சென்னை : எந்த ஒரு காரியத்தை துவங்கினாலும் ஞான முதல்வன், முழு முதற்கடவுள் என போற்றப்படும் விநாயகப் பெருமானை வணங்கி விட்டு தான் துவங்க வேண்டும் என்பார்கள். விநாயகரை வணங்கி விட்டு துவங்கும் காரியங்களில் தடைகள் ஏற்படாது என்பதுடன், அந்த காரியம் வெற்றியில் முடியும். அப்படிப்பட்ட விநாயப் பெருமானுக்குரிய முக்கியமான விரதம் சதுர்த்தி விரதம்.
சதுர்த்தி திதிகளில் உயர்வானதாக கருதப்படுவது சங்கடஹர சதுர்த்தி. இந்த நாளில் விரதம் இருந்து கணபதியை வழிபட்டால் எப்படிப்பட்ட துன்பம் ஆனாலும் விலகும் என்பது ஐதீகம். சங்கடம் என்றால் துன்பம். ஹர என்றால் நீக்குதல் என்று பொருள். வாழ்வில் ஏற்படும் துன்பங்களை போக்கிடும் சதுர்த்தி என்பது இதற்கு பொருள்.
பிப்ரவரி மாதம் 09 ம் தேதியான இன்று சங்கடஹர சதுர்த்தி ஆகும். இந்த நாளில் காலை, மாலை இருவேளையும் வீட்டில் விளக்கேற்றி விநாயகரை வழிபட வேண்டும். அருகம்புல் சாற்றி வழிபட்டால் பிறவிப்பிணிகள் விலகும். இன்பம் பெருகும். விநாயகருக்கு உரிய மந்திரங்கள் பதிகங்களை சொல்லி அவரை வழிபட வேண்டும். நைவேத்தியமாக விநாயகருக்கு விருப்பமான கொழுக்கட்டை, அவல், பொரி ஆகியவற்றை படைத்து வழிபடலாம்.
அருகில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சென்று 11 முறை வலம் வந்து வணங்க வேண்டும். தோங்காயை சிதறு காய் விடுவது கஷ்டங்களை சிதறி ஓட வைக்கும். சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை வழிபட்டால் காரியத் தடைகள் விலகும், எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும், பண தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!
அட்சய திருதியை முன்னிட்டு.. தங்கத்தின் விலை தொடர் சரிவு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
Swearing in: அமைச்சராக இன்று மாலை பதவி ஏற்கிறார்.. மனோ தங்கராஜ்
ஜனாதிபதி கையால் பத்மபூஷன் விருதை பெற.. குடும்பத்துடன் டெல்லிக்கு கிளம்பினார்.. நடிகர் அஜித்!
Cabinet Reshuffle: பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்.. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்!
அமைச்சர்கள் நீக்கம்.. தானாக எடுத்தது அல்ல.. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது.. டாக்டர் தமிழிசை
IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!
துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!
பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது
{{comments.comment}}