ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை... அதிரடி தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்!

May 18, 2023,12:09 PM IST

டில்லி : ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு தடையில்லை. அது கலாச்சாரத்தின் ஒரு பகுதி என அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது சுப்ரீம் கோர்ட். இதனால் இனி தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நிரந்தரமாகியுள்ளது.


சுப்ரீம் கோர்ட்டின் இந்த அதிரடித் தீர்ப்பிற்கு ஜல்லிக்கட்டு அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.


ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எதிராகவும், ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு எதிராகவும் பீட்டா உள்ளிட்ட விலங்குகள் நல வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தன. இந்த வழக்குகளை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட், விலங்குகள் நல அமைப்புக்கள் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்ததுடன், ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என தீர்ப்பு வழங்கி உள்ளன.


ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது. இதில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் ஒருமித்த தீர்ப்பினை வழங்கி உள்ளது. அதில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தடையில்லை. ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும். ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழக அரசின் சட்டம் அரசியலைப்பு சட்டத்திற்கு முரணானது கிடையாது என்று சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. 


மேலும், ஜல்லிக்கட்டு போட்டிகளை பண்பாட்டின் ஒரு பகுதியாக அறிவித்த பிறகு அதில் கோர்ட் தலையிட முடியாது. ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் சட்டத்தை இயக்க தமிழக அரசுக்கு உரிமை உள்ளது என்றும் சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் கருத்து தெரிவித்துள்ளது.


கடந்த ஓபிஎஸ் ஆட்சிக்காலத்தில் ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. இதை எதிர்த்து சென்னையில் பெரும் புரட்சி வெடித்தது. இளைஞர்கள் லட்சக்கணக்கில் திரண்டு மெரீனா கடற்கரையில் போராட்டத்தில் குதித்தனர். உலகம் முழுவதும் இது பேசு பொருளானது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அவசரச் சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது. அதன் பின்னர் அந்த சட்டத்தையொட்டி தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. தற்போதைய உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து இனி தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நிரந்தரமாக நடத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்