சென்னை : எந்த ஒரு காரியத்தை துவங்கினாலும் ஞான முதல்வன், முழு முதற்கடவுள் என போற்றப்படும் விநாயகப் பெருமானை வணங்கி விட்டு தான் துவங்க வேண்டும் என்பார்கள். விநாயகரை வணங்கி விட்டு துவங்கும் காரியங்களில் தடைகள் ஏற்படாது என்பதுடன், அந்த காரியம் வெற்றியில் முடியும். அப்படிப்பட்ட விநாயப் பெருமானுக்குரிய முக்கியமான விரதம் சதுர்த்தி விரதம்.

சதுர்த்தி திதிகளில் உயர்வானதாக கருதப்படுவது சங்கடஹர சதுர்த்தி. இந்த நாளில் விரதம் இருந்து கணபதியை வழிபட்டால் எப்படிப்பட்ட துன்பம் ஆனாலும் விலகும் என்பது ஐதீகம். சங்கடம் என்றால் துன்பம். ஹர என்றால் நீக்குதல் என்று பொருள். வாழ்வில் ஏற்படும் துன்பங்களை போக்கிடும் சதுர்த்தி என்பது இதற்கு பொருள்.
பிப்ரவரி மாதம் 09 ம் தேதியான இன்று சங்கடஹர சதுர்த்தி ஆகும். இந்த நாளில் காலை, மாலை இருவேளையும் வீட்டில் விளக்கேற்றி விநாயகரை வழிபட வேண்டும். அருகம்புல் சாற்றி வழிபட்டால் பிறவிப்பிணிகள் விலகும். இன்பம் பெருகும். விநாயகருக்கு உரிய மந்திரங்கள் பதிகங்களை சொல்லி அவரை வழிபட வேண்டும். நைவேத்தியமாக விநாயகருக்கு விருப்பமான கொழுக்கட்டை, அவல், பொரி ஆகியவற்றை படைத்து வழிபடலாம்.
அருகில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சென்று 11 முறை வலம் வந்து வணங்க வேண்டும். தோங்காயை சிதறு காய் விடுவது கஷ்டங்களை சிதறி ஓட வைக்கும். சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை வழிபட்டால் காரியத் தடைகள் விலகும், எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும், பண தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.
2021 சட்டசபைத் தேர்தலில் யார் யார் எத்தனை இடங்களில் போட்டி.. 2026ல் என்ன நிலைமை?
தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவுக்கு கமல்ஹாசன் தள்ளப்பட்டுள்ளார்.. திருமாவளவன்
அதிமுக 169 இடங்களில் போட்டி...கூட்டணி கட்சிகள் போட்டியிடும் 65 தொகுதிகள் விபரம்
கோவை வடக்கு அண்ணாமலையா.. கோவை தெற்கிலிருந்து திருப்பூருக்கு மாறுகிறாரா வானதி?
தளி முதல் ராசிபுரம் தனி வரை.. பாஜக போட்டியிடப் போகும் தொகுதிகள் இவைதான்.. Full list
ADMK candidates: 23 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடியில் மீண்டும் பழனிச்சாமி போட்டி!
பேளூர் தான் தோன்றீஸ்வரர் கோவில் திருக்குடமுழக்கு விழா
நீங்க ஏன் எப்போதும் தனியா இருக்கிறீங்க?.. (மனிதம் மலர்கையில் - 7)
UPI PIN மறந்து போச்சா? கவலை வேண்டாம்...ஈஸியா பணம் அனுப்ப வழி இருக்கு
{{comments.comment}}