சென்னை : ட்விட்டரில் தனது கணக்கு முடக்கப்பட்டதை அடுத்து, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ட்விட்டரில் புதிய கணக்கு ஒன்றை துவக்கி உள்ளார். அது மட்டுமல்ல, கணக்கை துவங்கிய கையோடு ட்விட்டர் நிறுவன தலைவர் எலான் மாஸ்க்கை பின்தொடர்ந்து அவரையே கலாய்த்துள்ளார்.
நாம் தமிழர் சீமான், மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 20 பேரின் ட்விட்டர் கணக்குகளை தற்காலிகமாக முடக்கி உள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்திருந்தது. இதற்கு யார் காரணம் என்ற விவாதம் சூடாக ஓடிக் கொண்டிருக்கிறது.
சீமான் கணக்கு முடக்கத்திற்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த முடக்கத்தை நீக்கவும் அவர் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில் இன்று ட்விட்டரில் புது கணக்கை துவங்கிய சீமான், கணக்கை துவங்கிய கையோடு ட்விட்டர் தலைவர் எலான் மஸ்க்கை பின்தொடர்ந்துள்ளார். வேறு யாரையும் அவர் பாலோ செய்யவில்லை. அதோடு முதல் ட்வீட்டாக, தனக்கு ஆதரவாக கண்டன குரல் எழுப்பிய ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அதில், புதிய நாடாளுமன்றத்தை செங்கோல் நாட்டி திறந்து வைத்து விட்டு, ஆட்சியின் கொடுமைகளை எதிர்த்து எழுதும் எழுதுகோல்களை முறித்து, குரல் வளையை நெறிக்கும் இந்திய ஒன்றியத்தை ஆளும் மோடி அரசின் கொடுங்கொன்மைச் செயல் வெட்கக்கேடானதாகும்.
கருத்தினைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்று, எங்களது கீச்சகத்ததை முடக்கி கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் அடக்குமுறையைக் கண்டித்து தனது வலிமையான கருத்தைப் பதிவு செய்து, துணைநிற்கும் மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மிக்க நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
டொனால்ட் டிரம்ப் அதிபரான பிறகு.. அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு!
ஆடிப் பெருக்கு சரி.. அந்த 18ம் எண்ணுக்கு எவ்வளவு விசேஷங்கள் இருக்கு தெரியுமா?
ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்.. காவிரிக் கரைகளில் விழாக்கோலம்.. தாலி மாற்றி பெண்கள் மகிழ்ச்சி!
விஜய்யின் காஸ்ட்லி மிஸ்.. ஓபிஎஸ்ஸை தவற விட்டது எப்படி?.. திமுகவின் மின்னல் வேக ஸ்கெட்ச்!
காமெடி நடிகர் மதன்பாப் மரணம்.. புற்றுநோயால் உயிர் பிரிந்தது.. திரையுலகினர் அஞ்சலி
இந்தியப் பொருளாதாரம் எப்படி இருக்கு.. டிரம்ப்புக்கு நோஸ் கட் கொடுத்த .. அமெரிக்க ஏஐ தளங்கள்!
11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!
எத்தனைப் பேரின் உயிரை திமுக அரசு பறிக்கப் போகிறது என்று தெரியவில்லை: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
தந்தையை உளவு பார்த்த மகன்: டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது குற்றச்சாட்டு வைத்த டாக்டர் ராமதாஸ்!
{{comments.comment}}