- வ. சரஸ்வதி
மனசுக்குள் கொட்டித் தீர்க்கிறது மழை
அவ்வப்போது பெய்யும் சலன மழை தான் என்றிருந்த எனக்கோ
பெரும் வியப்பு
இப்படி ஒரு மழையை கண்டிரவில்லை
இந்த வாழ்க்கை
மனமட்டம் நீர்மட்டம் நிலை குலைந்து
என் தவசை அசைக்கிறது
கலைக்கிறது
உன் அதீத பாசப்பொழிவால்
பொலிவாகிவிட்ட எனக்கு

உன் வலிமை புலப்பட்டு விட்டது
புறப்பட்டு விட்டேன்
எனை விட்டு
கொஞ்சம் வெயில் அடிக்கட்டும்
வெள்ளம் குறையட்டும்
உள்ளே உலர்ந்த மண்ணைத் தேடி
ஊற்றெடுக்க வழியின்றித் தவித்த வேளை
ஏதோ ஒரு ஞாபகத் தென்றல் வீசி
அன்பின் மேகங்கள் சூழ்கிறது.
கண்களின் இடுக்கு வழி கனமாய் இன்றி
கசிந்துருகும் மெல்லிய துளிகளாய்
- மனமழை பொழிகிறது, மெல்ல!
(கதாசிரியர் வ.சரசுவதி. செள. பொட்டிப்புரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இடை நிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பல்வேறு தளங்களில் கவிதை, கட்டுரைகள்)
Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!
பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு
எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!
பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்
“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!
"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
மக்களவையில் 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் அமளி: தொடர்ந்து அவை ஒத்திவைப்பு!
பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்
பி.வி. சிந்துவுக்கு விராட் கோலி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஜப்பானில் நடந்த மேஜிக்!
{{comments.comment}}