அறத்தின் வழி நடந்து
அன்பின் அருமை உரைத்தவர்
அகிலம் யாவும் போற்ற
அமைதியின் பெருமை காத்தவர்
அகிம்சை நொறி நாடி
அரியன பலவும் புரிந்தவர்
அறியா வயதினிலே
அரிச்சந்திரன் கதை கேட்டு
வாய்மையைப் போற்றினார்
அயலகம் சென்று
சட்டம் பயின்றாலும்
தாயகம் தனை
உயிரென நேசித்தார்
அந்நிய மண்ணிலும்
அநீதி நீக்கிட
ஆற்றலுடன் குரல் கொடுத்தார்
அன்னை நாட்டின்
அடிமைத்தளை நீக்க
அந்நியரைப் புறக்கணிக்கும்
ஒத்துழையாமை இயக்கம்
உரிமைக்குரல் ஓங்க
உப்பு சத்தியாகிரகம்
வல்லமை உணர்ந்திட
வெள்ளையனே வெளியேறு
ஆன்ம பலம் பெருகிட
உண்ணா நோன்பு
கண்ணியம் காத்திடும்
கதராடை இயக்கம்
அண்ணல் இயற்றிய ஆர்ப்பாட்டங்கள்
நடு நடுங்கச் செய்தது ஆங்கிலேயரை
கத்தியின்றி இரத்தமின்றி
சத்தியத்தின் பாதையில்
ஆயுதங்கள் வாய் மூடிப்போக
உரக்கக் கேட்டதோ
அகிம்சையின் முழக்கம்
மண்ணில் புதைந்த வித்தாய் மகாத்மா
விண்ணை தொடும் விருட்சமாய்
விடுதலை வீரர்கள்
கிட்டியது வெற்றிக்கனியாய்
பாரதத்தாயின் சுதந்திரம்
எண்ணிய முடித்திடும்
திண்ணிய நெஞ்சராய்
ஏற்றம் கண்டவர்
உலக உத்தமர் காந்தியடிகள்
(கவிதையை எழுதிய பாரதி இளங்கவி கீர்த்தனா பு, எம்.ஏ.,நெட் படித்தவர். தூய தமிழ்ப் பற்றாளர். திருப்பூர் மாவட்டத்துக்காரர். திருவண்ணாமலை இரத்தினா செல்வக்குமார் தலைமையிலான தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு தமிழ் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்றவர்)
மருத்துவமனையில் ராமதாஸ்:ஐசியூவில் இருப்பதால் பார்க்கவில்லை-அன்புமணி:உடனிருந்து பார்க்கிறேன்-ஜிகே மணி
பௌர்ணமி நிலவில்.. அதாவது இன்று சரத் பூர்ணிமா .. லட்சுமிக்கும், கிருஷ்ணருக்கும் அர்ப்பணம்!
அறத்தின் வழி நடந்து .. அன்பின் அருமை உரைத்தவர் .. உலக உத்தமர் காந்தியடிகள்!
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 772 புதிய வீடுகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
அதிரடி சரவெடி... புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை... சவரன் 88,000த்தை கடந்தது
கன மழை, நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கித் தத்தளிக்கும் நேபாளம்.. உதவிக் கரம் நீட்டும் இந்தியா
பீகார் சட்டசபைத் தேர்தல்.. இன்று மாலை தேதியை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்
ஆளுநரின் பேச்சு.. விலாவரியாக விளாசித் தள்ளிய முதல்வர் ஸ்டாலின்.. பொசுக்கென்று பதிலடி தந்த தமிழிசை!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 06, 2025... இன்று அதிர்ஷ்டம் தேடி வரும்
{{comments.comment}}