சென்னை : ப்ளஸ் 2 பொதுத் தேர்வின் முதல் நாளிலேயே 50,674 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என பள்ளி கல்வித்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் 13 ம் தேதியான நேற்று ப்ளஸ் 2 பொதுத்தேர்வுகள் துவங்கின. அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் ப்ளஸ் 2 தேர்வு எழுதப் போகும் மாணவர்களுக்கு அறிவுரைகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். முதல் தேர்வான நேற்று தமிழ் மொழிப்பாட தேர்வு நடந்தது. ஆனால் முதல் நாளே 50,674 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை என்ற அதிர்ச்சி தகவலை தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 8,51,303 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால் 8.01,744 மாணவ, மாணவிகள் மட்டுமே நேற்று தேர்வு எழுதி உள்ளதாகவும், இத்தனை பேர் ஒரே நாளில் தேர்வு எழுதாமல் போனதற்கு என்ன காரணம் என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி
தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
{{comments.comment}}