிப்புகளைக் கூறுவது வழக்கம். அதில் பல நடந்ததில்லை.. சில நடந்துள்ளன. ஆனாலும் தொடர்ந்து இவர் கணிப்புகளைக் கூறி வருகிறார். குறிப்பாக தெலங்கானாவில் புகழ் பெற்ற போனலு பண்டிகையின்போதுதான் இவர் கணிப்புகளை வெளியிடுவார்.

இந்த முறை செகந்தராபாத்தில் உள்ள உஜ்ஜைன் மகாகாளி கோவிலில் நடந்த திருவிழாவின்போது அதிர வைக்கும் பல கணிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக ஸ்வர்ணலதா கூறுகையில், போன வருடம் பூஜைகள் சரியாக நடைபெறவில்லை. ஆனால் இந்த முறை பரவாயில்லை, சிறப்பாகவே செய்துள்ளனர்.

போன முறை மழை பொய்த்தது. இந்த முறை அப்படி இருக்காது. எதிர்பார்த்ததை விட அதிக அளவில் மழை பெய்யும். அதாவது பேய் மழை பெய்யும்.  ஆனால் சற்று லேட்டாக பெய்யும்.  அபரிமிதமாக அது இருக்கும்.

அதேபோ மாநிலத்தில் தீவிபத்துகளும் அதிகம் இருக்கும். அதையும் நாம் பார்க்கப் போகிறோம். ஆனால் பக்தர்கள் பயப்பட வேண்டாம். நான் அவர்களை பாதுகாப்பேன்.  அது எனது கடமை.

பூஜைகள் தொடர்ந்து ஐந்து வாரங்கள் நடக்க வேண்டும். அப்போதுதான் நல்லது.. இதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார் ஸ்வர்ணலதா.

ஸ்வர்ணலதாவின் கணிப்புகள் தெலங்கானாவில் ரொம்பப் பிரபலம். எனவே இந்தக் கணிப்புகள் அவரது நம்பிக்கையாளர்களிடையே பரபரப்பைக் கிளப்பியுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்