சென்னை: விஜய் மாநாட்டையும், அதில் அவர் பேசிய பேச்சையும் திமுகவினர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் தவெகவினர் எதிர்பாராத வகையில் ஒரு பூஸ்ட் கிடைத்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் மாநாடு மிகப் பெரிய வெற்றி அடைந்துள்ளதாக கூறியுள்ளார்.
நடிகர் விஜய் அரசியல்வாதியாக உருவெடுத்துள்ளார். அரசியல் தலைவராக, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராக அவரது தலைமையில் விக்கிரவாண்டி வி சாலையில் நடந்த மாநாடு அரசியல் அரங்கில் பல்வேறு பிரளயங்களை ஏற்படுத்தியுள்ளது. விஜய் அதில் பேசிய பேச்சு இன்று வரை பேசு பொருளாக அனைத்து தொலைக்காட்சி விவாத மேடைகளையும் அதிர வைத்து வருகிறது.
மறுபக்கம் விஜய் பேச்சு திமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பை வாரிக் குவித்துள்ளது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கடுமையாக எதிர்த்துப் பேசி வருகின்றன, விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில், விஜய் மாநாட்டுக்கு ஒரு பெரும் பாராட்டு எதிர்பாராத இடத்திலிருந்து வந்துள்ளது. அதுதான் ரஜினிகாந்த்.

விஜய்க்கு முன்பாக அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் ரஜினிகாந்த். கமலுக்கும் முன்பாகவே அவர் எதிர்பார்க்கப்பட்டார். அரசியலுக்கு வரப் போவதாக ரஜினியும் கூட அறிவித்தார். ஆனால் இடையில் கொரோனா குறுக்கிட்டதால் அதைக் காரணம் காட்டி அரசியலுக்கு முழுக்குப் போட்டு விட்டார் ரஜினிகாந்த். அதேசமயம், திரைப்படங்களில் தொடர்ந்து தீவிரமாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ரஜினிக்கு முன்பாகவே அரசியலுக்கு வந்த கமல்ஹாசன் தற்போது திமுக கூட்டணியில் இணைந்து விட்டார். இந்த நிலையில்தான் விஜய் தற்போது அரசியலுக்கு வந்துள்ளார். அவரது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கடந்த 27ம் தேதி விக்கிரவாண்டி, வி. சாலையில் நடைபெற்றது. அதில் விஜய் அனல் தெறிக்கப் பேசினார். தனது கட்சியின் அரசியல் வழிகாட்டித் தலைவர்கள், கொள்கை, இலக்கு, அரசியல் எதிரிகள் உள்ளிட்டவை குறித்து அவர் விளக்கமாக பேசினார். அந்தப் பேச்சுதான் இன்று வரை பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடும் விமர்சன மழையில் நனைந்து கொண்டிருக்கும் விஜய்க்குப் பாராட்டு மழை பொழிந்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். போயஸ் தோட்டத்திற்கு வெளியே தனக்கு தீபாவளி வாழ்த்து கூற குவிந்திருந்த ரசிகர்களிடையே ரஜினிகாந்த் பேசினார். அவர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். அப்போது செய்தியாளர்கள், ரஜினிகாந்த்திடம், விஜய் மாநாடு குறித்து கேட்டபோது, மாநாடு உண்மையில் மிகப் பெரிய வெற்றி அடைந்துள்ளது. அவருக்கு எனது வாழ்த்துகள் என்று தெரிவித்தார்.
செய்தியாளர்கள் தொடர்ந்து, மாநாட்டில் விஜய் பேசிய கருத்து குறித்து கேட்டபோது, வணக்கம் என்று கூறி அதுகுறித்து ரஜினிகாந்த் கருத்து தெரிவிக்கவில்லை. புன்னகையுடன் நகர்ந்து சென்றார்.
முன்பு இதுபோல விமான நிலையத்தில் வைத்து ரஜினிகாந்த்திடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, என்னிடம் அரசியல் குறித்துப் பேசாதீங்க என்று சொன்னேனா இல்லையா என்று கடிந்து கொண்டிருந்தார். ஆனால் இன்று விஜய் மாநாடு மிகப் பெரிய வெற்றி அடைந்துள்ளதாக ரஜினிகாந்த் கூறியுள்ளது, தவெக கட்சியினரை உற்சாகமடைய வைத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
{{comments.comment}}