வந்தேபாரத் உள்ளிட்ட ரயில்களில் ஏசி சேர் கார் பயணக் கட்டணம் 25% குறைப்பு

Jul 08, 2023,03:02 PM IST
டெல்லி: வந்தேபாரத் உள்ளிட்ட ரயில்களில் ஏசி சேர் கார் பெட்டிகளில் பயணிப்பதற்கான பயணக் கட்டணத்தில் 25 சதவீத குறைப்பை அறிவித்துள்ளது ரயில்வே அமைச்சகம்.

பயணிகள் அதிகம் வராத ரயில்களில் பயணக் கட்டணத்தைக் குறைக்கலாம் ரயில்வே வாரியம் பரிந்துரைத்திருந்தது. குறிப்பாக வந்தேபாரத் ரயில்களில் பயணிகள் வரத்து அதிகமாக இல்லாத வழிகளில் பயணக்கட்டணத்தைக் குறைக்கவும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த கட்டணக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.



ஏசி சேர் கார், எக்சிகியூட்டிவ் வகுப்புகளில் 25 சதவீத பயணக் கட்டணம் குறைக்கப்படும். இது வந்தே பாரத், சதாப்தி உள்ளிட்ட அனைத்து ரயில்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி அடிப்படை டிக்கெட் கட்டணத்தில் 25 சதவீதம் குறையும்.  அதேசமயம், ரிசர்வேசன் கட்டணம், சூப்பர் பாஸ்ட் துணை கட்டணம், ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றில் மாற்றம் இல்லை. அது அப்படியேதான் தொடரும். 

கடந்த ஒரு மாத காலத்தில் எந்தெந்த ரயில்களில் எல்லாம் பயணிகள் வருகை  50 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கிறதோ அந்த ரயில்களில் இந்தக் கட்டணக் குறைப்பு அமல்படுத்தப்படும்.  இந்தக் கட்டணக் குறைப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது.  அதேசமயம், ஏற்கனவே டிக்கெட் புக் செய்தவர்களுக்கு குறைக்கப்பட்ட கட்டணம் திருப்பித் தரப்பட மாட்டாதாம்.

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் வரலாறு .. ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்.. தவெகவுக்கு முதல் எம்.பி. கிடைக்க வாய்ப்பு!

news

திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்

news

ஒரு புதிய வரலாறு.. முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்த விசிக, முஸ்லீம் லீக்!

news

சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)

news

ஆஹா, உன்னைக் காண இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 8)

news

கோடை வெயில் ஆபத்தாகாமல் இருக்க வீட்டில் இந்த 10 தவறுகளை செய்துடாதீங்க

news

வைகாசி விசாகம் 2026.. முருகப் பெருமானுக்குரிய முக்கிய தினம்.. மிக மிக சிறப்பு!

news

தாயன்பு !

news

All Is Well.. சவால்களை நம்பிக்கையுடன் சந்திப்போம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்