10ம் வகுப்பு ரிசல்ட் வெளியீடு : 91.39 % பேர் பாஸ்.. மாணவிகளே பர்ஸ்ட்!

May 19, 2023,10:52 AM IST
சென்னை : தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை தமிழக பள்ளிக்ல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது. இதில் 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 6 ம் தேதி துவங்கி, ஏப்ரல் 20 ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வினை சுமார் 9.40 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதே போல் மார்ச் 13 ம் தேதி துவங்கி, ஏப்ரல் 5 ம் தேதி வரை 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் நடைபெற்றன. இந்த இரண்டு தேர்வுகளின் முடிவுகளும் ஒரே நாளில், அதாவது மே 19 ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.



இன்று காலை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டார். இதில் 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 94.66 சதவீதம் பேரும், மாணவர்கள் 88.16 சதவீதம் பேரும் தேர்வு பெற்றுள்ளனர். 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில்  97.67 சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. 97.53 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் சிவகங்கை மாவட்டம் இரண்டாவது இடத்தையும், 96.22 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் 3வது இடத்தையும் பிடித்துள்ளன. 

தமிழ்ப் பாடத்தில் ஒருவர் கூட நூற்றுக்கு நூறு வாங்கவில்லை.ஆனால் பிளஸ்டூ தேர்வில் 2 பேர் நூற்றுக்கு நூறு வாங்கியிருந்தனர் என்பது நினைவிருக்கலாம். 

11 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணியளவில் வெளியிடப்பட உள்ளதாக தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிய: http://www.tnresults.nic.in/tptsxrs.htm

சமீபத்திய செய்திகள்

news

Cabinet Reshuffle: பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்.. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்!

news

அமைச்சர்கள் நீக்கம்.. தானாக எடுத்தது அல்ல.. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது.. டாக்டர் தமிழிசை

news

IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!

news

துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!

news

பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது

news

விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு.. முதல் முறையாக.. தேமுதிக பொதுக்குழு கூட்டம்.. 30ம் தேதி!

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்