சென்னை: வங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று கணித்திருந்த நிலையில், தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்று அறிவித்துள்ளது .
தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஏற்கனவே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வந்தது. இதனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. தற்போது வெக்கை தணிந்து இதமான சூழல் நிலவி வருகிறது. ஆனால் டெல்லி உள்ளிட்ட வட மாநில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. அத்துடன் வெப்ப அலையும் கடுமையாக இருக்கிறது. மேலும் வரும் நாட்களில் வெயிலுடன் வெப்ப அலை இன்னும் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதே போல் தமிழ்நாட்டில் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக அறிவித்திருந்தது.
அதன்படி தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தென்மேற்கு வங்க கடல் பகுதிகளை அடையும்.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக கணித்துள்ளது.
திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?
TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?
விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்
குந்தவை த்ரிஷா பற்றி சர்ச்சை கருத்து...மன்னிப்பு கேட்டார் நடிகர் பார்த்திபன்
நண்பனும் இல்லை எதிரியும் இல்லை!
புகை பிடிப்பதை நிறுத்துவோமா.. எப்படி நிறுத்தணும் தெரியுமா.. வாங்க பார்க்கலாம்!
அமெரிக்காவுலதாங்க அதுக்குப் பேரு இறைச்சி பந்து.. நம்ம ஊர்ல என்ன தெரியுமா?
ஏக்கம் என்பது..!
என்னாது தேசிய பீதி தினமா?.. பீதி அடையாமல் மேற்கொண்டு படிங்க பாஸ்!
{{comments.comment}}