- கவிநிலவு சுமதி சிவக்குமார்
புத்தகப் பையை
முதுகில் சுமந்து
புத்துணர்வு கொண்டு
முகம்மலர நடந்து
சீருடையில் அனைவரும்
சிறப்பாய் தெரியும்
சீக்கிரம் காலையில்
சேர்ந்திடும் நேரம்
தாமதமானால் தடியால்
அடியும் கிடைக்கும்
தாமதமாக வர காரணம் பலவாறு சொல்லி
எல்லாரும் ஒன்றாய்
எல்லாமும் கற்போம்
பணக்காரன் ஏழை
பாகுபாடுகள் இல்லை
பலவித சாதிகள்
பரந்தே கிடப்பினும்
பாரில் நாங்கள்
படிக்கும் சாதியே
மண்ணில் என்றும்
மாணவராய் மலர்வோம்
எண்ணும் எழுத்தும்
கண்ணென கொண்டே நாம்
ஏட்டில் எழுதியதை
வீட்டிலும் படித்திட
ஏக்கமும் ஏனடா
எழுதுவோம் நாமும்
அறிவை அள்ளித்தரும்
அன்பான ஆசானும்
தவறுகளைத் திருத்தி
தட்டிக்கேட்கும் குருவும்
அடிக்கடி சண்டையிட்டு
அடித்துக் கொண்டாலும்
அளவில்லாமல் பேசும்
அக்கறையில் நண்பர்கள்
ஆலமரத்தடி நிழலில்
ஆடிடும் நினைவுகளில்
பந்தாட்ட மைதானம்
வந்தாடுமே நித்தம்
மதியவுணவு அறைக்கூடம்
மகிழ்ச்சியை கூட்டும்
ஆசிரியர் ஓய்வறை
ஆச்சரியமாய் காட்டும்
படித்தவனும் படிக்காதவனும்
பாகுபாடு இல்லாமல்
ஒன்றாக தரையில்
ஒற்றுமையாக அமர்ந்திடும்
பள்ளிக்கூட கனவுகள்
பருவமாறிய நினைவுகள்
கள்ளமில்லா உள்ளங்களில்
களிப்பென கனியும்..!!
(கவிநிலவு சுமதி சிவக்குமார், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
திமுகவின் அடுத்த அதிரடி.. விளிம்புநிலையில் இருப்போர்க்கு சிறப்பு நிதி அறிவிப்பு!
பிடியை தளர்த்தாத திமுக, காங்கிரஸ்...நேரம் ஆக ஆக அதிகரிக்கும் பரபரப்பு
திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகும்...கோபண்ணா நம்பிக்கை
இது தான் சட்ட ஒழுங்கு தரமா?...நாங்குநேரி படுகொலை...திமுக.,வை விளாசிய விஜய்
ராஜ்ய சபா எம்பி ஆகிறார் நிதின் நபீன்: பாஜகவின் இளம் தேசிய தலைவர் பீகாரிலிருந்து தேர்வு
திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா? முதல்வர் இல்லத்தில் முக்கிய ஆலோசனை
இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு...டெல்லி பாஜக அலுவலகத்தில் நடந்தது என்ன?
திமுக - காங்கிரஸ் கூட்டணி: இழுபறிக்கு இடையில் இன்று முக்கிய அறிவிப்பு?
தடையினை உடைத்திடு
{{comments.comment}}