சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மே 27 ஆம் தேதி உருவாக கூடும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அதன்படியே தற்போது வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய அரபிக்கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிழக்கு திசை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடந்தது. இதற்கிடையே கடந்த 24ஆம் தேதி தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திராவில் தென்மேற்கு பருவமழை துவங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இந்த தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கி பின்னர் ஜூலை முதல் வாரத்தில் நாடு முழுவதும் பரவி, நாட்டின் தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் 80 சதவீதம் மழை கிடைக்கும் எனவும் தெரிவித்தது.

அதன்படி, தற்போது தமிழ்நாடு முழுவதும் பரவலாக கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், நீலகிரி, கோவை, மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர்ந்து நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழை வரையில் பெய்யக்கூடும் என்பதால், அப்பகுதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் வெயிலே இல்லாமல் வானம் மேகமூட்டத்துடன் இதமான காற்று வீசி வருவதால், குளுமையான சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில் மத்திய அரபிக் கடலைத் தொடர்ந்து, வங்க கடலிலும் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.இது மேலும் வலுவடைய கூடும்.இதன் காரணமாக தமிழ்நாட்டில்
இன்று முதல் மே 30ம் தேதி வரை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும் என்பதால் ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கடலோர கர்நாடகா, தெற்கு உள் கர்நாடகா, கோவா, மத்திய மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}