சென்னை: நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் நவம்பர் 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை குடும்ப நல நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நடிகர் தனுஷுக்கும், நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவிற்கும் கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
தனுஷ்- ஐஸ்வர்யா இடையேயான கருத்துவேறுபாட்டை சரிசெய்ய அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள்
முயற்சித்து வந்தனர். ஆனால், இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து இவ்விருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த 2ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் நேரில் ஆஜராகவில்லை. இதனால் இந்த வழக்கு விசாரணையை குடும்பநல கோர்ட் நவம்பர் 21ம் தேதிக்கு தள்ளி வைத்தது. அன்று இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று கோர்ட் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது முதலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆஜராகியிருந்தார். தனுஷ் வந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 12 மணிக்கு மேல் விசாரணை தொடங்கியது. இருவரும் அப்போது ஆஜரானார்கள். விவாகரத்து பெறுவதில் இருவரும் உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார். அன்றே அவர்களுக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளிக்கப்படும் என்று தெரிகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}