தேனி: தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் நடத்தப்பட்ட 79-வது மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் தேனியைச் சேர்ந்த அ. ஹரிஸ் 8வது இடம் பிடித்து அசத்தினார்.
ஏப்ரல் 19ம் தேதி காலை 9.30 மணியளவில் தொடங்கிய இந்தப் போட்டியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மாணவ, மாணவிகள் மற்றும் சதுரங்க ஆர்வலர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
அகாடமி செயலாளர் ஆர். மாடசாமி தலைமையில் இந்தப் போட்டி நடைபெற்றது. தமிழக சதுரங்கக் கழக நடுவர் எஸ். சையது மதீன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தேசிய நடுவர் எஸ்.அஜ்மல்கான் போட்டிகளை முறைப்படி வழிநடத்திச் சென்றார்.
இந்த விழாவிற்குச் சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற வனச்சரகர் எஸ். அமான்முல்லா கலந்துகொண்டு, போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.

அனைவரும் பங்கேற்கும் வகையிலான திறந்த நிலை பிரிவில், என். சாய் சரவணா முதலிடத்தைப் பிடித்தார். தேனியைச் சேர்ந்த அ. ஹரிஸ் 8வது இடத்தைப் பிடித்தார்.
போட்டிகளின் இறுதியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்குக் கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் இத்தகைய போட்டிகள் தேனி மாவட்டத்தில் தொடர்ந்து நடத்தப்படும் என அகாடமி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}