சிந்தனைச் சிதறல்.. உமிழ்ந்திடும் நீராக இல்லாமல் உறிஞ்சிடும் நீராக இருப்போம்!

Jun 13, 2026,11:49 AM IST
- அ. தாமஸ்

உமிழ்நீரின் உன்னதம் உணராமல் உமிழ்ந்திடும் உலகம் இளநீரின் சுவைக்காக உணர்ந்தே உறிஞ்சிடும். எனவே உமிழ்ந்திடும் நீராக இல்லாவிட்டாலும் உறிஞ்சிடும் நீராக இருப்போம்; எந்நிலையிலும் நம் நிலையை பிறர் அறியப் படைப்போம்; இன்று உமிழ்பவர்கள் நாளை உறிஞ்சலாம் அல்லவா?

தன்னிலை மாறாமல் தகவமைப்பதில் நீருக்கு இணை நீர் மட்டுமே.எனவே இயன்றவரை நாமும் நீராக இருப்போம் எந்நிலையிலும் நம் நிலை மாறாமல் அந்நிலைக்கும் நம்மைத் தகவமைக்க.

பல வண்ணம் இணைத்தாலும், பல்சுவை ஊட்டினாலும் நீர் நீராகவே இருக்கிறது. எந்நிலையிலும் தன் சுயத்தை இழக்காமல் இணைத்ததை இழப்பதிலும் துணிகிறது. எனவே நாமும் நீராக இருப்போம் என்றும் நம் சுயத்தை இழக்காமலே இணைத்ததை இழக்க. 



எக்கறையையும் அக்கறையை ஏற்காமலேயே கலைக்கிறது நீர் அதன் மீது கொண்ட அக்கறையால். எனவே நாமும் எக்கறையையும் கலைவோம் அக்கறையோடு அக்கறை ஏற்காமல்.

(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி.. முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன நடக்கும்?

news

தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் திமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்

news

டெல்லி ஜந்தர் மந்தரில் உச்சக்கட்ட பாதுகாப்பு: மாணவர்கள் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு

news

சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மர்

news

திருநாவுக்கரசர் நாயனார்.. நான்கு சைவக்குரவர்களில் முதன்மையான அப்பர் சாமிகள்!

news

கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஜிங்க்யா ரஹானே அறிவிப்பு!

news

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்தது ஹைகோர்ட்

news

70 வயது தேவ் ஆனந்த் மகனின் மரணம் சொல்லும் செய்தி.. 2வது ஹார்ட் அட்டாக் அபாயகரமானது?

news

நட்பு .. அன்பென்ற சொல்லின் உன்னதமான உயிர்ப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்