சென்னை: வடக்கு அரபிக் கடலில் பகுதிகளில் நாளை புதிய காற்று சுழற்சி உருவாக உள்ள நிலையில், அது படிப்படியாக வலுவடைந்து புயலாக மாறக்கூடும் என்று டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் அறிவித்துள்ளார். இந்த புயலுக்கு சக்தி என்ற பெயரிடப்படவுள்ளது.
ஏற்கனவே மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடித்து வருவதால், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் தமிழகத்திலும், வட தமிழகத்திலும், மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது.
இதற்கிடையே கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடலில் நாளை ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இது அடுத்தடுத்த நாட்களில் காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், பின்னர் வடக்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவடைய கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதே சமயத்தில் தென்மேற்கு பருவமழையும் முன்கூட்டியே துவங்க இருப்பதால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் நாளை உருவாகும் மேலடுக்கு சுழற்சி, புயலாக வலுப்பெற கூடும் எனவும், அந்த புயலுக்கு சக்தி என பெயரிடப்படவுள்ளதாகவும் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் அறிவிப்பு போன்ற வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது,
உருவாகிறது சக்தி புயல்! முன்னதாக தென்மேற்கு பருவமழை துவங்கும்.
மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கர்நாடகா கடலோர பகுதிகளில் மே 23ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
அத்தாழ்வு பகுதி படிப்படியாக வலுவடைந்து வடகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மே 25/26ம் தேதிவாக்கில் புயலாக வலுபெறக்கூடும்.
இப்புயலிற்கு இந்திய வானிலை மையம் சக்தி(Shakthi) என்று பெயரிட உள்ளது.
இப்புயலின் காரணமாக தென்மேற்கு பருவமழை மே 24ம் தேதி துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் மே 25ம் தேதியும், ஆந்திரா, தெலுங்கானா, ராயல்சீமா உள்ளிட்ட ஒட்டுமொத்த தென் இந்தியாவிலும் மே 28ம் தேதிக்குள் தென்மேற்கு பருவமழை துவங்க சாதக சூழல் காணப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்
புதிய உச்சத்தில் தங்கம் விலை... கிடுகிடு வென உயர்ந்து கிராம் 10,000த்தை கடந்தது!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 06, 2025... வருமானம் அதிகரிக்க போகும் ராசிகள்
மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை
பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும்.. இபிஎஸ்.க்கு செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு!
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா.. பாடல் புகழ்.. கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
ஒன்றிணைந்த அதிமுக.. செங்கோட்டையன் சொல்வதே சரி.. ஓபிஎஸ், நயினார் நாகேந்திரன் ஆதரவு
{{comments.comment}}