என்னங்க சொல்றீங்க... "எக்ஸ்" பயன்படுத்துறவங்க குறைஞ்சுட்டாங்களா?

Oct 01, 2023,01:28 PM IST

நியூயார்க் : உலகம் முழுவதிலும் எக்ஸ் தளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அந்நிறுவனத்தின் சிஇஓ ஜூலியா பூர்ஸ்டின் தெரிவித்துள்ளார்.


உலகம் முழுவதும் பேஸ்புக்கிற்கு அடுத்தபடியாக ட்விட்டர் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஒரு கட்டத்தில் ட்விட்டரில் தான் அதிகமான தகவல்களும் பகிரப்பட்டதால் பேஸ்புக்கையே முந்தி விட்டது ட்விட்டர். பல புது புது தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, பல விதங்களில் ட்விட்டரை பலரும் கையாள துவங்கினர். உலக தலைவர்கள், பிரபலங்கள், சாமானியர்கள் என அனைவரும் இதில் வந்து குவிந்தனர்.


இந்நிலையில் கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை எலன் மஸ்க் வாங்கினார். அதற்கு பிறகு இதில் பல மாற்றங்களை செய்தார். இதில் பல மாற்றங்கள் குழப்பத்தையே ஏற்படுத்தின. இருந்தாலும் பயனாளர்களுக்கு எளிதாகவும், நம்பகமானதாகவும் இருந்ததால் பலரும் ட்விட்டரில் தொடர்ந்து வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் ட்விட்டர் என்ற பெயரை எக்ஸ் என மாற்றி அறிவித்தார் எலன் மஸ்க்.




இந்நிலையில் சமீபத்தில் எக்ஸ் நிறுத்தின் சிஇஓ ஜூலியா சமீபத்தில் 45 நிமிடங்கள் நீண்ட பேட்டி ஒன்றை அளித்தார். இதில் தங்களின் நிறுவனம் பற்றி பலரும் அறியாத பல தகவல்களை அவர் தெரிவித்தார். இது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அந்த பேட்டியில் அவர் கூறுகையில், எக்ஸ் நிறுவனத்தில் தனது 12 வார பணிகள் பற்றி விளக்கினார்.

அவர் கூறுகையில், எலன் மஸ்க் பொறுப்பேற்ற பிறகு எக்ஸ் தளம் தனது தினசரி பயனாளர்களை இழந்து வருகிறது. தற்போது எக்ஸ் தளத்தின் தினசரி பயனாளர்களின் எண்ணிக்கை 225 மில்லியனாக மட்டுமே உள்ளது. கிட்டதட்ட 11.6 சதவீதம் தினசரி பயனாளர்களை, அதாவது 10 மில்லியன் பயனாளர்களை இந்நிறுவனம் இழந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை எலன் மஸ்க் வாங்கிய போது தினசரி ட்விட்டர் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 254.5 மில்லியன் ஆக இருந்தது.


சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்