- பாவலர் மாயோன் மங்கை
காவிரியின்
கரையோரம்
கண்களிலே
காதலதைச்
சொன்னதும்
வைகறைப்
பொழுதினிலே
வாசலிலே
நேசமாகப்
பார்த்ததும்
திருவிழாக்
கூட்டத்திலே
இருவருமாகப்
பேசிப்பேசிச்
சிரித்ததும்
கைகளால்
சிறையிட்டு
கன்னத்தில்
முத்த மழை
சிந்தியதும்

மழையில்
செடியடியே
கிளையாட்டி
நனையவே
செய்ததும்
கோவிலிலே
காதலுக்காய்
காத்திருந்து
கண்டதுமே
கனிந்ததும்
பரிசாக
தாவணியைத்
தந்ததுமே
அழகாக
அணிவித்ததும்
செல்லுமிடம்
சிலையாகவும்
நிற்குமிடம்
நிழலாகவும்
நினைவானவனே
நிசமாக
நெஞ்சிலே
சுமந்திருந்த
நாட்களை
எண்ணுகிறேன்
அலையிலே
மிதக்கும்
துறும்பாக
ஆடுகிறேன்
அழுகிறேன்
பிரியாத
பிரியங்களைப்
பிரித்தெடுத்து
பித்தாக்கிய
பிரியமானவனே
வெள்ளத்தில்
விட்டதேனடா
வான் மழையும் காற்றும் தந்து வாழ்வு கொடுக்கும் மரங்களே!
வாசித்த இதயத்தில் யாசிக்க வந்த வரிகள் நீ
Book Review - புத்தக விமர்சனம்.. திட்டம் 6
நட்பற்ற வாழ்க்கையில் முழுமையாகாது நாளும்!
நிழலாக நீயும் நிசமாக நானும்!
தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!
ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை
{{comments.comment}}