மனமழை!

Nov 29, 2025,04:46 PM IST

- வ. சரஸ்வதி


மனசுக்குள் கொட்டித் தீர்க்கிறது மழை 

அவ்வப்போது பெய்யும் சலன மழை தான் என்றிருந்த எனக்கோ 

பெரும் வியப்பு

இப்படி ஒரு மழையை கண்டிரவில்லை 

இந்த வாழ்க்கை 

மனமட்டம் நீர்மட்டம் நிலை குலைந்து 

என் தவசை அசைக்கிறது 

கலைக்கிறது 

உன் அதீத பாசப்பொழிவால் 

பொலிவாகிவிட்ட எனக்கு 




உன் வலிமை புலப்பட்டு விட்டது 

புறப்பட்டு விட்டேன் 

எனை விட்டு 

கொஞ்சம் வெயில் அடிக்கட்டும் 

வெள்ளம் குறையட்டும் 

நானும் கொஞ்சம் கொஞ்சமாய் 

துளிர்த்துக் கொள்கிறேன்

உள்ளே உலர்ந்த மண்ணைத் தேடி

ஊற்றெடுக்க வழியின்றித் தவித்த வேளை

ஏதோ ஒரு ஞாபகத் தென்றல் வீசி

அன்பின் மேகங்கள் சூழ்கிறது.

கண்களின் இடுக்கு வழி கனமாய் இன்றி

கசிந்துருகும் மெல்லிய துளிகளாய் 

- மனமழை பொழிகிறது, மெல்ல!


(கதாசிரியர் வ.சரசுவதி. செள. பொட்டிப்புரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இடை நிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பல்வேறு தளங்களில் கவிதை, கட்டுரைகள்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஸ்டாலின் 2...இபிஎஸ் 5...போட்டி போட்டு தேர்தல் வாக்குறுதிகள் அள்ளி வீசும் திமுக-அதிமுக

news

பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவது தான் திமுகவின் வழக்கம்: அண்ணாமலை

news

திமுக-அதிமுக.,வின் தேர்தல் வாக்குறுதிகள்...என்ன செய்ய போகிறார் விஜய்?

news

அதிமுக-திமுக வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள் சாத்தியமா?...வாங்க தூர்வாரலாம்

news

பூம்பூம் மாடு வளர்ப்பவர்களுடன் 'காணும் பொங்கல்' கொண்டாடிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

news

ஊழல் செய்தால் பணி மாற்றம் இல்லை, பணி நீக்கம் செய்ய வேண்டும்: சீமான் ஆவேசம்!

news

வீரர்களின் கனவு நனவானது... ஜல்லிக்கட்டை தூக்கி சாப்பிட்ட முதலவர் முக ஸ்டாலினின் 2 அறிவிப்புக்கள்!

news

சிறந்த மாடுபிடி வீரருக்கு அரசு வேலை...முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

பெண்களுக்கு ரூ.2,000 உரிமைத்தொகை... ஆண்களுக்கு இலவச பஸ் பயணம்...இபிஎஸ் அதிரடி அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்