45 வயதை கடந்தும் திருமணம் ஆகாதவர்களுக்கு பென்சன்.. ஹரியானா சூப்பர்!

Jul 08, 2023,09:47 AM IST
சண்டிகர் : 45 வயது முதல் 60 வயது வரையிலான திருமணம் ஆகாதவர்களுக்கு மாதம் தோறும் பென்சன் வழங்கப்படும் என ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ஜூலை 6 ம் தேதிக்கு பிறகு திருமணம் ஆகாமல் இருக்கும் 45 வயது முதல் 60 வயது வரையிலானவர்களுக்கு மாதந்தோறும் ரூ.2750 பென்சனாக வழங்கப்படும். 60 வயதை கடந்த பிறகு பயனாளர்கள் தானாகவே முதியோர் பென்சன் பெற தகுதி பெற்று விடுவார்கள் என்றும் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.



ரூ.1.8 லட்சத்திற்கும் குறைவான வருமானம் பெறும் திருமணம் ஆகாத 45 வயது முதல் 60 வயது வரையிலானவர்களே மாத பென்சன் பெற தகுதியானவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பல காலமாக பலரின் பிரதான கோரிக்கையாக இருந்து வந்ததால் தற்போது அது அமல்படுத்தப்படுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். திருமணமாகி கணவனையோ அல்லது மனைவியையோ இழந்தவர்களும் இந்த மாத பென்சன் பெற தகுதியானவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

திருமணமாகாத 45 வயதை கடந்தவர்களுக்கு பென்சன் வழங்கும் திட்டம் முதல் முறையாக அரியானாவில் அமல்படுத்தப்பட்டுள்ளதால் விரைவில் மற்ற மாநிலங்களிலும் இது போன்ற திட்டங்கள் மாநில அரசால் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா.. மறக்க முடியாத செளகார் ஜானகி.. பின்னி எடுத்த வேடங்கள்..!

news

"திமுக எம்எல்ஏ.,க்களுக்கு கார் வேண்டாம்!" – சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

news

ஃபைலை திறக்க ஜோசியக்காரர் சொல்லணுமா? உதயநிதி காரசார பேச்சு

news

எம்எல்ஏ.,க்களுக்கு கார் கொடுப்பது ஏன்? அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்

news

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்

news

ஏ டி எம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி? நேரில் செயல் விளக்கம் பெற்ற மாணவர்கள்!

news

டெல்லியில் டிஜிபி அலுவலகம் முன்பு ராகுல் காந்தி திடீர் தர்ணா போராட்டம்

news

Varalakshmi Nonbu: வரலட்சுமி பூஜை ஏன் செய்யப்படுகிறது?

news

சிந்தனைச் சிதறல்: எந்த ஒன்றையும் உதாசீனப்படுத்தி விடாதீர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்