செந்தில் பாலாஜி விவகாரம்: பிடியை இறுக்குகிறது மத்திய குற்றப்பிரிவு போலீஸ்

Jul 03, 2023,02:25 PM IST
சென்னை : அமலாக்கத்துறையை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் செந்தில் பாலாஜி விவகாரத்தில் வேகம் காட்டி வருகின்றனர். அடுத்தடுத்த சம்மன்களால் தமிழக அரசியல் களமே பரபரப்பாகி உள்ளது.

செந்தில் பாலாஜி, அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த போது வேலை வாங்கி தருவதாக பலரிடமும் பணம் வாங்கி மோசடி செய்ததாக பல ஆண்டுகளுக்கு முன் குற்றம்சாட்டப்பட்டது. இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு சமீபத்தில் நடவடிக்கையை துவக்கிய அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜியின் உறுவினர்கள், நண்பர்கள் வீடுகளைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.



இறுதியாக செந்தில் பாலாஜியை விசாரணைக்காக கைது செய்து அழைத்து செல்லும் சமயத்தில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகிறார். இதற்கிடையில் அவரது அமைச்சர் பதவி தொடர்பாக விவகாரம் தமிழக அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.

மற்றொரு புறம் செந்தில் பாலாஜியின் ஜாமின் மீதான விசாரணை, அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய உத்தரவை திரும்பப் பெற்ற கவர்னரின் உத்தரவிற்கு எதிரான மனு என பல மனுக்கள் சென்னை ஐகோர்ட்டில் விசாரைணக்கு தயாராக உள்ளன. இதற்கிடையில்மத��தியகுற்றப்பிரிவு போலீசாரும் தற்போது செந்தில் பாலாஜி விவகாரத்தில் களத்தில் இறங்கி உள்ளதால் அடுத்து என்ன நடக்குமோ என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி வழக்கு விசாரைணயை விரைபடுத்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் பணியாற்றிய 1500 ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 300 போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

2015 ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஊழியர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்தவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.  அமலாக்கத்துறையுடன், மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையும் இணைந்துள்ளதால் செந்தில் பாலாஜிக்கு எதிராக பிடி இறுகி வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து விதமான தாக்குதல்களும் நிறுத்தப்பட்டன - இந்தியா அறிவிப்பு

news

தாக்குதலை உடனடியாக நிறுத்த இந்தியா, பாகிஸ்தான் ஒப்புதல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

news

இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பேரணி.. ஆளுநர் பாராட்டு!

news

எனது வருவாயை தேசிய பாதுகாப்பிற்காக அளிக்கிறேன்...இளையராஜா அறிவிப்பு

news

அமேசானில் ரூபாய் 3 லட்சத்துக்கு பில்.. எதற்கு தெரியுமா?.. இந்த பயலை வச்சுக்கிட்டு!!

news

முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டம்

news

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில்.. காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு.. பீதியில் உறைந்த மக்கள்‌‌..!

news

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இவரா?...செம சம்பவம் காத்திருக்கு போலவே

news

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்...aicwa அறிவுறுத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்