சென்னை: 90களில் நடிகராகவும் பின்னர் அரசியல்வாதியாகவும் திகழ்ந்த நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் மற்றும் அக்ஷயாவுக்கு இன்று ஜப்பானில் திருமணம் சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழ் சினிமாவை சேர்ந்த பல்வேறு திரை நட்சத்திரங்கள் நேரில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
90களில் தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகர், நடிகைகள் தனக்கென்று தனி ஸ்டைலில் நடித்து மக்களிடையே பாராட்டுகளை பெற்று பிரபலமானவர்கள் பலர். அதில் ஒருவர்தான் நெப்போலியன். இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து 90களில் பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

எட்டுப்பட்டி ராசா பாடல் மூலம் கிராமத்து ரசிகர்களை தன் வசப்படுத்தியவர். அதுமட்டுமல்லாமல் இப்பாடலுக்காக பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஒரு நடிகனாக, பாடகனாக மட்டுமல்லாமல் ஒரு அரசியல்வாதியாகவும் களமிறங்கி திமுக சார்பில் போட்டியிட்டு மத்திய அமைச்சராகவும் பதவி வகித்து வந்தவர். நெப்போலியன் மற்றும் ஜெயசுதா தம்பதிகளுக்கு தனுஷ் மற்றும் குணால் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.
நெப்போலியன் மகன் தனுஷிற்கு தசை தளர்வு நோய் காரணமாக அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்ற நெப்போலியன் அமெரிக்காவிலேயே குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார். இந்த நிலையில், தனுஷிற்கு திருமணம் செய்ய முடிவு செய்து, திருநெல்வேலியை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணுடன், நிச்சயதார்த்தம் நடந்தது. இதுதொடர்பாந புகைப்படம் மற்றும் திருமண அழைப்பிதழ்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார் நெப்போலியன். இதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தொடர்ந்து திருமணத்தை ஜப்பானில் நடத்த தீர்மானித்து அதுதொடர்பான அப்டேட்டுக்களையும் போட்டு வந்தார் நெப்போலியன். இது பெரும் ஆர்வத்தையும், எதிர்பார்ப்புகளையும் தூண்டி விட்டிருந்தது. இந்த நிலையில் தனுஷ்_அக்ஷயாவின் திருமணம் இன்று ஜப்பானில் நடைபெற்றது. இந்திய நேரப்படி இன்று காலை 8.10 மணி அளவில் திருமணம் சிறப்பாக முடிந்தது.

திருமண விழாவில், நடிகர் சரத்குமார், ராதிகா சரத்குமார், சுஹாசினி, குஷ்பூ, மீனா, நடிகர் கார்த்தி அவரது மனைவி ரஞ்சனி, நடிகர் பாண்டியராஜன், அவரது மனைவி, நடிகர் விதார்த், முன்னாள் டிஜிபி ரவி, கலா மாஸ்டர், வசந்த பவன் ரவி உள்ளிட்ட பல திரைப்படங்கள் கலந்து கொண்டனர். அதேபோல் ஜப்பான் நாட்டின் இந்திய தூதர் சிபி ஜார்ஜ், அவரது மனைவி ஜாய்ஸ் ஜார்ஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நடிகர் சிவ கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் வீடியோ மூலம் வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அழகான ஆகஸ்ட் மாதம்.. என்னென்ன ஸ்பெஷல் இருக்கு தெரியுமா!
Short Story: சாந்தா!
எந்த மலரும் சொல்லிக் கொள்வதில்லை!
சட்டசபையில் கலகல.. முதல்வர் விஜய்யை குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைத்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!
மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து என்று மத்திய அரசு சொல்லவே இல்லை.. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்
Monday Motivation: இயற்கையைக் கொ(வெ)ல்லும் செயற்கை.. நல்லதல்ல விரைந்து விழிப்படைவோம்!
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது கட்டாயம்.. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
தமிழக கோயில்களில் புதிய கட்டுப்பாடுகள்: செப்டம்பர் 01 முதல் செல்போன்களுக்குத் தடை
முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்பி.,க்கள் கூட்டம்: 37 எம்.பி.க்கள் புறக்கணிப்பு
{{comments.comment}}