பள்ளிக்கூடம்

Nov 27, 2025,04:28 PM IST

- கவிநிலவு சுமதி சிவக்குமார்


புத்தகப் பையை

முதுகில் சுமந்து

புத்துணர்வு கொண்டு

முகம்மலர நடந்து


சீருடையில் அனைவரும்

சிறப்பாய் தெரியும்

சீக்கிரம் காலையில்

சேர்ந்திடும் நேரம்




தாமதமானால் தடியால்

அடியும் கிடைக்கும்

தாமதமாக வர காரணம் பலவாறு சொல்லி 


எல்லாரும் ஒன்றாய்

எல்லாமும் கற்போம்

பணக்காரன் ஏழை

பாகுபாடுகள் இல்லை


பலவித சாதிகள்

பரந்தே கிடப்பினும்

பாரில் நாங்கள்

படிக்கும் சாதியே


மண்ணில் என்றும்

மாணவராய் மலர்வோம்

எண்ணும் எழுத்தும்

கண்ணென கொண்டே நாம் 


ஏட்டில் எழுதியதை

வீட்டிலும் படித்திட

ஏக்கமும் ஏனடா

எழுதுவோம் நாமும்


அறிவை அள்ளித்தரும்

அன்பான ஆசானும் 

தவறுகளைத் திருத்தி

தட்டிக்கேட்கும் குருவும்


அடிக்கடி சண்டையிட்டு

அடித்துக் கொண்டாலும்

அளவில்லாமல் பேசும்

அக்கறையில் நண்பர்கள்


ஆலமரத்தடி நிழலில்

ஆடிடும் நினைவுகளில் 

பந்தாட்ட மைதானம்

வந்தாடுமே நித்தம்


மதியவுணவு அறைக்கூடம்

மகிழ்ச்சியை கூட்டும்

ஆசிரியர் ஓய்வறை

ஆச்சரியமாய் காட்டும்


படித்தவனும் படிக்காதவனும்

பாகுபாடு இல்லாமல்

ஒன்றாக தரையில்

ஒற்றுமையாக அமர்ந்திடும்


பள்ளிக்கூட கனவுகள்

பருவமாறிய நினைவுகள்

கள்ளமில்லா உள்ளங்களில்

களிப்பென கனியும்..!! 


(கவிநிலவு சுமதி சிவக்குமார், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் கூட்ட நெரிசல்.. விஜய்யிடம் நாளை சம்பவம் செய்யப் போகும் சிபிஐ.. டெல்லியில் விசாரணை

news

தேசத்தின் மானம் காத்த.. தேசியக் கொடிகாத்த குமரனை தெரிந்து கொள்வோமா?

news

கூடாரவல்லியில் கைகூடும் மாங்கல்யம்!

news

குமரேசனாய் பிறந்து.. இமயம் முதல் குமரி வரை போற்றிய .. கொடி காத்த குமரன்!

news

வில்லிபுத்தூர் ஆண்டாளும் கூடார வல்லியின் சிறப்புகளும்!

news

தென்றல் காற்று தாலாட்ட.. தென்னங்கீற்று தலையாட்ட... குயிலின் ஓசை இசை பாட.. மழை!

news

இதற்கு மேல்....!

news

"200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்"...முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

news

தேமுதிக.,வுடன் கூட்டணி பேச்சு...ஆட்சியில் பங்கு விவகாரங்கள்...நயினார் 'நச்' பதில்

அதிகம் பார்க்கும் செய்திகள்