தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

Nov 21, 2024,06:22 PM IST

சென்னை: நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் நவம்பர் 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று  சென்னை குடும்ப நல நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


நடிகர் தனுஷுக்கும், நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவிற்கும் கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.


தனுஷ்- ஐஸ்வர்யா இடையேயான கருத்துவேறுபாட்டை சரிசெய்ய அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் 

முயற்சித்து வந்தனர். ஆனால், இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து இவ்விருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.




இந்த மனுவை விசாரித்த நீதிபதி தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.  இந்த மனு மீதான விசாரணை கடந்த 2ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் நேரில் ஆஜராகவில்லை. இதனால் இந்த வழக்கு விசாரணையை குடும்பநல கோர்ட் நவம்பர் 21ம் தேதிக்கு தள்ளி வைத்தது. அன்று இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று கோர்ட் தெரிவித்திருந்தது.


இந்நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது முதலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆஜராகியிருந்தார். தனுஷ் வந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 12 மணிக்கு மேல் விசாரணை தொடங்கியது. இருவரும் அப்போது ஆஜரானார்கள். விவாகரத்து பெறுவதில் இருவரும் உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார். அன்றே அவர்களுக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளிக்கப்படும் என்று தெரிகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..வருகிற 15ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி:வானிலை மையம்

news

திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல் தான் உள்ளனர் கூட்டணி கட்சிகள்: செல்லூர் ராஜூ விமர்சனம்!

news

சேலம் வருகிறார் விஜய்.. நாளை நிர்வாகிகள் சந்திப்பு.. 4,998 பேருக்கு மட்டுமே அனுமதி!

news

சத்துணவு ஊழியர்கள் போராட்டம்: நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்

news

தொலைந்த பைசா தினம்.. ஆமாங்க.. இப்படியும் ஒரு தினம் இருக்கு.. அதுவும் இன்றுதான் அது!

news

கமகமக்கும் இறால் தொக்கு.. நம்ம ஊரு ஸ்டைல்ல.. சாப்ட்டுப் பாருங்க.. நாக்கு ஊறும்!

news

தாயையும் தம்பியையும்.. பள்ளியில் புகுந்து மாணவர்களை வேட்டையாடிய 18 வயது திருநங்கை!

news

கல்யாணம் காது குத்தா.. சுப நிகழ்ச்சிகளுக்கு இனி அரசு பேருந்து உங்கள் வாசலில்!

news

ஒரு சிறு பயணம்.. நிறைவாக கடப்போம்.. A Short Journey

அதிகம் பார்க்கும் செய்திகள்