சென்னை : ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதனால் ரஜினியின் அடுத்தடுத்த படங்கள் பற்றி பல தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
ஜெயிலர் படத்தில் தனது போர்ஷன் ஷூட்டிங்கை நிறைவு செய்து விட்ட ரஜினி, தற்போது டப்பிங் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதோடு தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து தலைவர் 170 படத்திற்காகவும் ரஜினி தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.
ஜெய்பீம் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் தான் தலைவர் 170 படத்தை இயக்க போகிறார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் தான் இந்த பிரம்மாண்ட படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் ரஜினியுடன் மிக முக்கியமான ரோலில் பாலிவுட் டாப் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கிறாராம். இதற்கு முன் அந்த கன்னூன், ஹம் உள்ளிட்ட சில படங்களில் ரஜினியும், அமிதாப் பச்சனும் இணைந்து நடித்துள்ளனர்.
தற்போது 32 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டு பெரிய ஹீரோக்களும் இணைந்து நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இநந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த மாத இறுதியில் துவங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. ரஜினி மட்டுமல்ல, கமலும் பாலிவுட் படம் ஒன்றில் வில்லனாக நடிக்க கமிட்டாகி உள்ளார். இந்த படத்திலும் அமிதாப் பச்சன் மிக முக்கியமான ரோலில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் தமிழில் அமிதாப் பச்சனுக்கு என்று மீண்டும் ரசிகர் கூட்டம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
{{comments.comment}}