சென்னை: நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் நவம்பர் 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை குடும்ப நல நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நடிகர் தனுஷுக்கும், நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவிற்கும் கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
தனுஷ்- ஐஸ்வர்யா இடையேயான கருத்துவேறுபாட்டை சரிசெய்ய அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள்
முயற்சித்து வந்தனர். ஆனால், இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து இவ்விருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த 2ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் நேரில் ஆஜராகவில்லை. இதனால் இந்த வழக்கு விசாரணையை குடும்பநல கோர்ட் நவம்பர் 21ம் தேதிக்கு தள்ளி வைத்தது. அன்று இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று கோர்ட் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது முதலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆஜராகியிருந்தார். தனுஷ் வந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 12 மணிக்கு மேல் விசாரணை தொடங்கியது. இருவரும் அப்போது ஆஜரானார்கள். விவாகரத்து பெறுவதில் இருவரும் உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார். அன்றே அவர்களுக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளிக்கப்படும் என்று தெரிகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தீபாவளி ஸ்வீட்ஸ் மட்டும் போதுமா.. சூடான மொறுமொறு ஓமம் பக்கோடா செய்யலாமா!
தீபாவளி என்ற பெயர் வந்தது எப்படி.. பாதுகாப்பாக எப்படிக் கொண்டாடலாம்?
தீபாவளி தீபாவளி.. சூப்பரா காஜு கத்திலி செய்வோம்.. ஸ்வீட்டா பண்டிகையை கொண்டாடுவோம்
விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை
ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்
ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏரி, டிவி விற்பனை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
கரூர் துயரம் எதிரொலி.. தீபாவளி கொண்டாட வேண்டாம்.. தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்
எனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்க வேண்டாம்.. விட்ருங்க.. அண்ணாமலை கோரிக்கை
{{comments.comment}}