மழையில் துளிர்த்த என் நினைவு!

Nov 29, 2025,05:19 PM IST
- ஆ.வ.உமாதேவி 

மழை வந்தாலே எனக்கு, இந்த நிகழ்வு தான் நினைவுக்கு வரும்.

நான் பத்து மாத குழந்தையாக இருந்த போதே என் தாத்தாவும் பாட்டியும் என்னை எடுத்துச் சென்று வளர்த்தனர். அவர்கள் வளர்த்ததால், அவர்கள் மீது எனக்கு அளவில்லா பாசம். எனக்கு திருமணம் ஆகி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது, என் தாத்தாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

என்னை பார்க்க வேண்டுமென அவர் விரும்பியதால், என் அப்பா என்னுடைய மாமியார் வீட்டிற்கு வந்து பெரியவர்களின் அனுமதியோடு என்னை அழைத்துச் சென்றார். நானும் அப்பாவும் பேருந்தில் சென்றோம். போகும் வழியில் சாலையின் நடுவில் கரும்பு லாரி ஒன்று கவிழ்ந்து கிடந்ததால், பேருந்து செல்ல வழி இல்லாமல் அனைத்து வாகனங்களும் வரிசையாக நின்று விட்டிருந்தன. 





என் அப்பாவிற்கு மிகுந்த வேதனையாகிவிட்டது. ஏனெனில் நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. அம்மழையில் நனைய விட்டு நிறைமாத கர்ப்பிணி பெண்ணை அழைத்து வந்து இப்படி கஷ்டப்படுத்துகிறோமே என்று அவர் மிகவும் கவலைப்பட்டார். வழியில் சாப்பிட கூட எந்த உணவும் கிடைக்கவில்லையே என அப்பா மிகுந்த வேதனை அடைந்தார். எனக்கு எந்த சிரமமும் தெரியவில்லை. காரணம் என் மனம் முழுவதும் என் தாத்தாவின் நினைவு மட்டும் தான்.

கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர் தொலைவு மழையில் நனைந்தபடி நடந்து சென்ற பின் தான் ஒரு வாகனம் கிடைத்தது. அந்த வாகனத்தில் ஏறிக்கொண்டு மருத்துவமனையை அடைந்தோம். தாத்தாவை பார்த்த போது, என் கண்களில் வந்த கண்ணீருக்கு என்னால் அணை போட முடியவில்லை. என்னை அழவேண்டாம் என, என் தாத்தா கண்களால் சைகை செய்தது இன்னும் என் நெஞ்சை விட்டு நீங்கவில்லை. அதன் பின் அவர் குணமாகி வீட்டிற்கு வந்துவிட்டார்.

எனக்கு சுகப்பிரசவம் ஆகி, பெண் குழந்தையுடன் சென்று என் தாத்தாவை பார்த்துவிட்டு வந்தேன். இன்றைக்கும் பேருந்தில் அந்த வழியாக செல்லும் போதெல்லாம், அன்று, நான் நடந்த பாதை என் கண் முன் நிழலாடும். இப்பொழுது கூட மழை வந்தாலே, எனக்கு அந்த நிகழ்வு தான் நினைவுக்கு வரும்.

(கதாசிரியர் ஆ.வ. உமாதேவி, இடைநிலை ஆசிரியர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனியைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணியாற்றுகிறார்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!

news

பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

news

எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!

news

பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்

news

“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!

news

"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!

news

மக்களவையில் 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் அமளி: தொடர்ந்து அவை ஒத்திவைப்பு!

news

பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்

news

பி.வி. சிந்துவுக்கு விராட் கோலி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஜப்பானில் நடந்த மேஜிக்!

அதிகம் பார்க்கும் செய்திகள்