- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
புவி மகள் போற்றும்
நதி மகளே!
கலை மகள் வாழ்த்தும்
குல மகளே!
எப்போதும் எனை நேசிக்கும்
திருமகளே!
முப்போதும் உனை நினைக்கும்
நான் ஒரு கவிஞனே!
பூ வனமாய் நான் இருக்கிறேன்
தாழம் பூவே!
எழிலுக்கு எழில் சேர்க்கும்
என்னுயிரே!

நீ நிலவா மலரா
ஓவியமே!
என் நினைவே நீதான்
காவியமே!
நீ மொழியினில் அழகிய
செந்தமிழே!
என் சித்திரை வானத்துப்
பௌர்ணமியே!
இமை மூடித் தூங்குகையில்
வரும் கனவே!
எப்போதும் எனை மகிழ்விக்கும்
இனிய நினைவே!
கார் கூந்தல் கலையாத
மேகமே!
நீ இருக்கையில் எனக்கில்லை
சோகமே!
வாழ்வாங்கு நாம் வாழ்வோம்
பூரணமே!
நமை வாழ்த்திட வருவரோ
வானவரே!
நாம் நன்றி கூறி வணங்கிடுவோம்
அந்தத் தெய்வத்தையே!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்).
தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!
ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை
கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை
வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!
வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!
கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!
தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!
{{comments.comment}}