- கவிதா அறிவழகன்
நிசப்தம் ஆளும் நிலவின் மடியில்,
இரவின் ஓசையும்,
உயிரின் ஓசையும்,
ஒன்றோடு ஒன்று
ஐக்கியமாகும் வேளையில்...
எங்கிருந்தோ வந்த நட்சத்திரக் கூட்டங்கள்,
மௌனமாக உயிருடன் கலந்து பேசத் தொடங்கின.
இமைமூடி நினைவுகள் ஆழ்ந்த வேளையில்,
இதயத்துடிப்பின் ராகமும்,
நட்சத்திரங்களின் ரகசியக் காதலும்
அழகாகச் சங்கமிக்க
ஆரம்பித்தன.

காற்றோ தன் பங்கிற்கு இணையாக,
மரங்களின் ஊடே
பாட்டிசைக்கத் தொடங்கின!
இரவின் வண்டுகளோ,
காற்றின் இசைக்கு ஏற்பத் தாளங்கள் போட்டன.
இத்தகைய இரவின் பேரமைதிக் கச்சேரியில்,
விடை தெரியா கேள்விகள் அனைத்தும்
நட்சத்திரக் கூட்டங்களின் ஒளியினில்
சுவடுகளின்றி கரைந்து போயின!
என் உயிரினுள் என்றும் கிடைக்காத
இந்த ஏகாந்த ஓசையில்
இன்று...
ததும்பி நிரம்பி வழிந்தது!
(Kavitha Arivalagan, Creative writers, Dharmapuri)
Short and Sweet Story: ஒரு 5 பைசா படுத்திய பாடு!
Everything had beauty.. ஆனால் எல்லோராலும் காண முடியாதது!
ஆடி மாதம் அம்மன் மாதம்
Short Story: கிணறு ஒரு சுகம்!
ஆடி வெள்ளி!
குமூகத்தில் விந்தையான வியப்பு
Aadi Month: ஆடி பெயர் வந்தது எப்படி?
ஒற்றைக்கால் கொலுசு
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
{{comments.comment}}