ஓ மழலை அரும்பே
நீ என் கருவில் உருவான உயிரெழுத்து
என் மெய் தொட்டு விளையாடும் மெய்யெழுத்து
என்னை அம்மா என்றழைக்கும் முதலெழுத்து
என்னைச் சார்ந்து வளரும் சார்பெழுத்து
நீ தேம்பி அழுவது அளபெடை
நான் உன்னை ஆற்றுவது ஆற்றுப்படை
நீ உறங்க அழுவது அகவல்
உன்னை நான் தாலாட்டுவது பிள்ளைத்தமிழ்
நீ மகிழும் விளையாட்டுக்கள் திருவிளையாடற்புராணம்
நீ செய்யும் குறும்புகள் பெரிய புராணம்
நீ பேசும் மழலைப் பேச்சு திருவாசகம்
நீ உதிர்க்கும் புன்னகை தேவாரம்
நீ ஈரடி நடந்தால் திருக்குறள்
நீ நான்கடி நடந்தால் நாலடியார்
நீ எட்டடி நடந்தால் எட்டுத்தொகை
நீ பத்தடி நடந்தால் பத்துப்பாட்டு
நீ என் வாழ்வின் இலக்கணம்
நான் நித்தம் படிக்கும் இலக்கியம்
கவிதை: வி. ராஜேஸ்வரி
Assistant, College Office, The Madura College (Autonomous), Madurai -625 011.
குஜராத் முதல்வராகப் பதவியேற்று 25 வருடங்கள்.. அரசியல் தலைவர்களுக்கு நன்றி கூறிய பிரதமர் மோடி
2025 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு.. 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது
கரண்டி பிடிக்கவும்.. கார் ஓட்டவும்.. பெண்ணென்னும் சக்தி!
பீகார் சட்டசபைத் தேர்தலில் யார் யாருக்கு சீட்.. காங்கிரஸ் நாளை முக்கிய முடிவு!
பீகார் சட்டசபை தேர்தல்: பாஜக, ஐக்கிய ஜனதா தளம் சமபங்கு.. சிறிய கட்சிகளுக்கு ராஜ்யசபா சீட்?
Coldrif இருமல் மருந்துக்கு பஞ்சாபிலும் தடை.. ம.பியில் 16 குழந்தைகள் பலியானதன் எதிரொலி
உங்களுடன் நான் இருக்கிறேன்...கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் வீடியோ காலில் பேசும் விஜய்
கடவுளும், எங்க மாமாவும்தான் காரணம்.. கெத்தாக காலரைத் தூக்கி விடும் ஹரிஸ்.. தம்பி செஸ்ஸில் புலிங்க!
கரூர் சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும்... சுப்ரீம் கோர்ட்டில் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் மனு
{{comments.comment}}