அரபிக்கடலில் உருவாகிறது சக்தி புயல்.. டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கணிப்பு..!

May 20, 2025,06:49 PM IST

சென்னை: வடக்கு அரபிக் கடலில் பகுதிகளில் நாளை புதிய காற்று சுழற்சி உருவாக உள்ள நிலையில், அது படிப்படியாக வலுவடைந்து புயலாக மாறக்கூடும் என்று டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் அறிவித்துள்ளார். இந்த புயலுக்கு சக்தி என்ற பெயரிடப்படவுள்ளது.


 ஏற்கனவே மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளின்   மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடித்து வருவதால், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் தமிழகத்திலும், வட தமிழகத்திலும், மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. 


இதற்கிடையே கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடலில் நாளை ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இது அடுத்தடுத்த நாட்களில் காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், பின்னர் வடக்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவடைய கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதே சமயத்தில் தென்மேற்கு பருவமழையும் முன்கூட்டியே துவங்க இருப்பதால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.




இந்த நிலையில் நாளை உருவாகும் மேலடுக்கு சுழற்சி, புயலாக வலுப்பெற கூடும் எனவும், அந்த புயலுக்கு சக்தி என பெயரிடப்படவுள்ளதாகவும் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் அறிவிப்பு போன்ற வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, 


உருவாகிறது சக்தி புயல்! முன்னதாக  தென்மேற்கு பருவமழை துவங்கும். 


மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கர்நாடகா கடலோர பகுதிகளில் மே 23ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.


அத்தாழ்வு பகுதி படிப்படியாக வலுவடைந்து வடகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மே 25/26ம் தேதிவாக்கில் புயலாக வலுபெறக்கூடும்.


இப்புயலிற்கு இந்திய வானிலை மையம் சக்தி(Shakthi) என்று பெயரிட உள்ளது.


இப்புயலின் காரணமாக  தென்மேற்கு பருவமழை மே 24ம் தேதி துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் மே 25ம் தேதியும், ஆந்திரா, தெலுங்கானா, ராயல்சீமா உள்ளிட்ட ஒட்டுமொத்த தென் இந்தியாவிலும் மே 28ம் தேதிக்குள் தென்மேற்கு பருவமழை துவங்க சாதக சூழல் காணப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்