சென்னை: 90களில் நடிகராகவும் பின்னர் அரசியல்வாதியாகவும் திகழ்ந்த நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் மற்றும் அக்ஷயாவுக்கு இன்று ஜப்பானில் திருமணம் சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழ் சினிமாவை சேர்ந்த பல்வேறு திரை நட்சத்திரங்கள் நேரில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
90களில் தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகர், நடிகைகள் தனக்கென்று தனி ஸ்டைலில் நடித்து மக்களிடையே பாராட்டுகளை பெற்று பிரபலமானவர்கள் பலர். அதில் ஒருவர்தான் நெப்போலியன். இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து 90களில் பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
எட்டுப்பட்டி ராசா பாடல் மூலம் கிராமத்து ரசிகர்களை தன் வசப்படுத்தியவர். அதுமட்டுமல்லாமல் இப்பாடலுக்காக பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஒரு நடிகனாக, பாடகனாக மட்டுமல்லாமல் ஒரு அரசியல்வாதியாகவும் களமிறங்கி திமுக சார்பில் போட்டியிட்டு மத்திய அமைச்சராகவும் பதவி வகித்து வந்தவர். நெப்போலியன் மற்றும் ஜெயசுதா தம்பதிகளுக்கு தனுஷ் மற்றும் குணால் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.
நெப்போலியன் மகன் தனுஷிற்கு தசை தளர்வு நோய் காரணமாக அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்ற நெப்போலியன் அமெரிக்காவிலேயே குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார். இந்த நிலையில், தனுஷிற்கு திருமணம் செய்ய முடிவு செய்து, திருநெல்வேலியை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணுடன், நிச்சயதார்த்தம் நடந்தது. இதுதொடர்பாந புகைப்படம் மற்றும் திருமண அழைப்பிதழ்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார் நெப்போலியன். இதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தொடர்ந்து திருமணத்தை ஜப்பானில் நடத்த தீர்மானித்து அதுதொடர்பான அப்டேட்டுக்களையும் போட்டு வந்தார் நெப்போலியன். இது பெரும் ஆர்வத்தையும், எதிர்பார்ப்புகளையும் தூண்டி விட்டிருந்தது. இந்த நிலையில் தனுஷ்_அக்ஷயாவின் திருமணம் இன்று ஜப்பானில் நடைபெற்றது. இந்திய நேரப்படி இன்று காலை 8.10 மணி அளவில் திருமணம் சிறப்பாக முடிந்தது.
திருமண விழாவில், நடிகர் சரத்குமார், ராதிகா சரத்குமார், சுஹாசினி, குஷ்பூ, மீனா, நடிகர் கார்த்தி அவரது மனைவி ரஞ்சனி, நடிகர் பாண்டியராஜன், அவரது மனைவி, நடிகர் விதார்த், முன்னாள் டிஜிபி ரவி, கலா மாஸ்டர், வசந்த பவன் ரவி உள்ளிட்ட பல திரைப்படங்கள் கலந்து கொண்டனர். அதேபோல் ஜப்பான் நாட்டின் இந்திய தூதர் சிபி ஜார்ஜ், அவரது மனைவி ஜாய்ஸ் ஜார்ஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நடிகர் சிவ கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் வீடியோ மூலம் வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}