வந்தேபாரத் உள்ளிட்ட ரயில்களில் ஏசி சேர் கார் பயணக் கட்டணம் 25% குறைப்பு

Jul 08, 2023,03:02 PM IST
டெல்லி: வந்தேபாரத் உள்ளிட்ட ரயில்களில் ஏசி சேர் கார் பெட்டிகளில் பயணிப்பதற்கான பயணக் கட்டணத்தில் 25 சதவீத குறைப்பை அறிவித்துள்ளது ரயில்வே அமைச்சகம்.

பயணிகள் அதிகம் வராத ரயில்களில் பயணக் கட்டணத்தைக் குறைக்கலாம் ரயில்வே வாரியம் பரிந்துரைத்திருந்தது. குறிப்பாக வந்தேபாரத் ரயில்களில் பயணிகள் வரத்து அதிகமாக இல்லாத வழிகளில் பயணக்கட்டணத்தைக் குறைக்கவும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த கட்டணக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.



ஏசி சேர் கார், எக்சிகியூட்டிவ் வகுப்புகளில் 25 சதவீத பயணக் கட்டணம் குறைக்கப்படும். இது வந்தே பாரத், சதாப்தி உள்ளிட்ட அனைத்து ரயில்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி அடிப்படை டிக்கெட் கட்டணத்தில் 25 சதவீதம் குறையும்.  அதேசமயம், ரிசர்வேசன் கட்டணம், சூப்பர் பாஸ்ட் துணை கட்டணம், ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றில் மாற்றம் இல்லை. அது அப்படியேதான் தொடரும். 

கடந்த ஒரு மாத காலத்தில் எந்தெந்த ரயில்களில் எல்லாம் பயணிகள் வருகை  50 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கிறதோ அந்த ரயில்களில் இந்தக் கட்டணக் குறைப்பு அமல்படுத்தப்படும்.  இந்தக் கட்டணக் குறைப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது.  அதேசமயம், ஏற்கனவே டிக்கெட் புக் செய்தவர்களுக்கு குறைக்கப்பட்ட கட்டணம் திருப்பித் தரப்பட மாட்டாதாம்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்