மே 19 ல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரிசல்ட்

May 15, 2023,05:01 PM IST
சென்னை : தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் 19 ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 06 ம் தேதி துவங்கி 20 ம் தேதி வரை நடைபெற்றன. சுமார் 16 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வினை எழுதினர். பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 24 ம் தேதி துவங்கி மே 03 ம் தேதி வரை நடைபெற்றன.



மே 17 ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரிசல்ட் வெளியிடப்படும் என அறிக்கப்பட்டிருந்தது. பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெற்ற அதே தேதியிலேயே 11 ம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் நடத்தப்பட்டன. இந்த விடைத்தாள்கள் திருத்தும் பணியும் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வந்தது.  மே 17 ம் தேதி ரிசல்ட் வெளியிடப்படும் என மாணவர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், திடீரென பத்தாம் வகுப்பு ரிசல்ட் தேதி தள்ளி போவதாக தெரிவிக்கப்பட்டது.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என தெரியாமல் மாணவர்களும், பெற்றோர்களும் குழம்பி இருந்த நிலையில் மே 17 ம் தேதி காலை 10 மணிக்கு ரிசல்ட் வெளியிடப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது. அதே நாளில் பகல் 2 மணிக்கு 11 ம் வகுப்பு பொதுத் தேர்வு ரிசல்ட்டும் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை

news

ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?

news

தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

news

மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு

news

செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!

news

ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்

news

அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு

news

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?

news

சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்