மழையில் துளிர்த்த என் நினைவு!

Nov 29, 2025,05:19 PM IST
- ஆ.வ.உமாதேவி 

மழை வந்தாலே எனக்கு, இந்த நிகழ்வு தான் நினைவுக்கு வரும்.

நான் பத்து மாத குழந்தையாக இருந்த போதே என் தாத்தாவும் பாட்டியும் என்னை எடுத்துச் சென்று வளர்த்தனர். அவர்கள் வளர்த்ததால், அவர்கள் மீது எனக்கு அளவில்லா பாசம். எனக்கு திருமணம் ஆகி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது, என் தாத்தாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

என்னை பார்க்க வேண்டுமென அவர் விரும்பியதால், என் அப்பா என்னுடைய மாமியார் வீட்டிற்கு வந்து பெரியவர்களின் அனுமதியோடு என்னை அழைத்துச் சென்றார். நானும் அப்பாவும் பேருந்தில் சென்றோம். போகும் வழியில் சாலையின் நடுவில் கரும்பு லாரி ஒன்று கவிழ்ந்து கிடந்ததால், பேருந்து செல்ல வழி இல்லாமல் அனைத்து வாகனங்களும் வரிசையாக நின்று விட்டிருந்தன. 





என் அப்பாவிற்கு மிகுந்த வேதனையாகிவிட்டது. ஏனெனில் நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. அம்மழையில் நனைய விட்டு நிறைமாத கர்ப்பிணி பெண்ணை அழைத்து வந்து இப்படி கஷ்டப்படுத்துகிறோமே என்று அவர் மிகவும் கவலைப்பட்டார். வழியில் சாப்பிட கூட எந்த உணவும் கிடைக்கவில்லையே என அப்பா மிகுந்த வேதனை அடைந்தார். எனக்கு எந்த சிரமமும் தெரியவில்லை. காரணம் என் மனம் முழுவதும் என் தாத்தாவின் நினைவு மட்டும் தான்.

கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர் தொலைவு மழையில் நனைந்தபடி நடந்து சென்ற பின் தான் ஒரு வாகனம் கிடைத்தது. அந்த வாகனத்தில் ஏறிக்கொண்டு மருத்துவமனையை அடைந்தோம். தாத்தாவை பார்த்த போது, என் கண்களில் வந்த கண்ணீருக்கு என்னால் அணை போட முடியவில்லை. என்னை அழவேண்டாம் என, என் தாத்தா கண்களால் சைகை செய்தது இன்னும் என் நெஞ்சை விட்டு நீங்கவில்லை. அதன் பின் அவர் குணமாகி வீட்டிற்கு வந்துவிட்டார்.

எனக்கு சுகப்பிரசவம் ஆகி, பெண் குழந்தையுடன் சென்று என் தாத்தாவை பார்த்துவிட்டு வந்தேன். இன்றைக்கும் பேருந்தில் அந்த வழியாக செல்லும் போதெல்லாம், அன்று, நான் நடந்த பாதை என் கண் முன் நிழலாடும். இப்பொழுது கூட மழை வந்தாலே, எனக்கு அந்த நிகழ்வு தான் நினைவுக்கு வரும்.

(கதாசிரியர் ஆ.வ. உமாதேவி, இடைநிலை ஆசிரியர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனியைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணியாற்றுகிறார்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Akshaya Tritiya 2026: அட்சய திருதியை.. எப்போது சாமி கும்பிடலாம்.. பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?

news

Kanakathara Sthothram: அட்சய திருதியை.. ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் படிப்போம்!

news

அட்சய திருதியை.. சித்திரை மாத பொன்னான நாளிது.. மூன்றாம் பிறையில் வரும் நாளிது!

news

அட்சய திருதியை அன்று...இதை வைத்துப் பூஜை செய்வோம்.. காலத்தின் அவசியம் இது!

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

அதிகம் பார்க்கும் செய்திகள்