சென்னை : எந்த ஒரு காரியத்தை துவங்கினாலும் ஞான முதல்வன், முழு முதற்கடவுள் என போற்றப்படும் விநாயகப் பெருமானை வணங்கி விட்டு தான் துவங்க வேண்டும் என்பார்கள். விநாயகரை வணங்கி விட்டு துவங்கும் காரியங்களில் தடைகள் ஏற்படாது என்பதுடன், அந்த காரியம் வெற்றியில் முடியும். அப்படிப்பட்ட விநாயப் பெருமானுக்குரிய முக்கியமான விரதம் சதுர்த்தி விரதம்.

சதுர்த்தி திதிகளில் உயர்வானதாக கருதப்படுவது சங்கடஹர சதுர்த்தி. இந்த நாளில் விரதம் இருந்து கணபதியை வழிபட்டால் எப்படிப்பட்ட துன்பம் ஆனாலும் விலகும் என்பது ஐதீகம். சங்கடம் என்றால் துன்பம். ஹர என்றால் நீக்குதல் என்று பொருள். வாழ்வில் ஏற்படும் துன்பங்களை போக்கிடும் சதுர்த்தி என்பது இதற்கு பொருள்.
பிப்ரவரி மாதம் 09 ம் தேதியான இன்று சங்கடஹர சதுர்த்தி ஆகும். இந்த நாளில் காலை, மாலை இருவேளையும் வீட்டில் விளக்கேற்றி விநாயகரை வழிபட வேண்டும். அருகம்புல் சாற்றி வழிபட்டால் பிறவிப்பிணிகள் விலகும். இன்பம் பெருகும். விநாயகருக்கு உரிய மந்திரங்கள் பதிகங்களை சொல்லி அவரை வழிபட வேண்டும். நைவேத்தியமாக விநாயகருக்கு விருப்பமான கொழுக்கட்டை, அவல், பொரி ஆகியவற்றை படைத்து வழிபடலாம்.
அருகில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சென்று 11 முறை வலம் வந்து வணங்க வேண்டும். தோங்காயை சிதறு காய் விடுவது கஷ்டங்களை சிதறி ஓட வைக்கும். சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை வழிபட்டால் காரியத் தடைகள் விலகும், எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும், பண தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.
TVK Cabinet: தவெக அமைச்சரவையில்.. எத்தனை அமைச்சர்கள்.. யார் யாருக்கு எந்தத் துறை?
CM Vijay Swearing in: முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்.. அமைச்சர்களும் பதவியேற்பார்கள்
கிடைத்தது பெரும்பான்மை.. விஜய் ஆட்சி அமைக்க சிக்கல் நீங்கியது.. அடுத்து என்ன நடக்கும்?
தவெகவிடம் நாங்கள் பதவிகளைக் கோரவில்லை.. விடுதலைச் சிறுத்தைகள் விளக்கம்
DMK: தோல்வி கண்டு தொய்வடைய மாட்டோம்.... அன்று கருணாநிதி சொன்னது!
மக்கள் தீர்ப்பு மிகத் தெளிவாக உள்ளது.. ஆளுநர் ஜனநாயகத்தைப் புறக்கணிக்கிறார்.. சிபிஎம்
சிந்தனைச் சிதறல்.. நாளைய நிலையை உணராமல் கொடுக்கும் அனைத்தும் நம்மையே கெடுக்கும்!
தவெக ஆட்சி அமைக்க விசிக நிபந்தனையற்ற ஆதரவு?.. ஆனா ஒரு ட்விஸ்ட்!
தாலியை கையில் வைத்துக் கொண்டு.. இது வேண்டாம் விஜய்.. கஸ்தூரி அட்வைஸ்
{{comments.comment}}