செந்தில் பாலாஜி விவகாரம்: பிடியை இறுக்குகிறது மத்திய குற்றப்பிரிவு போலீஸ்

Jul 03, 2023,02:25 PM IST
சென்னை : அமலாக்கத்துறையை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் செந்தில் பாலாஜி விவகாரத்தில் வேகம் காட்டி வருகின்றனர். அடுத்தடுத்த சம்மன்களால் தமிழக அரசியல் களமே பரபரப்பாகி உள்ளது.

செந்தில் பாலாஜி, அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த போது வேலை வாங்கி தருவதாக பலரிடமும் பணம் வாங்கி மோசடி செய்ததாக பல ஆண்டுகளுக்கு முன் குற்றம்சாட்டப்பட்டது. இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு சமீபத்தில் நடவடிக்கையை துவக்கிய அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜியின் உறுவினர்கள், நண்பர்கள் வீடுகளைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.



இறுதியாக செந்தில் பாலாஜியை விசாரணைக்காக கைது செய்து அழைத்து செல்லும் சமயத்தில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகிறார். இதற்கிடையில் அவரது அமைச்சர் பதவி தொடர்பாக விவகாரம் தமிழக அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.

மற்றொரு புறம் செந்தில் பாலாஜியின் ஜாமின் மீதான விசாரணை, அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய உத்தரவை திரும்பப் பெற்ற கவர்னரின் உத்தரவிற்கு எதிரான மனு என பல மனுக்கள் சென்னை ஐகோர்ட்டில் விசாரைணக்கு தயாராக உள்ளன. இதற்கிடையில்மத��தியகுற்றப்பிரிவு போலீசாரும் தற்போது செந்தில் பாலாஜி விவகாரத்தில் களத்தில் இறங்கி உள்ளதால் அடுத்து என்ன நடக்குமோ என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி வழக்கு விசாரைணயை விரைபடுத்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் பணியாற்றிய 1500 ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 300 போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

2015 ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஊழியர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்தவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.  அமலாக்கத்துறையுடன், மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையும் இணைந்துள்ளதால் செந்தில் பாலாஜிக்கு எதிராக பிடி இறுகி வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் இடத்துக்கு நிச்சயமாக உதயநிதி வருவார்: துரைமுருகன் புகழாரம்!

news

இளைஞர்களை ரவுடிகளாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி...பிரதமர் கடும் குற்றச்சாட்டு

news

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் ஆரம்பம்

news

ஒரே சூரியன் .. ஒரே சந்திரன்.. ஒரே திமுக... பாட்ஷா ஸ்டைலில் அதிரடி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மனித நேயமும் மாற்றுத்திறனாளிகளும்.. தன்னம்பிக்கையும், தைரியமும் அவர்களை வழி நடத்தும்!

news

வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விலை நிலவரம்!

news

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து.. வெளியேறுகிறாரா சஞ்சு சாம்சன்.. சிஎஸ்கேவுக்கு வருவாரா?

news

தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!

news

தாத்தா (கவிதை)

அதிகம் பார்க்கும் செய்திகள்