- வ. சரஸ்வதி
மனசுக்குள் கொட்டித் தீர்க்கிறது மழை
அவ்வப்போது பெய்யும் சலன மழை தான் என்றிருந்த எனக்கோ
பெரும் வியப்பு
இப்படி ஒரு மழையை கண்டிரவில்லை
இந்த வாழ்க்கை
மனமட்டம் நீர்மட்டம் நிலை குலைந்து
என் தவசை அசைக்கிறது
கலைக்கிறது
உன் அதீத பாசப்பொழிவால்
பொலிவாகிவிட்ட எனக்கு

உன் வலிமை புலப்பட்டு விட்டது
புறப்பட்டு விட்டேன்
எனை விட்டு
கொஞ்சம் வெயில் அடிக்கட்டும்
வெள்ளம் குறையட்டும்
உள்ளே உலர்ந்த மண்ணைத் தேடி
ஊற்றெடுக்க வழியின்றித் தவித்த வேளை
ஏதோ ஒரு ஞாபகத் தென்றல் வீசி
அன்பின் மேகங்கள் சூழ்கிறது.
கண்களின் இடுக்கு வழி கனமாய் இன்றி
கசிந்துருகும் மெல்லிய துளிகளாய்
- மனமழை பொழிகிறது, மெல்ல!
(கதாசிரியர் வ.சரசுவதி. செள. பொட்டிப்புரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இடை நிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பல்வேறு தளங்களில் கவிதை, கட்டுரைகள்)
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை.. எப்போது சாமி கும்பிடலாம்.. பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?
Kanakathara Sthothram: அட்சய திருதியை.. ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் படிப்போம்!
அட்சய திருதியை.. சித்திரை மாத பொன்னான நாளிது.. மூன்றாம் பிறையில் வரும் நாளிது!
அட்சய திருதியை அன்று...இதை வைத்துப் பூஜை செய்வோம்.. காலத்தின் அவசியம் இது!
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
{{comments.comment}}