- கவிதா அறிவழகன்
நிசப்தம் ஆளும் நிலவின் மடியில்,
இரவின் ஓசையும்,
உயிரின் ஓசையும்,
ஒன்றோடு ஒன்று
ஐக்கியமாகும் வேளையில்...
எங்கிருந்தோ வந்த நட்சத்திரக் கூட்டங்கள்,
மௌனமாக உயிருடன் கலந்து பேசத் தொடங்கின.
இமைமூடி நினைவுகள் ஆழ்ந்த வேளையில்,
இதயத்துடிப்பின் ராகமும்,
நட்சத்திரங்களின் ரகசியக் காதலும்
அழகாகச் சங்கமிக்க
ஆரம்பித்தன.

காற்றோ தன் பங்கிற்கு இணையாக,
மரங்களின் ஊடே
பாட்டிசைக்கத் தொடங்கின!
இரவின் வண்டுகளோ,
காற்றின் இசைக்கு ஏற்பத் தாளங்கள் போட்டன.
இத்தகைய இரவின் பேரமைதிக் கச்சேரியில்,
விடை தெரியா கேள்விகள் அனைத்தும்
நட்சத்திரக் கூட்டங்களின் ஒளியினில்
சுவடுகளின்றி கரைந்து போயின!
என் உயிரினுள் என்றும் கிடைக்காத
இந்த ஏகாந்த ஓசையில்
இன்று...
ததும்பி நிரம்பி வழிந்தது!
(Kavitha Arivalagan, Creative writers, Dharmapuri)
வசுமிதா கொடுத்த விளக்கம்.. (அஞ்சாப்பு அட்டகாசங்கள் - 2)
உயிரின் ஓசை!
ஜூன் வந்தாச்சு.. பள்ளிகள் திறக்கப் போகுது.. வேற என்னெல்லாம் இந்த மாசத்தில் இருக்கு?
ADMK to TVK: அதிமுக வினர் தவெகவில் இணைவது ஏன்? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
புதிய கட்சி துவங்குகிறாரா அண்ணாமலை?.. பாஜக தலைவரை சந்திக்க டெல்லி விரைந்தார்
Monday Thoughts: "தி.மு... தி..பி".. புதிய உறவால் உதயமாகும் பெயர் மாற்றங்கள்!
பிரேமலதா விஜயகாந்த் கேட்டிருந்தால், விஜய் துணை முதல்வர் பதவியைக் கொடுத்திருப்பாரா??
CM Vijay visits Trichy: இன்று திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்.. மக்களுக்கு நன்றி சொல்கிறார்!
அதிமுகவினரின் வேதனை போதும்.. இளைஞர்களுக்கு வழி விடுங்கள்.. ராஜ் சத்யன்
{{comments.comment}}