வந்தேபாரத் உள்ளிட்ட ரயில்களில் ஏசி சேர் கார் பயணக் கட்டணம் 25% குறைப்பு

Jul 08, 2023,03:02 PM IST
டெல்லி: வந்தேபாரத் உள்ளிட்ட ரயில்களில் ஏசி சேர் கார் பெட்டிகளில் பயணிப்பதற்கான பயணக் கட்டணத்தில் 25 சதவீத குறைப்பை அறிவித்துள்ளது ரயில்வே அமைச்சகம்.

பயணிகள் அதிகம் வராத ரயில்களில் பயணக் கட்டணத்தைக் குறைக்கலாம் ரயில்வே வாரியம் பரிந்துரைத்திருந்தது. குறிப்பாக வந்தேபாரத் ரயில்களில் பயணிகள் வரத்து அதிகமாக இல்லாத வழிகளில் பயணக்கட்டணத்தைக் குறைக்கவும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த கட்டணக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.



ஏசி சேர் கார், எக்சிகியூட்டிவ் வகுப்புகளில் 25 சதவீத பயணக் கட்டணம் குறைக்கப்படும். இது வந்தே பாரத், சதாப்தி உள்ளிட்ட அனைத்து ரயில்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி அடிப்படை டிக்கெட் கட்டணத்தில் 25 சதவீதம் குறையும்.  அதேசமயம், ரிசர்வேசன் கட்டணம், சூப்பர் பாஸ்ட் துணை கட்டணம், ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றில் மாற்றம் இல்லை. அது அப்படியேதான் தொடரும். 

கடந்த ஒரு மாத காலத்தில் எந்தெந்த ரயில்களில் எல்லாம் பயணிகள் வருகை  50 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கிறதோ அந்த ரயில்களில் இந்தக் கட்டணக் குறைப்பு அமல்படுத்தப்படும்.  இந்தக் கட்டணக் குறைப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது.  அதேசமயம், ஏற்கனவே டிக்கெட் புக் செய்தவர்களுக்கு குறைக்கப்பட்ட கட்டணம் திருப்பித் தரப்பட மாட்டாதாம்.

சமீபத்திய செய்திகள்

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் காலமானார்

news

தோசையம்மா தோசை.. ஹெல்த்தியான தோசை.. சுட்டுச் சுட்டுச் சாப்பிடுங்க.. சூப்பராக வாழுங்க!

news

அரங்கன் யாவுமே அறிந்தவனே!

news

அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது: ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி, முதல்வர் வாழ்த்து

news

தங்கம் விலையில் அதிரடி... இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு... புதிய உச்சத்தில் வெள்ளி விலை!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD

அதிகம் பார்க்கும் செய்திகள்