சப்பையா ஒருத்தன் என்னைய ஏமாத்திட்டுப் போய்ட்டான்.. வெறுத்துப் போன மிர்ச்சி செந்தில்!

Feb 24, 2025,06:13 PM IST

சென்னை: சீரியல் நடிகர் மிர்ச்சி செந்திலிடம் ஒரு பிராடு நபர், போலியான வாட்ஸ் ஆப் செய்தி மூலம் ரூ. 15,000 பணத்தை ஆட்டையைப் போட்டுள்ளார். 


இது டிஜிட்டல் யுகம். எனவே மோசடிகளும் கூட டிஜிட்டல் மயமாகி விட்டது. விதம் விதமாக தினுசு தினுசாக ஏமாற்றுகிறார்கள். இதில் படிக்காதவர்கள்தான் என்று இல்லாமல் படித்தவர்களும், விவரமானவர்களும் கூடத்தான் நிறைய ஏமாந்து போகிறார்கள். இப்படி நூதனமாக ஏமாந்தவர்கள் லிஸ்ட்டில் நடிகர் செந்திலும் லேட்டஸ்டாக இணைந்துள்ளார்.


விஜய் டிவி  மூலம் பிரபலமானவர் மிர்ச்சி செந்தில். சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமான மிர்ச்சி செந்தில் மேலும் சில சீரியல்களிலும் நடித்து ஃபேமஸானர். பெரிய திரையிலும் தவமாய் தவமிருந்து, வெண்ணிலா வீடு என்று சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.




இவருக்கு  கோயமுத்தூரைச் சேர்ந்த நண்பரான ஒரு ஓட்டல் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து குறுஞ்செய்தி வாட்ஸ் அப்பில் வந்து இருக்கிறது. அதில்  தனக்கு 15,000 பணம் அனுப்ப முடியுமா அந்த மெசேஜில் கேட்கப்பட்டுள்ளது. மிகவும் நெருங்கிய நண்பராச்சே என்று நினைத்த செந்தில், கொஞ்சமும் யோசிக்காமல், உடனே அவரிடம் ஜி பே நம்பர் வாங்கி பணத்தை அனுப்பியிருக்கிறார்.


பணம் போன பிறகுதான் பெயர் தேவேந்தர் என்று வந்துள்ளது. இதையடுத்து ஷாக்கான அவர் அய்யயோ இது ஸ்கேம் போலத் தெரிகிறதே என்று பயந்து, சம்பந்தப்பட்ட கோவைக்காரருக்கு போன் செய்து கிராஸ் செக் செய்திருக்கிறார். அப்போதுதான் தெரிந்திருக்கிறது, தான் 15,000 ஏமாந்திருக்கிறோம் என்று.


ஆன்லைன் ஸ்கேமில் இப்படி புதுசாக பணம் ஏமாற்ற ஏமாற்றுகிறார்கள். மக்களே கவனமா இருங்க என்று கூறி தான் ஏமாந்த கதையை இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்து... இனி மக்கள் யாரும் இப்படி ஏமாறாதீர்கள், உஷாராக இருங்கள் என்று கூறியுள்ளார் மிர்ச்சி செந்தில்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு நாள்: தமிழின் இனிமையும் பண்பாடும் தலைமுறை கடந்தும் தழைத்தோங்கும்.. முதல்வர் விஜய்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

news

ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?

news

ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்

news

ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்

news

சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!

news

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா

news

ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்