சென்னை : எந்த ஒரு காரியத்தை துவங்கினாலும் ஞான முதல்வன், முழு முதற்கடவுள் என போற்றப்படும் விநாயகப் பெருமானை வணங்கி விட்டு தான் துவங்க வேண்டும் என்பார்கள். விநாயகரை வணங்கி விட்டு துவங்கும் காரியங்களில் தடைகள் ஏற்படாது என்பதுடன், அந்த காரியம் வெற்றியில் முடியும். அப்படிப்பட்ட விநாயப் பெருமானுக்குரிய முக்கியமான விரதம் சதுர்த்தி விரதம்.

சதுர்த்தி திதிகளில் உயர்வானதாக கருதப்படுவது சங்கடஹர சதுர்த்தி. இந்த நாளில் விரதம் இருந்து கணபதியை வழிபட்டால் எப்படிப்பட்ட துன்பம் ஆனாலும் விலகும் என்பது ஐதீகம். சங்கடம் என்றால் துன்பம். ஹர என்றால் நீக்குதல் என்று பொருள். வாழ்வில் ஏற்படும் துன்பங்களை போக்கிடும் சதுர்த்தி என்பது இதற்கு பொருள்.
பிப்ரவரி மாதம் 09 ம் தேதியான இன்று சங்கடஹர சதுர்த்தி ஆகும். இந்த நாளில் காலை, மாலை இருவேளையும் வீட்டில் விளக்கேற்றி விநாயகரை வழிபட வேண்டும். அருகம்புல் சாற்றி வழிபட்டால் பிறவிப்பிணிகள் விலகும். இன்பம் பெருகும். விநாயகருக்கு உரிய மந்திரங்கள் பதிகங்களை சொல்லி அவரை வழிபட வேண்டும். நைவேத்தியமாக விநாயகருக்கு விருப்பமான கொழுக்கட்டை, அவல், பொரி ஆகியவற்றை படைத்து வழிபடலாம்.
அருகில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சென்று 11 முறை வலம் வந்து வணங்க வேண்டும். தோங்காயை சிதறு காய் விடுவது கஷ்டங்களை சிதறி ஓட வைக்கும். சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை வழிபட்டால் காரியத் தடைகள் விலகும், எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும், பண தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.
வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்... வாக்குத் திருட்டை முறியடிப்போம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருவள்ளூருக்கு ஆரஞ்சு...சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
ஒரே நாளில் 30,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய அமேசான்
தங்கம் நேற்றைய விலையை தொடர்ந்து இன்றும் குறைவு... அதுவும் சவரனுக்கு ரூ. 1,200 குறைவு!
தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் கமிஷன்...இன்று முதல் பயிற்சி ஆரம்பம்
மக்களே உஷார்...இன்று இரவு கரையை கடக்கிறது மோன்தா புயல்
திருச்செந்தூரில் நடைபெறும் சாயா அபிஷேகம் பற்றி தெரியுமா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 28, 2025... இன்று வெற்றிகள் தேடி வரும் ராசிகள்
{{comments.comment}}