பாகிஸ்தானில் மீண்டும் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்த வேண்டும்.. பஞ்சாப் கவர்னர் பேச்சு!

Jun 09, 2023,12:02 PM IST
அமிர்தசரஸ்:  பாகிஸ்தானில் மீண்டும் ஒரு முறையோ அல்லது 2 முறையே சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தப்பட வேண்டும் என்று பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளார். இந்தியாவுக்குள் தொடர்ந்து போதைப் பொருளை ஊடுறுவ வைத்து வரும் பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் புரோஹித் கூறியுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் எல்லைப் பகுதியில் போதைப் பொருள் கடத்தல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. பஞ்சாப் போலீஸார் தங்களது ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலமாக தொடர்ந்து பெருமளவிலான போதைப் பொருட்களை கைப்பற்றி வருகின்றனர். பாகிஸ்தானிலிருந்துதான் இந்தப் போதைப் பொருட்கள் உள்ளே ஊடுறுவுகின்றன.



இந்த நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், 2 நாள் பயணமாக எல்லைப் புற மாவட்டங்களுக்கு வந்திருந்தார். அமிர்தசரஸ் வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவைச் சீண்டி வருகிறது. இப்படியே விட்டு வைத்தால் ஒரு தலைமுறையே போதைப் பொருட்களுக்கு அடிமையாகி விடும். பாகிஸ்தானில் ஒன்று அல்லது 2 சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்த வேண்டும். அந்த நாட்டுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும்.

எல்லைப் பாதுகாப்புப் படை, ராணுவம், உளவு பிரிவு, பஞ்சாப் போலீஸார் ஆகியோர் ஒருங்கிணைந்த முறையில் போதைப் பொருட்களுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது.  இவர்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் போதைப் பொருட்கள் பறிமுதல் சிறப்பாக நடந்து வருகிறது.

இந்தியாவுடன் நேரடியாக மோத பயந்து கொண்டு இப்படி முறைமுகப் போரில் ஈடுபட்டுள்ளது பாகிஸ்தான்.  ஏராளமான டிரோன்களை எல்லைக்குள் ஊடுறுவ வைத்து அதன் மூலம் போதைப் பொருட்களை இந்தியாவுக்குள் கடத்துகிறது. பாகிஸ்தான் அரசு அல்லது அந்த நாட்டு ராணுவத்தின் உதவி இல்லாமல் இது நிச்சயம் சாத்தியமில்லை என்றார் அவர்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

news

அதிமுக கூட்டணியில் பாஜக, தேமுதிக.,விற்கு எத்தனை சீட்? .. சூப்பர் சுவாரஸ்ய எதிர்பார்ப்பு!

news

விஜய் சுற்றுப்பயணத்தில் மாற்றம்... 27ம் தேதி சேலம் இல்லைங்க.. கரூரில் மக்களை சந்திக்கிறார்

news

சென்னையில் ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் வானிலை மைய அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

news

திமுக அரசின் சமூகநீதி விடுதிகளில் மதமாற்றமா? நயினார் நாகேந்திரன் கண்டனம்!

news

விஜயம் - ஜெயம் பேச்சு.. நான் சொன்னது ஆக்சுவல்லி மொக்கையானது.. பார்த்திபன் விளக்கம்

news

ஜிஎஸ்டி வரி குறைப்பு... ஆவின் பால் பொருட்களின் விலை குறைப்பு

news

ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட பிறகு ஆவின் பால் பொருள்களின் விலை குறைக்கப்படாதது ஏன்?: அன்புமணி ராமதாஸ்!

news

ஜிஎஸ்டி சீரமைப்பு அமலான முதல் நாளில்.. இந்தியப் பங்குச் சந்தையில் வீழ்ச்சி

அதிகம் பார்க்கும் செய்திகள்