ஜூலை 20ல் ராஜ்யசபா கூடுகிறது.. ஆகஸ்ட் 11ம் தேதி வரை.. அனல் பறக்கும்!

Jul 02, 2023,03:27 PM IST
டெல்லி: ராஜ்யசபாவின் மழைக்காலக் கூட்டத் தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை ராஜ்யசபா செயலகம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், ராஜ்யசபாவின் மழைக்காலக் கூட்டத் தொடரை ஜூலை 20ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடத்த குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




இதுகுறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறுகையில், ஜூலை 20ம் தேதி ராஜ்யசபாவின் மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கும். இந்தக் கூட்டத் தொடரை அனைத்துக் கட்சிகளும் ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிறப்பான முறையில் கூட்டத் தொடர் நடைபெறுவதை அனைத்துக் கட்சிகளும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

23 நாட்கள் நடைபெறும் இக்கூட்டத் தொடரில் மொத்தம் 17 அமர்வுகள் இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே 28ம் தேதிதான் புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் என்பது நினைவிருக்கலாம்.

அரசுத் தரப்பு ஆக்கப்பூர்வமான முறையில் கூட்டத் தொடர் நடைபெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாலும் கூட எதிர்க்கட்சிகள் கை நிறைய பிரச்சினைகளுடன் காத்திருக்கின்றன. எனவே கூட்டத் தொடர் எந்த அளவுக்கு முழுமையாக நடைபெறும் என்பது ஜூலை 20ம் தேதிக்குப் பிறகுதான் தெரியும்.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை

news

ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?

news

தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

news

மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு

news

செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!

news

ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்

news

அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு

news

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?

news

சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்