நற்பணி செய்தவர்கள்.. இன்று நாட்டுப்பணி செய்யுங்கள்.. தொண்டர்களுக்கு கமல்ஹாசன் அட்வைஸ்!

Apr 03, 2024,03:52 PM IST

புதுச்சேரி: நற்பணி செய்தவர்கள் இன்று நாட்டுப்பணி செய்யுங்கள் என்று கட்சி நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.


நாடாளுமன்ற தேர்தல் இந்த மாதம் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சி தலைவர்கள், தொண்டர்கள், வேட்பாளர் என அனைவரும் கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். 2024ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணியில் சேர்ந்துள்ளது. இருப்பினும் இத்தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடவில்லை. ராஜ்யசபா தேர்தலில் ஒரு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.




இந்த நிலையில், திமுக கூட்டணியில் உள்ள  கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மநீம தலைவர் தொடர்ந்து பிரச்சாரம் செய்து ஓட்டு சேகரித்து வருகிறார். இன்று புதுச்சேரி வந்த மநீம கட்சி தலைவர் கமலஹாசன் விமான நிலையத்தில்  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 

நானும் மக்களில் ஒருவன் என்பதனால் என் மனநிலை தான் அவர்களுக்கும் இருக்கும் என்று எதிர்பார்கிறேன். மாற்றம் என்பது இப்போது முக்கியம் இல்லை.நம்முடைய குடியுரிமை, கன்ஸ்டிடியூசனை முதற்கொண்டு அனைத்தையும் தற்காத்துக் கொள்ளும் நேரம் இது. அதனால், கட்சி என்கிற வரையறை கோட்டையெல்லாம் கடந்து வந்திருக்கின்றேன். தமிழன் என்பதும் இந்தியன் என்பது தான் இன்று பிரதானமானதாக இருக்கிறது.


நீதி தான் நமக்கு நாதி என்றாகி விட்டது. ஜனநாயகத்தில் அப்படி இருக்கக் கூடாது. ஜனநாயகமாகவே இது  நீடிக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகளில்  முதற்கட்டமாக இப்பொழுது இந்த தேர்தலை நான் பார்கிறேன்.இது எல்லாம் மக்களுக்கு நன்றாகவே தெரியும். நான் அறிவுரை செல்ல வேண்டியது இல்லை. செய்ய வேண்டியது என்னவென்று நான் சுருக்கமாகவே சொல்லி விட்டேன். அதில் இருந்து புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கின்றேன்.நற்பணி செய்தவர்கள் இன்று நாட்டுப்பணி செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

news

மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?

news

விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!

news

அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!

அதிகம் பார்க்கும் செய்திகள்