45 வயதை கடந்தும் திருமணம் ஆகாதவர்களுக்கு பென்சன்.. ஹரியானா சூப்பர்!

Jul 08, 2023,09:47 AM IST
சண்டிகர் : 45 வயது முதல் 60 வயது வரையிலான திருமணம் ஆகாதவர்களுக்கு மாதம் தோறும் பென்சன் வழங்கப்படும் என ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ஜூலை 6 ம் தேதிக்கு பிறகு திருமணம் ஆகாமல் இருக்கும் 45 வயது முதல் 60 வயது வரையிலானவர்களுக்கு மாதந்தோறும் ரூ.2750 பென்சனாக வழங்கப்படும். 60 வயதை கடந்த பிறகு பயனாளர்கள் தானாகவே முதியோர் பென்சன் பெற தகுதி பெற்று விடுவார்கள் என்றும் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.



ரூ.1.8 லட்சத்திற்கும் குறைவான வருமானம் பெறும் திருமணம் ஆகாத 45 வயது முதல் 60 வயது வரையிலானவர்களே மாத பென்சன் பெற தகுதியானவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பல காலமாக பலரின் பிரதான கோரிக்கையாக இருந்து வந்ததால் தற்போது அது அமல்படுத்தப்படுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். திருமணமாகி கணவனையோ அல்லது மனைவியையோ இழந்தவர்களும் இந்த மாத பென்சன் பெற தகுதியானவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

திருமணமாகாத 45 வயதை கடந்தவர்களுக்கு பென்சன் வழங்கும் திட்டம் முதல் முறையாக அரியானாவில் அமல்படுத்தப்பட்டுள்ளதால் விரைவில் மற்ற மாநிலங்களிலும் இது போன்ற திட்டங்கள் மாநில அரசால் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை

news

ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?

news

தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

news

மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு

news

செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!

news

ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்

news

அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு

news

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?

news

சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்