அருமை மழலையும் பேரழகுத் தமிழும்!

Feb 15, 2025,04:59 PM IST


ஓ மழலை அரும்பே

நீ என் கருவில் உருவான உயிரெழுத்து

என் மெய் தொட்டு விளையாடும் மெய்யெழுத்து

என்னை அம்மா என்றழைக்கும் முதலெழுத்து

என்னைச் சார்ந்து வளரும் சார்பெழுத்து

நீ தேம்பி அழுவது அளபெடை

நான் உன்னை ஆற்றுவது ஆற்றுப்படை

நீ உறங்க அழுவது அகவல்

உன்னை நான் தாலாட்டுவது பிள்ளைத்தமிழ்

நீ மகிழும் விளையாட்டுக்கள் திருவிளையாடற்புராணம்

நீ செய்யும் குறும்புகள்  பெரிய புராணம்

நீ பேசும் மழலைப் பேச்சு  திருவாசகம்

நீ உதிர்க்கும் புன்னகை தேவாரம்

நீ ஈரடி நடந்தால் திருக்குறள்

நீ நான்கடி நடந்தால் நாலடியார்

நீ எட்டடி நடந்தால் எட்டுத்தொகை

நீ பத்தடி நடந்தால் பத்துப்பாட்டு

நீ என் வாழ்வின் இலக்கணம்

நான் நித்தம் படிக்கும் இலக்கியம்


கவிதை: வி. ராஜேஸ்வரி

Assistant, College Office, The Madura College (Autonomous), Madurai -625 011.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..வருகிற 15ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி:வானிலை மையம்

news

திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல் தான் உள்ளனர் கூட்டணி கட்சிகள்: செல்லூர் ராஜூ விமர்சனம்!

news

சேலம் வருகிறார் விஜய்.. நாளை நிர்வாகிகள் சந்திப்பு.. 4,998 பேருக்கு மட்டுமே அனுமதி!

news

சத்துணவு ஊழியர்கள் போராட்டம்: நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்

news

தொலைந்த பைசா தினம்.. ஆமாங்க.. இப்படியும் ஒரு தினம் இருக்கு.. அதுவும் இன்றுதான் அது!

news

கமகமக்கும் இறால் தொக்கு.. நம்ம ஊரு ஸ்டைல்ல.. சாப்ட்டுப் பாருங்க.. நாக்கு ஊறும்!

news

தாயையும் தம்பியையும்.. பள்ளியில் புகுந்து மாணவர்களை வேட்டையாடிய 18 வயது திருநங்கை!

news

கல்யாணம் காது குத்தா.. சுப நிகழ்ச்சிகளுக்கு இனி அரசு பேருந்து உங்கள் வாசலில்!

news

ஒரு சிறு பயணம்.. நிறைவாக கடப்போம்.. A Short Journey

அதிகம் பார்க்கும் செய்திகள்