அருமை மழலையும் பேரழகுத் தமிழும்!

Feb 15, 2025,04:59 PM IST


ஓ மழலை அரும்பே

நீ என் கருவில் உருவான உயிரெழுத்து

என் மெய் தொட்டு விளையாடும் மெய்யெழுத்து

என்னை அம்மா என்றழைக்கும் முதலெழுத்து

என்னைச் சார்ந்து வளரும் சார்பெழுத்து

நீ தேம்பி அழுவது அளபெடை

நான் உன்னை ஆற்றுவது ஆற்றுப்படை

நீ உறங்க அழுவது அகவல்

உன்னை நான் தாலாட்டுவது பிள்ளைத்தமிழ்

நீ மகிழும் விளையாட்டுக்கள் திருவிளையாடற்புராணம்

நீ செய்யும் குறும்புகள்  பெரிய புராணம்

நீ பேசும் மழலைப் பேச்சு  திருவாசகம்

நீ உதிர்க்கும் புன்னகை தேவாரம்

நீ ஈரடி நடந்தால் திருக்குறள்

நீ நான்கடி நடந்தால் நாலடியார்

நீ எட்டடி நடந்தால் எட்டுத்தொகை

நீ பத்தடி நடந்தால் பத்துப்பாட்டு

நீ என் வாழ்வின் இலக்கணம்

நான் நித்தம் படிக்கும் இலக்கியம்


கவிதை: வி. ராஜேஸ்வரி

Assistant, College Office, The Madura College (Autonomous), Madurai -625 011.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்