மனமழை!

Nov 29, 2025,04:46 PM IST

- வ. சரஸ்வதி


மனசுக்குள் கொட்டித் தீர்க்கிறது மழை 

அவ்வப்போது பெய்யும் சலன மழை தான் என்றிருந்த எனக்கோ 

பெரும் வியப்பு

இப்படி ஒரு மழையை கண்டிரவில்லை 

இந்த வாழ்க்கை 

மனமட்டம் நீர்மட்டம் நிலை குலைந்து 

என் தவசை அசைக்கிறது 

கலைக்கிறது 

உன் அதீத பாசப்பொழிவால் 

பொலிவாகிவிட்ட எனக்கு 




உன் வலிமை புலப்பட்டு விட்டது 

புறப்பட்டு விட்டேன் 

எனை விட்டு 

கொஞ்சம் வெயில் அடிக்கட்டும் 

வெள்ளம் குறையட்டும் 

நானும் கொஞ்சம் கொஞ்சமாய் 

துளிர்த்துக் கொள்கிறேன்

உள்ளே உலர்ந்த மண்ணைத் தேடி

ஊற்றெடுக்க வழியின்றித் தவித்த வேளை

ஏதோ ஒரு ஞாபகத் தென்றல் வீசி

அன்பின் மேகங்கள் சூழ்கிறது.

கண்களின் இடுக்கு வழி கனமாய் இன்றி

கசிந்துருகும் மெல்லிய துளிகளாய் 

- மனமழை பொழிகிறது, மெல்ல!


(கதாசிரியர் வ.சரசுவதி. செள. பொட்டிப்புரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இடை நிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பல்வேறு தளங்களில் கவிதை, கட்டுரைகள்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுகவின் அடுத்த அதிரடி.. விளிம்புநிலையில் இருப்போர்க்கு சிறப்பு நிதி அறிவிப்பு!

news

பிடியை தளர்த்தாத திமுக, காங்கிரஸ்...நேரம் ஆக ஆக அதிகரிக்கும் பரபரப்பு

news

திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகும்...கோபண்ணா நம்பிக்கை

news

இது தான் சட்ட ஒழுங்கு தரமா?...நாங்குநேரி படுகொலை...திமுக.,வை விளாசிய விஜய்

news

ராஜ்ய சபா எம்பி ஆகிறார் நிதின் நபீன்: பாஜகவின் இளம் தேசிய தலைவர் பீகாரிலிருந்து தேர்வு

news

திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா? முதல்வர் இல்லத்தில் முக்கிய ஆலோசனை

news

இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு...டெல்லி பாஜக அலுவலகத்தில் நடந்தது என்ன?

news

திமுக - காங்கிரஸ் கூட்டணி: இழுபறிக்கு இடையில் இன்று முக்கிய அறிவிப்பு?

news

தடையினை உடைத்திடு

அதிகம் பார்க்கும் செய்திகள்