சென்னை: நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் நவம்பர் 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை குடும்ப நல நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நடிகர் தனுஷுக்கும், நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவிற்கும் கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
தனுஷ்- ஐஸ்வர்யா இடையேயான கருத்துவேறுபாட்டை சரிசெய்ய அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள்
முயற்சித்து வந்தனர். ஆனால், இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து இவ்விருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த 2ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் நேரில் ஆஜராகவில்லை. இதனால் இந்த வழக்கு விசாரணையை குடும்பநல கோர்ட் நவம்பர் 21ம் தேதிக்கு தள்ளி வைத்தது. அன்று இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று கோர்ட் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது முதலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆஜராகியிருந்தார். தனுஷ் வந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 12 மணிக்கு மேல் விசாரணை தொடங்கியது. இருவரும் அப்போது ஆஜரானார்கள். விவாகரத்து பெறுவதில் இருவரும் உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார். அன்றே அவர்களுக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளிக்கப்படும் என்று தெரிகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல்.. விஜய் வழி தனி வழி.. தெளிவா சொல்லிட்டாரு.. 4 முனைப் போட்டிதான்!
அரசியல் ஆலோசகர் பிரஷாத் கிஷோர் விலகலுக்கு.. விஜய்யின் அதிரடி அறிவிப்பே காரணமா?
கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான காலியிடங்களை நிரப்ப தடை போடுவது ஏன்? டாக்டர் அன்புமணி
தேர்தலுக்குத் தேர்தல்.. படிப்படியாக முன்னேறும் சீமான்.. 2026 தேர்தலில் யாருக்கெல்லாம் ஆப்பு?
என்னைப் பற்றி பேசுவதாக நினைத்துக்கொண்டு தன்னைப் பற்றி பேசுகிறார் முதலமைச்சர்: எடப்பாடி பழனிச்சாமி!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு!
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில்.. குஷ்பு, கெளதமி.. எந்தெந்த நடிகைகள் போட்டியிட சீட் கிடைக்கும்?
முருகனின் 2ம் படை வீடான.. திருச்செந்தூரில் ஜூலை 7 கும்பாபிஷேகம்.. போலீஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பாகிஸ்தானுக்கு பை பை சொல்கிறது மைக்ரோசாப்ட்.. ஊழியர்களைக் குறைத்து வந்த நிலையில் மூடு விழா!
{{comments.comment}}