சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மே 27 ஆம் தேதி உருவாக கூடும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அதன்படியே தற்போது வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய அரபிக்கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிழக்கு திசை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடந்தது. இதற்கிடையே கடந்த 24ஆம் தேதி தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திராவில் தென்மேற்கு பருவமழை துவங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இந்த தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கி பின்னர் ஜூலை முதல் வாரத்தில் நாடு முழுவதும் பரவி, நாட்டின் தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் 80 சதவீதம் மழை கிடைக்கும் எனவும் தெரிவித்தது.

அதன்படி, தற்போது தமிழ்நாடு முழுவதும் பரவலாக கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், நீலகிரி, கோவை, மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர்ந்து நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழை வரையில் பெய்யக்கூடும் என்பதால், அப்பகுதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் வெயிலே இல்லாமல் வானம் மேகமூட்டத்துடன் இதமான காற்று வீசி வருவதால், குளுமையான சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில் மத்திய அரபிக் கடலைத் தொடர்ந்து, வங்க கடலிலும் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.இது மேலும் வலுவடைய கூடும்.இதன் காரணமாக தமிழ்நாட்டில்
இன்று முதல் மே 30ம் தேதி வரை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும் என்பதால் ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கடலோர கர்நாடகா, தெற்கு உள் கர்நாடகா, கோவா, மத்திய மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}