குவியும் பாலியல் புகார்கள்.. மோகன்லால் உள்ளிட்ட.. மலையாள நடிகர் சங்க நிர்வாகிகள்.. கூண்டோடு விலகல்

Aug 27, 2024,06:50 PM IST

கொச்சி: மலையாளத் திரையுலைகில் தொடர்ந்து பாலியல் புகார்கள் எழுந்து வரும் நிலையில் நடிகர் மோகன்லால் நடிகர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மலையாள சினிமாவில் பெண்களுக்கு எதிராக  பாலியல் வன்கொடுமைகள்  குறித்து நீதிபதி ஹேமா தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது.  இந்த கமிட்டி, மொத்தம் 235 பக்கங்கள் கொண்ட அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையை சமீபத்தில் கேரள அரசு வெளியிட்டது. 

அதில் மலையாளத் திரையுலகில் பெண்கள் இழிவாக நடத்தப்படுவதாகவும், பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாவதாகவும், அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படுவதில்லை என்றும் சரமாரியான புகார்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. இந்த அறிக்கை மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



இதையடுத்து பல்வேறு நடிகைகள் நடிகர்கள், இயக்குநர்கள் மீது சரமாரியாக பாலியல் புகார்களைக் கூற ஆரம்பித்தனர். நடிகர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் எடவேலா பாபு அநாகரிகமாக நடந்து கொண்டதாக நடிகை மினு முந்நீர் வெளிப்படையாக கூறியிருந்தார். அதைப்போல், மேற்கு வங்க நடிகை ஸ்ரீலேகா மித்திரா சினிமா அகாடமி தலைவர் ரஞ்சித் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறினார். இவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ரஞ்சித் தன்னுடைய அகாடமி தலைமை பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து ரேவதி சம்பத், நடிகரும், நடிகர் சங்க பொதுச் செயலாளருமான சித்திக் மீது பாலியல் புகார்களை தெரிவித்து வந்தார். நடிகர் ரியாஸ் மீதும் இவர் புகார் கூறியிரு்நதார். இதன் காரனமாக நடிகர் சங்க பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நடிகர் சித்திக் தனது பதவியை ராஜினாமா செய்தார்.   மலையாளத் திரை உலகில் தொடர்ந்து நடிகைகள் பாலியல் புகார் தெரிவித்து வரும் நிலையில் மலையாள திரை உலகில் பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் மலையாள நடிகர் சங்க தலைவரும், நடிகருமான மோகன்லால் நடிகர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து இன்று ராஜினாமா செய்தார். அதேபோல் அம்மா-வின் நிர்வாகிகள் அனைவரும் மொத்தமாக ராஜினாமா செய்து விட்டனர். அம்மா செயற்குழு முற்றிலும் கலைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்

news

காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!

news

மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

news

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.

அதிகம் பார்க்கும் செய்திகள்