"பேய் மழை வரும்.. திகுதிகுன்னு தீப்பிடித்து எரியும்".. பதற வைக்கும் ஸ்வர்ணலதா!

Jul 10, 2023,01:26 PM IST
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் பேய் மழை பெய்யும்.. அதேபோல பெருமளவில் தீவிபத்துகளும் நடைபெறும் என்றி கூறி அதிர வைத்துள்ளார் "ஆரக்கிள்" ஸ்வர்ணலதா.

ஓங்குதாங்கான குரலில் பாடி கலக்கும் ஸ்வர்ணலதாவை நமக்குத் தெரியும்.. அது யாரு இந்த ஆரக்கிள் ஸ்வர்ணலதா என்று நீங்க கேட்கும் மைன்ட் வாய்ஸ் இங்கேயும் கேட்குது. வாங்க தொடர்ந்து படிப்போம்.



தெலங்கானாவைச் சேர்ந்தவர்தான் இந்த ஸ்வர்ணலதா. இவருக்கு ஆரக்கிள் ஸ்வர்ணலதா என்று பெயர். இவர் பல்வேறு கணிப்புகளைக் கூறுவது வழக்கம். அதில் பல நடந்ததில்லை.. சில நடந்துள்ளன. ஆனாலும் தொடர்ந்து இவர் கணிப்புகளைக் கூறி வருகிறார். குறிப்பாக தெலங்கானாவில் புகழ் பெற்ற போனலு பண்டிகையின்போதுதான் இவர் கணிப்புகளை வெளியிடுவார்.

இந்த முறை செகந்தராபாத்தில் உள்ள உஜ்ஜைன் மகாகாளி கோவிலில் நடந்த திருவிழாவின்போது அதிர வைக்கும் பல கணிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக ஸ்வர்ணலதா கூறுகையில், போன வருடம் பூஜைகள் சரியாக நடைபெறவில்லை. ஆனால் இந்த முறை பரவாயில்லை, சிறப்பாகவே செய்துள்ளனர்.

போன முறை மழை பொய்த்தது. இந்த முறை அப்படி இருக்காது. எதிர்பார்த்ததை விட அதிக அளவில் மழை பெய்யும். அதாவது பேய் மழை பெய்யும்.  ஆனால் சற்று லேட்டாக பெய்யும்.  அபரிமிதமாக அது இருக்கும்.

அதேபோ மாநிலத்தில் தீவிபத்துகளும் அதிகம் இருக்கும். அதையும் நாம் பார்க்கப் போகிறோம். ஆனால் பக்தர்கள் பயப்பட வேண்டாம். நான் அவர்களை பாதுகாப்பேன்.  அது எனது கடமை.

பூஜைகள் தொடர்ந்து ஐந்து வாரங்கள் நடக்க வேண்டும். அப்போதுதான் நல்லது.. இதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார் ஸ்வர்ணலதா.

ஸ்வர்ணலதாவின் கணிப்புகள் தெலங்கானாவில் ரொம்பப் பிரபலம். எனவே இந்தக் கணிப்புகள் அவரது நம்பிக்கையாளர்களிடையே பரபரப்பைக் கிளப்பியுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

news

ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?

news

ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்

news

ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்

news

சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!

news

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா

news

ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!

news

மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்