குவியும் பாலியல் புகார்கள்.. மோகன்லால் உள்ளிட்ட.. மலையாள நடிகர் சங்க நிர்வாகிகள்.. கூண்டோடு விலகல்

Aug 27, 2024,06:50 PM IST

கொச்சி: மலையாளத் திரையுலைகில் தொடர்ந்து பாலியல் புகார்கள் எழுந்து வரும் நிலையில் நடிகர் மோகன்லால் நடிகர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மலையாள சினிமாவில் பெண்களுக்கு எதிராக  பாலியல் வன்கொடுமைகள்  குறித்து நீதிபதி ஹேமா தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது.  இந்த கமிட்டி, மொத்தம் 235 பக்கங்கள் கொண்ட அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையை சமீபத்தில் கேரள அரசு வெளியிட்டது. 

அதில் மலையாளத் திரையுலகில் பெண்கள் இழிவாக நடத்தப்படுவதாகவும், பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாவதாகவும், அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படுவதில்லை என்றும் சரமாரியான புகார்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. இந்த அறிக்கை மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



இதையடுத்து பல்வேறு நடிகைகள் நடிகர்கள், இயக்குநர்கள் மீது சரமாரியாக பாலியல் புகார்களைக் கூற ஆரம்பித்தனர். நடிகர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் எடவேலா பாபு அநாகரிகமாக நடந்து கொண்டதாக நடிகை மினு முந்நீர் வெளிப்படையாக கூறியிருந்தார். அதைப்போல், மேற்கு வங்க நடிகை ஸ்ரீலேகா மித்திரா சினிமா அகாடமி தலைவர் ரஞ்சித் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறினார். இவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ரஞ்சித் தன்னுடைய அகாடமி தலைமை பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து ரேவதி சம்பத், நடிகரும், நடிகர் சங்க பொதுச் செயலாளருமான சித்திக் மீது பாலியல் புகார்களை தெரிவித்து வந்தார். நடிகர் ரியாஸ் மீதும் இவர் புகார் கூறியிரு்நதார். இதன் காரனமாக நடிகர் சங்க பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நடிகர் சித்திக் தனது பதவியை ராஜினாமா செய்தார்.   மலையாளத் திரை உலகில் தொடர்ந்து நடிகைகள் பாலியல் புகார் தெரிவித்து வரும் நிலையில் மலையாள திரை உலகில் பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் மலையாள நடிகர் சங்க தலைவரும், நடிகருமான மோகன்லால் நடிகர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து இன்று ராஜினாமா செய்தார். அதேபோல் அம்மா-வின் நிர்வாகிகள் அனைவரும் மொத்தமாக ராஜினாமா செய்து விட்டனர். அம்மா செயற்குழு முற்றிலும் கலைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆம்புலன்ஸ் தெரியும்.. அதுக்கு ஏன் அந்தப் பேரு வந்துச்சுன்னு உங்களுக்குத் தெரியுமா?

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

news

ஈரான் இறக்குமதி பாதிப்பு...தத்தளிக்கும் தூத்துக்குடி தீப்பெட்டித் தொழில்

news

தவெக வேட்பாளர்களுடன் விஜய் நேர்காணல் ...அப்போ சிபிஐ சம்மன் என்னாச்சு?

news

சிலிண்டர் தட்டுப்பாடு...பிரதமர் மோடி பதவி விலக எதிர்க்கட்சிகள் முழக்கம்

news

வாட்ஸ் அப்தான் கையில் இருக்கே.. இனி ஈஸியாக ஆம்புலன்ஸை அழைக்கலாம்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்