ஷீலா தீட்ஷித் பங்களாவில் குடியேற போகிறாரா ராகுல் காந்தி ?

Jul 12, 2023,02:58 PM IST
டெல்லி :  காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் வசித்து வந்த பங்களாவுக்கு இடம் பெயருவார் என்று தெரிகிறது.

சூரத் கோர்ட் தனக்கு அளித்த நான்கு ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை குஜராத்  ஐகோர்ட் சமீபத்தில் தள்ளுபடி செய்தது. இதனால் அவர் எம்பி.,யாக தகுதி நீக்கம் செய்யப்பட்டது உறுதியாகி விட்டது. 

இதனையடுத்து டெல்லியில் ராகுல் காந்தி தங்கி இருந்த அரசு பங்களாவை காலி செய்ய சொல்லி அதிகாரிகள் சொல்லி விட்டனர். அதன் பேரில் ராகுல் காந்தியும் தனது வீட்டை காலி செய்து கொடுத்து விட்டார். இதையடுத்து டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் வாழ்ந்த 3 அறைகள் கொண்ட வீட்டிற்கு ராகுல் காந்தி மாறப் போகிறாராம். தெற்கு டில்லியின் கிழக்கு நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ள இந்த பங்களாவில் தற்போது ஷீலாவின் மகன் சந்தீப் தீக்ஷித் வசித்து வருகிறார்.




தற்போது ராகுல் காந்தி அந்த வீட்டிற்கு மாற உள்ளதால் அதற்கு அருகில் உள்ள ஷீலா தீட்ஷித்திற்கு சொந்தமான வீட்டிற்கு சந்தீப் தீட்ஷித் மாறப் போகிறாராம். ராகுல் தற்போது குடியேற போகும் வீட்டில் தான் ஷீலா தீட்ஷித் தனது கடைசி காலங்களை கழித்தார். விரைவில் புதிய வீட்டிற்கு ராகுல் இடம் மாறுவார் என சொல்லப்படுகிறது.

ஏற்கனவே எம்பி.,யாக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் அவர் அடுத்து என்ன செய்ய போகிறார் என்பதை தெரிந்து கொள்ள காங்கிரஸ் தொண்டர்கள் ஆவலாக இருக்கும் சமயத்தில், ராகுலின் இந்த புதிய இடம் மாற்றம் நிச்சயம் நல்ல மாற்றமாக அமையும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தற்போது மக்களை நேரடியாக சந்தித்து வரும் ராகுல் காந்தி வயல்களுக்குச் சென்று நாற்று நடுகிறார்.. லாரி பயணம் மேற்கொள்கிறார்.. மெக்கானிக் ஷாப்புகளுக்குச் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்