திருவனந்தபுரம்: இந்தியாவிலேயே சிறந்த நடிகர் சங்கம் அம்மா சங்கம்தான். அந்த சங்கத்தை அழித்து விடக் கூடாது. எல்லோருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லும் பொறுப்பு உள்ளது. மலையாள திரையுலகம் பாலிவுட் போன்று பிரமாண்டமானது அல்ல, கஷ்டப்பட்டு முன்னேறி வந்துள்ளது. நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை. கேரளாவில் தான் இருக்கிறேன் என்று நடிகர் மேகன்லால் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் கேரளாவில் வெளியிடப்பட்ட ஹேமா கமிட்டி அறிக்கையால் கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டில் மலையாள நடிகை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கில் கேரள அரசால் அமைக்கப்பட்டது தான் ஹேமா தலைமையிலான குழு. இந்த குழுவின் அறிக்கை கடந்த வாரம் வெளியானது. அதில் மலையாள திரையுலகில் பணிபுரியும் பெண்கள் பலரும் அடுக்கவுக்கான பாலியல் குற்றச்சாட்டுகுளை முன்வைத்தனர். இதன் காரணமாக மலையாள நடிகர் சங்கம் 'அம்மா' கலைக்கப்பட்டது. நடிகர் சங்க தலைவாக இருந்த மோகன்லால் உட்பட 17 நிர்வாகிகளும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

அதன்பின்னர் அமைதி காத்து வந்த நடிகர் மோகன்லால், இன்று திருவனந்தபுரத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அதிரடியாக பேசினார். அவர் கூறுகையில், உங்களது எந்தக் கேள்விக்கும் என்னிடம் பதில் இல்லை. அம்மா அமைப்பில் இரண்டு முறை நான் தலைவராக இருந்தேன். குழு கலைக்கப்பட்டாலும் சங்க செயல்பாடு தடைப்படவில்லை.
பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சைகளுக்கு ஒட்டுமொத்த கேரளா திரையுலகம் பதில் சொல்லும். அந்தப் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. மலையாள திரையுலகம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். சாட்சியங்களுடன் புகார் அளிக்கும் பட்சத்தில் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு அம்மா அமைப்பை மட்டும் குறை சொல்வதில் நியாயம் இல்லை. பாலியல் புகாரால் மலையாளத் திரையுலகில் உள்ள கடைநிலை ஊழியர்கள் பாதிக்கப்படக்கூடாது. திரைப்பட நடிகர் சங்கம் ஆனா அம்மா சங்கம் மீது அவதூறு பரப்ப வேண்டாம். வயநாடு போன்ற பேரிடர்களின் போது தொடர்ந்து மக்களுக்கு அம்மா சங்கம் பல உதவிகளை செய்துள்ளது. ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் பேச வேண்டாம்.
மலையாள திரையுலகம் பாலிவுட் போன்று பிரமாண்டமானது அல்ல, கஷ்டப்பட்டு முன்னேறி வந்துள்ளது. இந்தியாவிலேயே சிறந்த நடிகர் சங்கம், அம்மா சங்கம்தான். அது அழிந்து விடக் கூடாது. நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை. கேரளாவில் தான் இருக்கிறேன்.பாலியல் புகார் தொடர்பாக நீதிமன்றமும், அரசும் தங்கள் கடமைகளை செய்து வருகின்றன. நீதிமன்றத்தில் உள்ள பிரச்சனை தொடர்பாக நான் எப்படி பேச முடியும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார் மோகன்லால்.
பேட்டி முழுவதும் படபடப்பாக காணப்பட்டார் மோகன்லால். செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் அவர் ஆவேசமாக பதிலளித்தார். ஹேமா கமிட்டி அறிக்கையால் ஏற்பட்டுள்ள பிரளயம் எப்போது அடங்கும் என்று தெரியவில்லை. மறுபக்கம், இன்னொரு சூப்பர் ஸ்டாரான மம்முட்டி இதுவரை இதுகுறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் உள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}