- ஸ்வர்ணலட்சுமி
விசுவாவசு வருடம் 2025, ஜூலை 17ஆம் தேதி வியாழக்கிழமை அன்று ஆடி மாதம் பிறந்துள்ளது. ஆடி மாதத்தின் சிறப்புகளைக் காணலாம்.
ஆடி மாதம் என்றாலே அம்மன் வழிபாடுகளும், கிராம தெய்வங்களும், எல்லை காவல் தெய்வங்களும் குறிப்பாக மாரியம்மனுக்கு திருவிழா நடக்கும் மாதம் ஆகும்.
ஆடி முதல் நாள் தொடங்கி மாதம் முழுவதும் பல விசேஷங்கள் உள்ளது .ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய் ,ஆடிப்பூரம் ஆடிப்பெருக்கு (ஆடி பதினெட்டு) என பல விசேஷங்கள் உடைய சிறப்பான மாதமாகும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களில் விசேஷ பூஜைகள் இன்று நடைபெறுகிறது .ஆடி மாதம் தேய்பிறை அஷ்டமி நாளன்று பிறக்கிறது .ஆடி மாதத்தின் தொடக்கம் ஜூலை 17 வியாழக்கிழமை துவங்கி ஆகஸ்ட் 16 சனிக்கிழமை அன்று முடிவடைகிறது.

ஆடி மாதம் என்றாலே சக்தி அதாவது பார்வதி தேவியின் சக்தி சிவனின் சக்தியை விட அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம். இம்மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை , செவ்வாய்க்கிழமை, கிருத்திகை ,அமாவாசை பௌர்ணமி என அனைத்து நாட்களுமே சிறப்பான நாட்களாகும்.
சேலம் ,நாமக்கல் ,ஈரோடு போன்ற மாவட்டங்களில் ஆடி முதல் நாளை முன்னிட்டு தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்படுகிறது.தேங்காய் சுடும் முறை : தேங்காயினை அதன் மீது உள்ள நார் போக கல்லில் நன்றாக தேய்த்து, பிறகு தேங்காயின் கண்களை திறந்து அதில் உள்ள நீரை வெளியேற்றி அதன் உள் பொட்டுக்கடலை ,பச்சரிசி வெல்லம் ,எள்ளு , ஏலக்காய் போன்றவற்றை கலந்து தேங்காயில் வைத்து ,அழிஞ்சி மர குச்சியை சொருகி நெருப்பு மூட்டி தீயில் வாட்டி சுடுவார்கள். அந்த சுட்ட தேங்காயை பிரசாதமாக கோவிலில் படைத்து குடும்பத்தில் உள்ள அனைவரும் பகிர்ந்து சாப்பிடுவது வழக்கம்.
புராணங்களின்படி மகாபாரதப் போர் ஆடி 1ஆம் தேதி தொடங்கி 18 நாட்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதனால்தான் எந்த ஒரு நல்ல காரியங்களையும் இந்த 18 நாட்கள் செய்வதை தவிர்ப்பார்கள். இதனை போர் காலம் என்று அழைப்பர். புதிதாக திருமணம் நடைபெற்ற தம்பதியரை பெண் வீட்டார் அழைத்து விருந்து உபசரணை செய்து கொண்டாடி மகிழ்வர்.
தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்திராயண காலமாகவும் ,ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயன காலமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. "ஆடிப்பட்டம் தேடி விதை" என்ற பழமொழிக்கேற்ப இந்த மாதத்தில் விதை விதைப்பதை முன்னோர்கள் மேற்கொண்டனர். ஏனெனில் ,தட்சிணாயன காலம் அதாவது ஆடி மாதத்தில் சூரியனின் ஒளி கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும்.
மேலும் ஆடி மாதம் அம்மனுக்கு வேப்பிலையை சாற்றி வழிபடுவதும், கூழ் ஊற்றும் விழா நடத்துவதும் பரவலாக நடைபெற்று வருகிறது.ஆடி மாதத்தில் வேப்பிலை கொழுந்துகளுக்கு அபார மருத்துவ மற்றும் தெய்வீக குணம் உண்டு என்று கூறப்படுகிறது .ஆடி மாதத்தில் பொதுவாகவே காற்று மிகவும் அதிகமாக வீசும் அதற்காகவே எளிதில் ஜீரணம் செய்யக்கூடிய வகையில் கூழ் அருந்துவது நல்லது இது ஆரோக்கியம் மேம்படும்.
கோவை கரூர் திருப்பூர் சேலம் போன்ற கொங்கு மண்டல பகுதிகளில் ஆடி முதல் நாள் அன்று தேங்காய் சுடும் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல்களை பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், நீங்காத செல்வம் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆடி மாதம் பீடை மாதம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் அதன் உண்மை யாதெனில் பீட மாதம் என்பதுதான் அதன் பெயர், அதாவது பீடத்தில் இறைவனை வைத்து வழிபட வேண்டிய மாதம். ஆடி மாதத்தில் அம்பிகை வழிபட வீட்டில் சுப காரியங்கள் தடை இன்றி நடைபெறும் என்பது நம்பிக்கை.
இவ்வாறு ஆடி மாதம் முழுவதும் அம்பிகையை வழிபட்டு அனைவரும் நல்வாழ்வு வாழ்வோமாக வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி .
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}