மே 19 ல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரிசல்ட்

May 15, 2023,05:01 PM IST
சென்னை : தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் 19 ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 06 ம் தேதி துவங்கி 20 ம் தேதி வரை நடைபெற்றன. சுமார் 16 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வினை எழுதினர். பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 24 ம் தேதி துவங்கி மே 03 ம் தேதி வரை நடைபெற்றன.



மே 17 ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரிசல்ட் வெளியிடப்படும் என அறிக்கப்பட்டிருந்தது. பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெற்ற அதே தேதியிலேயே 11 ம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் நடத்தப்பட்டன. இந்த விடைத்தாள்கள் திருத்தும் பணியும் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வந்தது.  மே 17 ம் தேதி ரிசல்ட் வெளியிடப்படும் என மாணவர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், திடீரென பத்தாம் வகுப்பு ரிசல்ட் தேதி தள்ளி போவதாக தெரிவிக்கப்பட்டது.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என தெரியாமல் மாணவர்களும், பெற்றோர்களும் குழம்பி இருந்த நிலையில் மே 17 ம் தேதி காலை 10 மணிக்கு ரிசல்ட் வெளியிடப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது. அதே நாளில் பகல் 2 மணிக்கு 11 ம் வகுப்பு பொதுத் தேர்வு ரிசல்ட்டும் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

புதுச்சேரி, அசாம், கேரளா சட்டசபை தேர்தல் 2026: இன்றுடன் பிரச்சாரம் ஓய்கிறது

news

சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்கப் மரண வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை

news

தமிழக சட்டசபைத் தேர்தல் 2026 : வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.. நாளை மனுக்கள் பரிசீலனை

news

இது GenZ காலம்.. திருமணங்களுக்கு முற்றுப்புள்ளியா?

news

ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதல்

news

Mayiladuthurai Kitchen: மைக்ரோவேவ் இல்லாமல் ரவா கேக்கா?.. ஆமாங்க ஆமா!

news

கோவில் மணி.. Temple bell.. அடிப்பதால் என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?

news

சொல்லாமலே புரியும் அன்னை வீடு… சொல்லியும் புரியாத புகுந்த வீடு!

news

Monday Motivation: புதையுண்டு காத்திருந்தேன்.. பல்லூழிக்காலமாய்.. காலம் உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்