சென்னை : ப்ளஸ் 2 பொதுத் தேர்வின் முதல் நாளிலேயே 50,674 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என பள்ளி கல்வித்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் 13 ம் தேதியான நேற்று ப்ளஸ் 2 பொதுத்தேர்வுகள் துவங்கின. அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் ப்ளஸ் 2 தேர்வு எழுதப் போகும் மாணவர்களுக்கு அறிவுரைகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். முதல் தேர்வான நேற்று தமிழ் மொழிப்பாட தேர்வு நடந்தது. ஆனால் முதல் நாளே 50,674 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை என்ற அதிர்ச்சி தகவலை தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 8,51,303 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால் 8.01,744 மாணவ, மாணவிகள் மட்டுமே நேற்று தேர்வு எழுதி உள்ளதாகவும், இத்தனை பேர் ஒரே நாளில் தேர்வு எழுதாமல் போனதற்கு என்ன காரணம் என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
நம்பிக்கையுடன் இருங்கள்... Be an Optimist
பாமக ராமதாஸின் அன்புமணிக்கு எதிரான வழக்கு: தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
நிறைகுடம்
புதுச்சேரி திமுக கூட்டணியிலும் சலசலப்பு...தொகுதி பங்கீடு உறுதி செய்ய முடியாத நிலை
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்: 1,111 தேர்தல் பார்வையாளர்களை நியமினம்
கடலுக்குள் சென்று பார்க்க ஆர்வமா?
அழகோவியம்!
மூச்சடக்கும் கப்பல்.. அப்படீன்னா என்ன தெரியுமா!
சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
{{comments.comment}}