விஜய் மாநாடு மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது.. நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு.. தவெகவினர் உற்சாகம்!

Oct 31, 2024,10:49 AM IST

சென்னை: விஜய் மாநாட்டையும், அதில் அவர் பேசிய பேச்சையும் திமுகவினர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் தவெகவினர் எதிர்பாராத வகையில் ஒரு பூஸ்ட் கிடைத்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் மாநாடு மிகப் பெரிய வெற்றி அடைந்துள்ளதாக கூறியுள்ளார்.


நடிகர் விஜய் அரசியல்வாதியாக உருவெடுத்துள்ளார். அரசியல் தலைவராக, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராக அவரது தலைமையில் விக்கிரவாண்டி வி சாலையில் நடந்த மாநாடு அரசியல் அரங்கில் பல்வேறு பிரளயங்களை ஏற்படுத்தியுள்ளது. விஜய் அதில் பேசிய பேச்சு இன்று வரை பேசு பொருளாக அனைத்து தொலைக்காட்சி விவாத மேடைகளையும் அதிர வைத்து வருகிறது.


மறுபக்கம் விஜய் பேச்சு திமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பை வாரிக் குவித்துள்ளது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கடுமையாக எதிர்த்துப் பேசி வருகின்றன, விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில்,  விஜய் மாநாட்டுக்கு ஒரு பெரும் பாராட்டு எதிர்பாராத இடத்திலிருந்து வந்துள்ளது. அதுதான் ரஜினிகாந்த்.




விஜய்க்கு முன்பாக அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் ரஜினிகாந்த். கமலுக்கும் முன்பாகவே அவர் எதிர்பார்க்கப்பட்டார். அரசியலுக்கு வரப் போவதாக ரஜினியும் கூட அறிவித்தார். ஆனால் இடையில் கொரோனா குறுக்கிட்டதால் அதைக் காரணம் காட்டி அரசியலுக்கு முழுக்குப் போட்டு விட்டார் ரஜினிகாந்த். அதேசமயம், திரைப்படங்களில் தொடர்ந்து தீவிரமாக நடித்து வருகிறார்.


இந்த நிலையில் ரஜினிக்கு முன்பாகவே அரசியலுக்கு வந்த கமல்ஹாசன் தற்போது திமுக கூட்டணியில் இணைந்து விட்டார். இந்த நிலையில்தான் விஜய் தற்போது அரசியலுக்கு வந்துள்ளார். அவரது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கடந்த 27ம் தேதி விக்கிரவாண்டி, வி. சாலையில் நடைபெற்றது. அதில் விஜய் அனல் தெறிக்கப் பேசினார். தனது கட்சியின் அரசியல் வழிகாட்டித் தலைவர்கள், கொள்கை, இலக்கு, அரசியல் எதிரிகள் உள்ளிட்டவை குறித்து அவர் விளக்கமாக பேசினார். அந்தப் பேச்சுதான் இன்று வரை பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் கடும் விமர்சன மழையில் நனைந்து கொண்டிருக்கும் விஜய்க்குப் பாராட்டு மழை பொழிந்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். போயஸ் தோட்டத்திற்கு வெளியே தனக்கு தீபாவளி வாழ்த்து கூற குவிந்திருந்த ரசிகர்களிடையே ரஜினிகாந்த் பேசினார். அவர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். அப்போது செய்தியாளர்கள், ரஜினிகாந்த்திடம், விஜய் மாநாடு குறித்து கேட்டபோது, மாநாடு உண்மையில் மிகப் பெரிய வெற்றி அடைந்துள்ளது. அவருக்கு எனது வாழ்த்துகள் என்று தெரிவித்தார்.


செய்தியாளர்கள் தொடர்ந்து, மாநாட்டில் விஜய் பேசிய கருத்து குறித்து கேட்டபோது, வணக்கம் என்று கூறி அதுகுறித்து ரஜினிகாந்த் கருத்து தெரிவிக்கவில்லை. புன்னகையுடன் நகர்ந்து சென்றார்.


முன்பு இதுபோல விமான நிலையத்தில் வைத்து ரஜினிகாந்த்திடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, என்னிடம் அரசியல் குறித்துப் பேசாதீங்க என்று சொன்னேனா இல்லையா என்று கடிந்து கொண்டிருந்தார். ஆனால் இன்று விஜய் மாநாடு மிகப் பெரிய வெற்றி அடைந்துள்ளதாக ரஜினிகாந்த் கூறியுள்ளது, தவெக கட்சியினரை உற்சாகமடைய வைத்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?

news

TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?

news

விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்

news

குந்தவை த்ரிஷா பற்றி சர்ச்சை கருத்து...மன்னிப்பு கேட்டார் நடிகர் பார்த்திபன்

news

அமெரிக்காவுலதாங்க அதுக்குப் பேரு இறைச்சி பந்து.. நம்ம ஊர்ல என்ன தெரியுமா?

news

கேஸ் சிலிண்டர் புக் பண்ண போறீங்களா?...இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க

news

தமிழக ராஜ்யசபா தேர்தல்... 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு

news

ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்

news

மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்