வங்கக்கடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு.. இந்திய வானிலை மையம்..!

May 27, 2025,06:00 PM IST

சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மே 27 ஆம் தேதி உருவாக கூடும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அதன்படியே  தற்போது வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி  உருவாகியது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



மத்திய அரபிக்கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிழக்கு திசை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடந்தது. இதற்கிடையே கடந்த 24ஆம் தேதி தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திராவில் தென்மேற்கு பருவமழை துவங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இந்த தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கி பின்னர் ஜூலை முதல் வாரத்தில் நாடு முழுவதும் பரவி, நாட்டின் தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் 80 சதவீதம் மழை கிடைக்கும் எனவும் தெரிவித்தது. 




அதன்படி, தற்போது தமிழ்நாடு முழுவதும் பரவலாக கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், நீலகிரி, கோவை, மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர்ந்து நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழை வரையில் பெய்யக்கூடும் என்பதால், அப்பகுதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் வெயிலே இல்லாமல் வானம் மேகமூட்டத்துடன்  இதமான காற்று வீசி வருவதால், குளுமையான சூழல் நிலவுகிறது.


இந்த நிலையில் மத்திய அரபிக் கடலைத் தொடர்ந்து, வங்க கடலிலும் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


அதன்படி,  வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தற்போது  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.இது மேலும் வலுவடைய கூடும்.இதன் காரணமாக தமிழ்நாட்டில்  

இன்று முதல் மே 30ம் தேதி வரை தமிழ்நாட்டின்  ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை  பெய்யக் கூடும் என்பதால் ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கடலோர கர்நாடகா, தெற்கு உள் கர்நாடகா, கோவா, மத்திய மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு சட்டசபையில் மீண்டும் ஆளுநர் வெளிநடப்பு.. மைக் ஆப் செய்யப்பட்டதாகவும் பரபரப்பு புகார்!

news

ஆளுநர் உரையை வாசிக்காமல் முரண்டு பிடிப்பது நல்லதல்ல.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி.வெளியேறியது ஏன்?.. ஆளுநர் மாளிகை விளக்கம்

news

ஜனநாயகன் சென்சார் சான்றிதழ் வழக்கில் உத்தரவு ஒத்திவைப்பு

news

பொறுப்பேற்றதும் திருப்பரங்குன்றம் விவகாரம் பற்றி பேசிய பாஜக நிதின் நபின்

news

சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த விடியா திமுக அரசு... எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்!

news

கவர்னரின் மைக் ஆஃப் செய்யப்படவில்லை...சபாநாயகர் அப்பாவு விளக்கம்

news

அம்பானி வீட்டு மின்சார கட்டணம் எவ்வளவு தெரியுமா? கேட்ட நீங்களே ஆசந்து போவீங்க!

news

யாருடன் கூட்டணி?...டிடிவி தினகரன் நாளை கட்சியினருடன் ஆலோசனை

அதிகம் பார்க்கும் செய்திகள்