இமைப் பொழுதும் நமைப் பிரியா ஆண்டவனுக்கு நன்றி !

Jul 31, 2026,02:53 PM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


எப்போதும் 

இணை பிரியா 

என் ப்ரிய

என்னவளே! 


முப்போதும் 

உனைப் பிரியா 

வரம் கேட்கும் உன்

மன்னவன் நான்! 


இமைப் பொழுதும் நமைப்

பிரியா ஆண்டவனுக்கு 

நன்றி சொல்லி

வாழ்கிறோம் நாம்! 


தனைப் பிரியாத் தாயோடு

வாழும் சேய் போல

நம்மையும் வாழ வைக்கிறான் இறைவன்!




பொருள் பிரியாச்

சொல்லோடு எழுதியக்

கவிதை போல

இனிக்கிறது நம் வாழ்க்கை!


திருவருள் புரியும் தில்லை 

அம்பலத்தானால் நமைப்

பிரியா இன்பமே நமக்கு எப்போதுமே!


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?

news

மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!

news

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?

news

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

news

காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)

news

அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!

news

மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!

news

சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்