- தமிழ்ச்செல்வி
படைப்புகள் யாவும் மிக எளிதில் உருவாக்கப்படுவது அல்ல சிந்தனையின் நீட்சியே படைப்பாக உரு கொள்கிறது. ஒரு படைப்பு உருவாக நேரத்தையோ அல்லது பணத்தையோ முதலீடாக கொள்ள வேண்டும். ஒரு மதம் கொண்ட யானை தன்னை சுற்றி இருக்கும் சுற்றுப்புறத்தை அழிக்க மட்டுமே முயல்கிறது. மனதிலே தெளிவு மற்றும் சிறந்த சிந்தனை ஒரு சிறந்த ஆற்றலாக வெளிப்படுகிறது.
இப்போது எல்லாம் மாணவர்கள் சிந்திக்க மறந்து விட்டார்கள். புதிய படைப்புகளை கொடுக்க மறந்து விட்டார்கள். எதற்காக போட்டியிட வேண்டும், எதற்காக நாம் போராட வேண்டும், நாம் இந்த சமூகத்தை எவ்வாறு கட்டமைக்க வேண்டும் என்றெல்லாம் சிந்திக்க மறந்து விட்டார்கள்.
கைகளில் தொலைபேசியும் வலைதளங்களும் தங்கள் நேரத்தை திருடுவதை மறந்து விட்டார்கள். எங்கே எழுவது எங்கே மீள்வது என்று தெரியாமல் அல்லாடி கொண்டிருக்கிறார்கள். இந்த சமூக கட்டமைப்பில் வாழும் ஒவ்வொரு தரும் வெற்றி எனும் களத்தினை காண வந்திருக்கிறார்கள். அதற்கான திறவுகோலை தேடி வந்திருக்கிறார்கள்.

அவர்களை வழிநடத்தும் பொறுப்பினை எவ்வாறு செய்யப் போகிறோம். ஒழுக்கத்தையும் பண்பையும் எவ்வாறு சொல்லிக் கொடுக்கப் போகிறோம். தடம் மாறிச் செல்லும் தடாகத்தில் செல்லும் நீர் போல கூட்ட நெரிசலில் கலைந்து செல்லும் காற்றாக போகிற போக்கில் எல்லாம் வாழ்வதில்லை வாழ்க்கை என்று உணர்த்த வேண்டும் இன்றைய தலைமுறைக்கு.
(தமிழ்ச்செல்வி, பட்டதாரி ஆசிரியர், அ.உ. பள்ளி, அங்கு செட்டிபாளையம், பண்ருட்டி, கடலூர் மாவட்டம்)
FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்
பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!
கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!
Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!
Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)
Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!
தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!
இன்னிக்கி ஒரு பிடி.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
அன்பென்றாலே அப்பா
{{comments.comment}}