- தெ.நாராயண லெட்சுமி, B.E
வாழ்க்கையை தேடி சொந்த ஊரை விட்டு தூரம் வந்து வாழும் புலம்பெயர் வாழ்க்கையில், சில நேரங்களில் சொந்தங்களைவிட நெருக்கமாக மாறிவிடுவது நட்புதான். அப்படிப்பட்ட மனதை நெகிழச் செய்யும் ஒரு அழகான நட்பு தான் எங்கள் நட்பு.
கிரிக்கெட் மைதானத்தில் சும்மா ஆரம்பித்த ஒரு அறிமுகம், காலப்போக்கில் ஆழமான நட்பாக மாறி இன்று ஒரே நிறுவனத்தில் தோளோடு தோள் நின்று வேலை செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது சதீஷ் மற்றும் தினேஷ் ஆகியோரின் உறவு.
வேலை, வாழ்க்கை, சந்தோஷம், கவலை – எதுவாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் துணையாக நிற்கும் இந்த நட்பு கிடைத்தது எங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய வரமாகவே உணர்கிறோம்.
நெகிழ்ச்சியூட்டிய சர்ப்ரைஸ்

சதீஷ் birthday க்காக அவரது நெருங்கிய நண்பர் தினேஷ் மற்றும் அவரது மனைவி பிரியா இணைந்து ஒரு இனிய சர்ப்ரைஸ் செய்தனர். சதீஷ்க்கு அழகான புத்தாடை கொடுத்து, இனிப்பான கேக்குடன் பிறந்தநாளை சந்தோஷமாகக் கொண்டாடினோம்.
குடும்பங்கள் போல எல்லாம் சேர்ந்து, சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த அந்த தருணங்களில் கேக் வெட்டி கொண்டாடினோம் , அந்த இனிய நினைவுகளை புகைப்படங்களாகவும் பதிவு செய்து வைத்தோம் . பின்னர் அனைவரும் சேர்ந்து பேசி கொண்டு cake உண்டு அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டோம்.
பெண்களின் மனமார்ந்த தோழமை
ஆண்களின் நட்பு எப்படி உறுதியாக இருக்கிறதோ, அதுபோலவே எங்களது (லக்ஷ்மி மற்றும் பிரியா )ஆகியோரின் நட்பும் மிகவும் அழகாக மலர்ந்துள்ளது.
நேரம் கிடைக்காத நாள்களிலும் கூட, ஒரு சிறிய மெசேஜ் மூலமாகவாவது எங்கள் அன்பையும் நட்பையும் பகிர்ந்து கொள்வோம்.
அடுத்த தலைமுறையின் இனிய தொடர்
இந்த நட்பின் இனிய தொடர்ச்சியாக, இவர்களது செல்லப் பிள்ளைகளான வேதா மற்றும் சிவன்யா, சாய் மற்றும் குமரன் ஆகியோரும் சிறு வயதிலிருந்தே நல்ல நண்பர்களாக வளர்ந்து வருவது இந்த உறவின் அழகை இன்னும் அதிகரிக்கிறது.
வேலைப்பளு நிறைந்த வாழ்க்கையில், சொந்த ஊரை நினைத்து வாழும் புலம்பெயர் மக்களுக்கு இப்படிப்பட்ட உண்மையான நட்புகள் தான் ஒரு பெரிய ஆறுதலாக இருக்கிறது.
“உற்றார் யாரோ? நண்பர்களே!” என்ற சொல்லுக்கு அர்த்தம் கொடுக்கும் இந்த இரண்டு குடும்பங்களின் நட்பு, காலம் கடந்தும் என்றும் இனிதே தொடர வேண்டும் என்று அனைவரும் மனமார வாழ்த்த வேண்டுகிறேன்.
(தெ. நாராயணலட்சுமி, ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் வசித்து வருகிறார்)
சிந்தனைச் சிதறல்.. இன்று உங்களை வாசிக்கும் உறவுகள்.. நாளை படைப்புகளை சுவாசிக்கும்!
நான் உன் பிள்ளைய ஒன்னும் செய்ய மாட்டேன்.. (கோடாங்கி.. திகில் தொடர் - 8)
பனித்துளி
மெஷின் மீது அக்கறை… மனிதர்கள் மீது ஏன் இல்லை?
அரங்கனின் பிரியாவிடை...!
புலம்பெயர் மண்ணில் மலர்ந்த நட்பு.. நெகிழ்ச்சியூட்டிய பிறந்தநாள் கொண்டாட்டம்!
கழுகு போல பறக்க ஆசையா.. அப்புறம் எதுக்கு வாத்துகளோடு நீச்சலடிச்சுட்டு இருக்கீங்க!
சிலுவை நாயகனின் ஏழு வார்த்தைகள்!
ஆளுக்கு முந்தி சீட் வாங்கியாச்சு.. வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் திணறும் காங்., பாஜக!
{{comments.comment}}