ஜூலை 20ல் ராஜ்யசபா கூடுகிறது.. ஆகஸ்ட் 11ம் தேதி வரை.. அனல் பறக்கும்!

Jul 02, 2023,03:27 PM IST
டெல்லி: ராஜ்யசபாவின் மழைக்காலக் கூட்டத் தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை ராஜ்யசபா செயலகம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், ராஜ்யசபாவின் மழைக்காலக் கூட்டத் தொடரை ஜூலை 20ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடத்த குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




இதுகுறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறுகையில், ஜூலை 20ம் தேதி ராஜ்யசபாவின் மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கும். இந்தக் கூட்டத் தொடரை அனைத்துக் கட்சிகளும் ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிறப்பான முறையில் கூட்டத் தொடர் நடைபெறுவதை அனைத்துக் கட்சிகளும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

23 நாட்கள் நடைபெறும் இக்கூட்டத் தொடரில் மொத்தம் 17 அமர்வுகள் இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே 28ம் தேதிதான் புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் என்பது நினைவிருக்கலாம்.

அரசுத் தரப்பு ஆக்கப்பூர்வமான முறையில் கூட்டத் தொடர் நடைபெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாலும் கூட எதிர்க்கட்சிகள் கை நிறைய பிரச்சினைகளுடன் காத்திருக்கின்றன. எனவே கூட்டத் தொடர் எந்த அளவுக்கு முழுமையாக நடைபெறும் என்பது ஜூலை 20ம் தேதிக்குப் பிறகுதான் தெரியும்.

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் வரலாறு .. ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்.. தவெகவுக்கு முதல் எம்.பி. கிடைக்க வாய்ப்பு!

news

திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்

news

ஒரு புதிய வரலாறு.. முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்த விசிக, முஸ்லீம் லீக்!

news

சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)

news

ஆஹா, உன்னைக் காண இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 8)

news

கோடை வெயில் ஆபத்தாகாமல் இருக்க வீட்டில் இந்த 10 தவறுகளை செய்துடாதீங்க

news

வைகாசி விசாகம் 2026.. முருகப் பெருமானுக்குரிய முக்கிய தினம்.. மிக மிக சிறப்பு!

news

தாயன்பு !

news

All Is Well.. சவால்களை நம்பிக்கையுடன் சந்திப்போம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்