ஓ மழலை அரும்பே
நீ என் கருவில் உருவான உயிரெழுத்து
என் மெய் தொட்டு விளையாடும் மெய்யெழுத்து
என்னை அம்மா என்றழைக்கும் முதலெழுத்து
என்னைச் சார்ந்து வளரும் சார்பெழுத்து
நீ தேம்பி அழுவது அளபெடை
நான் உன்னை ஆற்றுவது ஆற்றுப்படை
நீ உறங்க அழுவது அகவல்
உன்னை நான் தாலாட்டுவது பிள்ளைத்தமிழ்
நீ மகிழும் விளையாட்டுக்கள் திருவிளையாடற்புராணம்
நீ செய்யும் குறும்புகள் பெரிய புராணம்
நீ பேசும் மழலைப் பேச்சு திருவாசகம்
நீ உதிர்க்கும் புன்னகை தேவாரம்
நீ ஈரடி நடந்தால் திருக்குறள்
நீ நான்கடி நடந்தால் நாலடியார்
நீ எட்டடி நடந்தால் எட்டுத்தொகை
நீ பத்தடி நடந்தால் பத்துப்பாட்டு
நீ என் வாழ்வின் இலக்கணம்
நான் நித்தம் படிக்கும் இலக்கியம்
கவிதை: வி. ராஜேஸ்வரி
Assistant, College Office, The Madura College (Autonomous), Madurai -625 011.
8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் அலர்ட்!
ரஜினியை சந்தித்த சிம்ரனின் நெகிழ்ச்சி பதிவு... இணையத்தில் வைரல்!
2026ல் தேர்தலில் திமுகவை விஜய்யால் வீழ்த்த முடியாது: விசிக தலைவர் திருமாவளவன்
வாட்ஸ்ஆப்பில் வந்த இன்விடேஷன்.. பட்டுன்னு திறந்த அரசு ஊழியர்.. பொட்டுன்னு போன ரூ. 2 லட்சம்!
வரலட்சுமியின் மறைவுக்கு கொலைகார திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
இந்தி மொழியை திணிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Coffee lovers pl listen.. அதிகாலையில் காபி குடிக்கக் கூடாது.. ஏன் தெரியுமா?
அதிரடி காட்டி வரும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.800 உயர்வு... கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!
2027 உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித், விராட் கோலி விளையாட வாய்ப்பு.. குட் நியூஸ்!
{{comments.comment}}