- கவிதா அறிவழகன்
நிசப்தம் ஆளும் நிலவின் மடியில்,
இரவின் ஓசையும்,
உயிரின் ஓசையும்,
ஒன்றோடு ஒன்று
ஐக்கியமாகும் வேளையில்...
எங்கிருந்தோ வந்த நட்சத்திரக் கூட்டங்கள்,
மௌனமாக உயிருடன் கலந்து பேசத் தொடங்கின.
இமைமூடி நினைவுகள் ஆழ்ந்த வேளையில்,
இதயத்துடிப்பின் ராகமும்,
நட்சத்திரங்களின் ரகசியக் காதலும்
அழகாகச் சங்கமிக்க
ஆரம்பித்தன.

காற்றோ தன் பங்கிற்கு இணையாக,
மரங்களின் ஊடே
பாட்டிசைக்கத் தொடங்கின!
இரவின் வண்டுகளோ,
காற்றின் இசைக்கு ஏற்பத் தாளங்கள் போட்டன.
இத்தகைய இரவின் பேரமைதிக் கச்சேரியில்,
விடை தெரியா கேள்விகள் அனைத்தும்
நட்சத்திரக் கூட்டங்களின் ஒளியினில்
சுவடுகளின்றி கரைந்து போயின!
என் உயிரினுள் என்றும் கிடைக்காத
இந்த ஏகாந்த ஓசையில்
இன்று...
ததும்பி நிரம்பி வழிந்தது!
(Kavitha Arivalagan, Creative writers, Dharmapuri)
செம்மொழியான தமிழ் மொழியே
தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால்!
இயற்கை நீதி!
பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்
ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை
மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்
கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு
சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்
{{comments.comment}}