- தீபா ராமானுஜம்
வானத்தில் கார்மேகமாய் நீயே !!
வண்ண மலர்களின் வாசனையாய் நீயே !!
மண்ணில் விழுகின்ற தூறல்களாய் நீயே !!
மழலையின் மனம் கவரும்
புன்னகையாய் நீயே !!
சில்லென்று தீண்டிடும் தென்றலாய் நீயே !!
புல்லாங்குழலின் நாதமாய் நீயே !!
கண்களில் காணும் காட்சியும் நீயே !!
காதினில் கேட்கும் இன்னிசை நீயே !!
மனதில் தோன்றும் உணர்வுகள் நீயே !!
மகிழ்வான வாழ்வின் தருணங்கள் நீயே !!
உள்ளத்தின் உள்ளே இருப்பவனும் நீயே !!
துன்பத்தில் மருந்தாக ஆனவனும் நீயே !!
எங்கும் நீயே எதிலும் நீயே !!
என்னுயிரில் இன்னுயிராய் கலந்தவனும் நீயே !!
காற்றழுத்த தாழ்வு பகுதி.. நாளை உருவாகிறது..எங்கெல்லாம் கனமழை பெய்யும் தெரியுமா? வானிலை மையம் தகவல்!
ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் காலமானார்.. கொரோனா காலத்தில் திறம்பட பணியாற்றியவர்!
3 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு!
விஜய் செய்வது வெறுப்பு அரசியல்... மக்களிடம் அது எடுபடாது: திருமாவளவன்
குடியாத்தம் அருகே மிளகாய்ப் பொடி தூவி காரில் கடத்தப்பட்ட 4 வயது சிறுவன் மீட்பு!
பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பது சமூக அநீதி: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
தீபாவளிக்கு விஜய் குரலில் தளபதி கச்சேரியா.. ஜனநாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்ப ரிலீஸ்?
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீஸ் சோதனையில் புரளி என கண்டுபிடிப்பு
வானத்தில் கார்மேகமாய் நீயே.. கண்ணா!!!
{{comments.comment}}