சென்னை : ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதனால் ரஜினியின் அடுத்தடுத்த படங்கள் பற்றி பல தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
ஜெயிலர் படத்தில் தனது போர்ஷன் ஷூட்டிங்கை நிறைவு செய்து விட்ட ரஜினி, தற்போது டப்பிங் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதோடு தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து தலைவர் 170 படத்திற்காகவும் ரஜினி தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.
ஜெய்பீம் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் தான் தலைவர் 170 படத்தை இயக்க போகிறார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் தான் இந்த பிரம்மாண்ட படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் ரஜினியுடன் மிக முக்கியமான ரோலில் பாலிவுட் டாப் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கிறாராம். இதற்கு முன் அந்த கன்னூன், ஹம் உள்ளிட்ட சில படங்களில் ரஜினியும், அமிதாப் பச்சனும் இணைந்து நடித்துள்ளனர்.

தற்போது 32 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டு பெரிய ஹீரோக்களும் இணைந்து நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இநந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த மாத இறுதியில் துவங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. ரஜினி மட்டுமல்ல, கமலும் பாலிவுட் படம் ஒன்றில் வில்லனாக நடிக்க கமிட்டாகி உள்ளார். இந்த படத்திலும் அமிதாப் பச்சன் மிக முக்கியமான ரோலில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் தமிழில் அமிதாப் பச்சனுக்கு என்று மீண்டும் ரசிகர் கூட்டம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}