"சந்திரசேகர ராவ் தெலுங்கானாவின் தாலிபன்"..  கொந்தளித்த ஷர்மிளா!

Feb 20, 2023,09:48 AM IST
ஐதராபாத் : தெலுங்கானா முதல்வர் சந்திரசேர ராவை விமர்சித்து பேட்டி அளித்த ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியின் தலைவர் ஷர்மிளா கைது செய்யப்பட்டுள்ளார்.



ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி, ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியின் தலைவராக இருக்கிறார். தெலங்கானாவில், பிஆர்எஸ் கட்சிக்கு கடும் நெருக்கடியைக் கொடுப்பதற்காக இவர் களம் இறக்கப்பட்டுள்ளார். இதனால் ஏதாவது ஒரு போராட்டத்தை அவ்வப்போது நடத்தி தலைவலி கொடுத்து வருகிறார்.



ஷர்மிளா தற்போது தெலுங்கானாவில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இவரை வரவேற்று வைக்கப்பட்ட பேனரை, முதல்வர் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சியினர் கிழித்தனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. 

இதனால் பாதயாத்திரைக்கான அனுமதியை போலீசார் ரத்து செய்தனர். ஆனாலும் அதைப் பொருட்படுத்தாமல் ஷர்மிளா தனது பாதயாத்திரையை தொடர்ந்தார். இதனால் பதட்டம் அதிகரித்தது. இந்நிலையில் மகபூபாபாத் எம்எல்ஏ சங்கர் நாயக் குறித்து ஷர்மிளா தரக்குறைவாக பேசியதாக சர்ச்சை வெடித்ததைத் தொடர்ந்து அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்படுவதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஷர்மிளா, தெலுங்கானா முதல்வர் சர்வாதிகாரியை போல் நடந்து வருகிறார். அவர் தெலுங்கானாவை இந்தியாவின் ஆப்கானிஸ்தான் ஆக்குகிறார். இங்கு சந்திரசேகர ராவ், தாலிபனாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தெலுங்கானாவில் இந்திய அரசியலமைப்பு சட்டம் கிடையாது. ராவின் அரசியலமைப்பு தான் உள்ளது என்றார்.

சமீபத்திய செய்திகள்

news

பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்

news

ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை

news

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்

news

கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

news

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு

news

சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்

news

நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்

news

அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்