"தலைவர் 170" ... தரமான சம்பவம் இருக்கு.. 32 ஆண்டுகளுக்கு பின் இணையும் "டாப் ஸ்டார்ஸ்"!

Jun 11, 2023,10:16 AM IST

சென்னை : ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதனால் ரஜினியின் அடுத்தடுத்த படங்கள் பற்றி பல தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.


ஜெயிலர் படத்தில் தனது போர்ஷன் ஷூட்டிங்கை நிறைவு செய்து விட்ட ரஜினி, தற்போது டப்பிங் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதோடு தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து தலைவர் 170 படத்திற்காகவும் ரஜினி தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.


ஜெய்பீம் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் தான் தலைவர் 170 படத்தை இயக்க போகிறார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் தான் இந்த பிரம்மாண்ட படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் ரஜினியுடன் மிக முக்கியமான ரோலில் பாலிவுட் டாப் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கிறாராம். இதற்கு முன் அந்த கன்னூன், ஹம் உள்ளிட்ட சில படங்களில் ரஜினியும், அமிதாப் பச்சனும் இணைந்து நடித்துள்ளனர். 




தற்போது 32 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டு பெரிய ஹீரோக்களும் இணைந்து நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இநந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த மாத இறுதியில் துவங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. ரஜினி மட்டுமல்ல, கமலும் பாலிவுட் படம் ஒன்றில் வில்லனாக நடிக்க கமிட்டாகி உள்ளார். இந்த படத்திலும் அமிதாப் பச்சன் மிக முக்கியமான ரோலில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் தமிழில் அமிதாப் பச்சனுக்கு என்று மீண்டும் ரசிகர் கூட்டம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்