அதிகாலையில் விழிப்பவரும்.. இளமையில் உழைப்பவரும்... முதுமைக்கு முன் சேமிப்பவரும்!

Jan 14, 2026,10:58 AM IST

டி.கலைமணி


வானமே இடிந்து உன் தலையில் விழுகிற சூழல் வந்தாலும் 

உன் மனம் இப்படித்தான் யோசிக்க வேண்டும்.

முருகர் இருக்கிறார். 

கை விட மாட்டார்.


ஒருவருக்கு உபகாரம் செய்ய வேண்டும் என்றால்.. 

முதலில் தாய்க்கு செய். 

ஒருவருக்கு மரியாதை செய்ய வேண்டும் என்றால் .. 

முதலில் தந்தைக்கு செய்.

அதிகாலையில் விழிப்பவரும் --

இளமையில் உழைப்பவரும் .

முதுமைக்கு முன் சேமிப்பவரும்.




வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள் --

அவசரமாய் வாழ்க்கை துணையை தேடாதீர்கள். 

வாழ்க்கை முழுவதும் துணையாய் வருபவராய் தேடுங்கள்.

படித்த திமிரை ஒருபோதும் படிக்காத பெற்றோரிடம் காட்டாதீர்கள் 

படிக்காத அவர்கள்தான் நம்மை படிக்க வைத்தார்கள்.. நினைவில் கொள்!


இந்தத் தத்துவக் கவிதையின் பொருள் என்ன தெரியுமா..


நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள்; அதுபோல, வாழ்க்கையில் தடைகள் வரும்போதுதான் நம் தன்னம்பிக்கையின் பலம் தெரியும்.


கடவுள் மீதான நம்பிக்கை உனக்கு ஆறுதல் தரும் என்றால், உன் உழைப்பின் மீதான நம்பிக்கை உனக்கு வெற்றியைக் கொடுக்கும். உலகம் உன்னை அங்கீகரிக்க வேண்டும் என்று ஓடுவதை விட, உனது மனசாட்சி உன்னை மெச்சும் படி வாழ்வதே உன்னதமானது.


அன்பை விதைப்பவன் நிம்மதியை அறுவடை செய்கிறான்; பொறுமையைக் கடைபிடிப்பவன் காலத்தை வெல்கிறான். எனவே, எதற்கும் கலங்காதே... கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார், உன் திறமை உனக்கே புரியும்.


(சென்னையைச் சேர்ந்த டி. கலைமணி 64 வயதுக்காரர். பக்தி, தத்துவம் என பல் சுவை பாடல்கள், கவிதைகள் எழுதுவதில் கை தேர்ந்தவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

news

பாஜக.,வில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு? - பின்னணியில் நடந்தது என்ன?

news

திமுக பணத்தை நம்பி உள்ளது, அங்கு உழைக்க ஆளில்லை; இளைஞர்கள் நினைத்தால் ஆட்சியையே மாற்றலாம்: அன்புமணி

news

பறவைக் காய்ச்சல் பரவல்... ஹாஃப்பாயில் சாப்பிடாதீங்க: எச்சரிகை விடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

news

தமிழகத்தில் பிப்., 13ம் தேதி லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என்றும் என் மனைவி சீதா தான்....நான் பிரிந்ததை நினைத்து என்னைக்கும் வருத்தப்பட்டதே இல்லை: பார்த்திபன்

news

சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிராக 100 எம்.பி.,க்களிடம் கையெழுத்து பெற்ற காங்கிரஸ்

news

பாகிஸ்தானின் பல்டி அரசியல்.. ஐசிசி-யின் அதிரடி கடிதத்தால் அடிபணிந்த பிசிபி!

news

தேர்வுகளை நடத்த தெரியாதவர் தமிழ்நாட்டுக்கு முதல்வராக வாய்த்திருப்பது சாபக்கேடு: எடப்பாடி பழனிச்சாமி

அதிகம் பார்க்கும் செய்திகள்