தேனி: தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் நடத்தப்பட்ட 79-வது மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் தேனியைச் சேர்ந்த அ. ஹரிஸ் 8வது இடம் பிடித்து அசத்தினார்.
ஏப்ரல் 19ம் தேதி காலை 9.30 மணியளவில் தொடங்கிய இந்தப் போட்டியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மாணவ, மாணவிகள் மற்றும் சதுரங்க ஆர்வலர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
அகாடமி செயலாளர் ஆர். மாடசாமி தலைமையில் இந்தப் போட்டி நடைபெற்றது. தமிழக சதுரங்கக் கழக நடுவர் எஸ். சையது மதீன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தேசிய நடுவர் எஸ்.அஜ்மல்கான் போட்டிகளை முறைப்படி வழிநடத்திச் சென்றார்.
இந்த விழாவிற்குச் சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற வனச்சரகர் எஸ். அமான்முல்லா கலந்துகொண்டு, போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.

அனைவரும் பங்கேற்கும் வகையிலான திறந்த நிலை பிரிவில், என். சாய் சரவணா முதலிடத்தைப் பிடித்தார். தேனியைச் சேர்ந்த அ. ஹரிஸ் 8வது இடத்தைப் பிடித்தார்.
போட்டிகளின் இறுதியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்குக் கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் இத்தகைய போட்டிகள் தேனி மாவட்டத்தில் தொடர்ந்து நடத்தப்படும் என அகாடமி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}