சப்பையா ஒருத்தன் என்னைய ஏமாத்திட்டுப் போய்ட்டான்.. வெறுத்துப் போன மிர்ச்சி செந்தில்!

Feb 24, 2025,06:13 PM IST

சென்னை: சீரியல் நடிகர் மிர்ச்சி செந்திலிடம் ஒரு பிராடு நபர், போலியான வாட்ஸ் ஆப் செய்தி மூலம் ரூ. 15,000 பணத்தை ஆட்டையைப் போட்டுள்ளார். 


இது டிஜிட்டல் யுகம். எனவே மோசடிகளும் கூட டிஜிட்டல் மயமாகி விட்டது. விதம் விதமாக தினுசு தினுசாக ஏமாற்றுகிறார்கள். இதில் படிக்காதவர்கள்தான் என்று இல்லாமல் படித்தவர்களும், விவரமானவர்களும் கூடத்தான் நிறைய ஏமாந்து போகிறார்கள். இப்படி நூதனமாக ஏமாந்தவர்கள் லிஸ்ட்டில் நடிகர் செந்திலும் லேட்டஸ்டாக இணைந்துள்ளார்.


விஜய் டிவி  மூலம் பிரபலமானவர் மிர்ச்சி செந்தில். சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமான மிர்ச்சி செந்தில் மேலும் சில சீரியல்களிலும் நடித்து ஃபேமஸானர். பெரிய திரையிலும் தவமாய் தவமிருந்து, வெண்ணிலா வீடு என்று சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.




இவருக்கு  கோயமுத்தூரைச் சேர்ந்த நண்பரான ஒரு ஓட்டல் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து குறுஞ்செய்தி வாட்ஸ் அப்பில் வந்து இருக்கிறது. அதில்  தனக்கு 15,000 பணம் அனுப்ப முடியுமா அந்த மெசேஜில் கேட்கப்பட்டுள்ளது. மிகவும் நெருங்கிய நண்பராச்சே என்று நினைத்த செந்தில், கொஞ்சமும் யோசிக்காமல், உடனே அவரிடம் ஜி பே நம்பர் வாங்கி பணத்தை அனுப்பியிருக்கிறார்.


பணம் போன பிறகுதான் பெயர் தேவேந்தர் என்று வந்துள்ளது. இதையடுத்து ஷாக்கான அவர் அய்யயோ இது ஸ்கேம் போலத் தெரிகிறதே என்று பயந்து, சம்பந்தப்பட்ட கோவைக்காரருக்கு போன் செய்து கிராஸ் செக் செய்திருக்கிறார். அப்போதுதான் தெரிந்திருக்கிறது, தான் 15,000 ஏமாந்திருக்கிறோம் என்று.


ஆன்லைன் ஸ்கேமில் இப்படி புதுசாக பணம் ஏமாற்ற ஏமாற்றுகிறார்கள். மக்களே கவனமா இருங்க என்று கூறி தான் ஏமாந்த கதையை இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்து... இனி மக்கள் யாரும் இப்படி ஏமாறாதீர்கள், உஷாராக இருங்கள் என்று கூறியுள்ளார் மிர்ச்சி செந்தில்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்வி, இசை, கலைமற்றும் அறிவின் தெய்வம்.. சரஸ்வதிக்குப் பெயர் வந்தது எப்படி?

news

தங்கம், வெள்ளி விலையில் தினம் தினம் புதிய உச்சம்... இன்றைய விலை நிலவரம் இதோ!

news

கரூர் சம்பவத்திற்குப் பின்.. விஜய்யுடன் பேசிய முதல் தலைவர்.. ராகுல் காந்தி திடீர் பேச்சு ஏன்?

news

நாங்க புறக்கணிச்சா அதுக்காக கோப்பையைக் கொடுக்காம போவீங்களா.. இந்தியா கடும் கோபம்

news

கரூர் கூட்ட நெரிசல் துயரம்.. கவலைப்படாதீங்க விஜய்.. போன் செய்து ஆறுதல் கூறிய ராகுல் காந்தி

news

ஆசிய கோப்பையை வாங்க மறுத்த இந்திய கேப்டன்.. வெறும் கையால் கொண்டாடிய இந்திய அணி!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 29, 2025... இன்று வெற்றிகளை குவிக்க போகும் ராசிகள்

news

கரூர் சம்பவம் எதிர்பாராத விபத்து அல்ல.. தவெக முறையீடு.. நாளை மதுரை ஹைகோர்ட் பெஞ்சில் விசாரணை

news

கரூர் துயரம்.. பலியானோர் குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு - பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்