"சந்திரசேகர ராவ் தெலுங்கானாவின் தாலிபன்"..  கொந்தளித்த ஷர்மிளா!

Feb 20, 2023,09:48 AM IST
ஐதராபாத் : தெலுங்கானா முதல்வர் சந்திரசேர ராவை விமர்சித்து பேட்டி அளித்த ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியின் தலைவர் ஷர்மிளா கைது செய்யப்பட்டுள்ளார்.



ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி, ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியின் தலைவராக இருக்கிறார். தெலங்கானாவில், பிஆர்எஸ் கட்சிக்கு கடும் நெருக்கடியைக் கொடுப்பதற்காக இவர் களம் இறக்கப்பட்டுள்ளார். இதனால் ஏதாவது ஒரு போராட்டத்தை அவ்வப்போது நடத்தி தலைவலி கொடுத்து வருகிறார்.



ஷர்மிளா தற்போது தெலுங்கானாவில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இவரை வரவேற்று வைக்கப்பட்ட பேனரை, முதல்வர் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சியினர் கிழித்தனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. 

இதனால் பாதயாத்திரைக்கான அனுமதியை போலீசார் ரத்து செய்தனர். ஆனாலும் அதைப் பொருட்படுத்தாமல் ஷர்மிளா தனது பாதயாத்திரையை தொடர்ந்தார். இதனால் பதட்டம் அதிகரித்தது. இந்நிலையில் மகபூபாபாத் எம்எல்ஏ சங்கர் நாயக் குறித்து ஷர்மிளா தரக்குறைவாக பேசியதாக சர்ச்சை வெடித்ததைத் தொடர்ந்து அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்படுவதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஷர்மிளா, தெலுங்கானா முதல்வர் சர்வாதிகாரியை போல் நடந்து வருகிறார். அவர் தெலுங்கானாவை இந்தியாவின் ஆப்கானிஸ்தான் ஆக்குகிறார். இங்கு சந்திரசேகர ராவ், தாலிபனாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தெலுங்கானாவில் இந்திய அரசியலமைப்பு சட்டம் கிடையாது. ராவின் அரசியலமைப்பு தான் உள்ளது என்றார்.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

news

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?

news

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்