- வ. சரஸ்வதி
மனசுக்குள் கொட்டித் தீர்க்கிறது மழை
அவ்வப்போது பெய்யும் சலன மழை தான் என்றிருந்த எனக்கோ
பெரும் வியப்பு
இப்படி ஒரு மழையை கண்டிரவில்லை
இந்த வாழ்க்கை
மனமட்டம் நீர்மட்டம் நிலை குலைந்து
என் தவசை அசைக்கிறது
கலைக்கிறது
உன் அதீத பாசப்பொழிவால்
பொலிவாகிவிட்ட எனக்கு

உன் வலிமை புலப்பட்டு விட்டது
புறப்பட்டு விட்டேன்
எனை விட்டு
கொஞ்சம் வெயில் அடிக்கட்டும்
வெள்ளம் குறையட்டும்
உள்ளே உலர்ந்த மண்ணைத் தேடி
ஊற்றெடுக்க வழியின்றித் தவித்த வேளை
ஏதோ ஒரு ஞாபகத் தென்றல் வீசி
அன்பின் மேகங்கள் சூழ்கிறது.
கண்களின் இடுக்கு வழி கனமாய் இன்றி
கசிந்துருகும் மெல்லிய துளிகளாய்
- மனமழை பொழிகிறது, மெல்ல!
(கதாசிரியர் வ.சரசுவதி. செள. பொட்டிப்புரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இடை நிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பல்வேறு தளங்களில் கவிதை, கட்டுரைகள்)
என் மகனுக்கு TVK என பெயர் வைப்பேன்.. தவெக எம்எல்ஏ எம்.ஆர்.பல்லவி அதிரடி!
விண்ணுலகமே வியந்து போகும்.. அற்புதமாக நடந்தேறிய.. வரதராஜ பெருமாள் திருத்தேர் உற்சவம்
தர்ஷனின் தரமான சம்பவங்கள்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
World Bicycle day: ஓரம்போ ஓரம்போ.. இன்னும் சைக்கிள் ஓட்டுபவரா நீங்க.. வாழ்த்துகள்ங்க!
Tamil Short story: குழூஉக்குறி.. ஒரு நிமிடக் கதை (13)
World Bicyle day: சிக்கு.. சிக்கு மிதிவண்டி.. சின்னப் பையன் மிதிவண்டி!
Kalaiyarasi Muthuvel Poem: அழகு
அறியாமை பூட்டிட வகுப்பறை திறப்போம்!
Tamil Short Story: அனுசரிப்பு
{{comments.comment}}