ஏப்பா தம்பி.. அந்த ஃபேனை 15ல வய்யி.. நைட்டெல்லாம் தூங்க முடியலை..!

Jun 16, 2023,10:07 AM IST
சென்னை: சென்னையிலும் அக்கம் பக்கத்து மாவட்டங்களிலும் வெயில் மீண்டும் களை கட்ட ஆரம்பித்து விட்டது. இரவில் புழுக்கம் அதிகரித்திருப்பதால் மக்களால் நிம்மதியாக தூங்க முடியாத நிலை  நிலவுகிறது.

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் முடிந்து விட்டது. தென் மேற்குப் பருவ மழை கேரளாவில் தொடங்கி விட்டது. அரபிக் கடலில் இந்த சீசனில் முதல் புயல் உருவாகி, மெகா புயலாக மாறி அது கரையையும் கடந்து விட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டின் பல ஊர்களிலும் வெயில் மீண்டும் வேலையை காட்ட ஆரம்பித்துள்ளது.



பகலில் கடும் வெப்பம் நிலவும் நிலையில் இரவில் புழுக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் ஏசி இல்லாமல் தூங்கவே முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. அதை விட மோசம், பேனை போடக் கூட முடியவில்லை. போட்டால் அனல் காற்றுதான் வருகிறது. நிம்மதியாக தூங்க முடியாமல் வியர்வைக் குளியலில் மக்கள் அவஸ்தைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்னும் 2 நாட்களுக்கு அனல் அதிகமாக இருக்கும் என்று தமிழ்நாடுவெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள டிவீட்டில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று வெயில் 41 முதல் 42 டிகிரி வரை உயரக் கூடும்.  குறிப்பாக 11 மணி முதல் 3 மணி வரை வெளியில் போகாமல் இருப்பது மிகவும் நல்லது. தேவைப்பட்டால் மட்டும் போங்க.

இன்னும் 2 நாட்களுக்கு இந்த நிலை நீடிக்கும். ஞாயிற்றுக்கிழமை முதல் நிறைய மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று கூறியுள்ளார்.

ஸோ, எப்படியாவது பல்லைக் கடித்துக் கொண்டு 2 நாட்களை ஓட்டி விட்டால் பிறகு மழை வந்து நம்மை நனைத்து கொஞ்சம் அனலைக் குறைக்கும்.. பார்க்கலாம்.

ஏப்பா தம்பி.. அந்த ஃபேனை 15ல வய்யி!

சமீபத்திய செய்திகள்

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

news

மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?

news

விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!

news

அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!

news

அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்