- அ. தாமஸ்
ஏன்? எப்படி?எதற்கு? இந்த ஆகச்சிறந்த வார்த்தைகள் தான் இவ்வுலகை உயிர்கள் வாழ தகுதிப்படுத்தி இருக்கிறது.
இவ்வார்த்தைகளைத் தேவைக்குப் பயன்படுத்தினால் உறவுகளைப் படைக்கும் இல்லையேல் உறவுகளை உடைத்து அவர்களின் உணர்வுகளையும் சிதைக்கும். எனவே கவனமாய் இருப்போம் இவ்வார்த்தைகளைக் கையாள்வதில்.

என்ன ஆயிற்று? என்று கேட்க மாட்டார்களா என்று எதிர்பார்க்கும் உற்றோரிடமும் நம் பெற்றோரிடமும் கேட்க மறுக்கும் பலருக்கோ அதை கேட்கவே விரும்பாத மற்றோரிடம் கேட்பதில் எவ்வளவு ஆனந்தம்? நம் தகுதி அறியாமல் பிறரைப் பற்றி அறிய நினைப்பது அவசியம் இல்லை தானே.
வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே அவை நல்லவையாகவும் கெட்டவையாகவும் அடையாளப்படுத்தப் படுகிறது.
"மிக்க மகிழ்ச்சி"என்ற வார்த்தையை பிறப்பில் ஏற்கிறோம் இறப்பில் ஏற்கிறோமா? எனவே வார்த்தைகளை வைத்து வாதம் செய்யாமல் அதன் அவசியம் குறித்தும் அறிவதே சிறப்பு.
விதை எத்தகையது என்று விளைச்சலே தீர்மானிக்கிறது. அது போலவே நாம் பேசும் வார்த்தைகளும் எத்தகையது என்பதை அதன் விளைவுகளே தீர்மானிக்கிறது. எனவே விதை வீரியமானது என்றாலும் அதை தகுதியான இடத்திலும் விதத்திலும் விதைத்திட விளைவோம்.
தகுதியற்ற வார்த்தைகளைத் தவிர்ப்போம் தகுதியான உறவுகளை நினைப்போம். அவர்களின் வளர்ச்சியில் தினம் நம்மையும் இணைப்போம்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)
Rathi's Kitchen: நாக்கு சப்புக் கொட்டி சாப்பிட வைக்கும்.. நார்ச் சத்து மிகுந்த துவையல்!
கனவுகள் மெய்ப்படும்!
Wonder Words: ஏன்.. எப்படி .. எதற்கு?.. விந்தையான வார்த்தைகள்!
பலவண்ணம்!
எதிர்பாராமல் கிடைத்த உதவிக்கு என்றுமே கடமைப்படு!
Thangalakshmi Short Story: உண்மை என்பது இவ்வுலகில் இல்லை
காரைக்குடியில் மக்கள் கூட்டத்திற்கு நடுவே சைக்கிள் ஓட்டிய விஜய்...ஸ்தம்பித்த சாலைகள்
இணையத்தில் கசிந்த விஜய்யின் 'ஜனநாயகன்' சீன்ஸ்...ரசிகர்கள் கொதிப்பு
ஜனநாயகன் திரைப்படத்திற்காக முதல் ஆளாக குரல் கொடுத்த சிவகார்த்திகேயன்
{{comments.comment}}