சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இதயத்திலிருந்து செல்லும் ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டிருந்ததே அவரது உடல் நல பாதிப்புக்குக் காரணம் என்றும் தற்போது அது சரி செய்யப்பட்டு ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளதாக சென்னை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று நள்ளிரவுக்கு மேல் திடீரென அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு வயிற்று வலி என்றும், நெஞ்சு வலி என்றும் பல்வேறு வகையான தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் அவரது உடல் நிலை ஸ்திரமாக இருப்பதாகவும், இன்று அவருக்கு பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர் கண்விழித்து டாக்டர்களுக்கு நன்றி கூறியதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த பின்னணியில் தற்போது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ரஜினியின் உடல் நலம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: நடிகர் ரஜினிகாந்த் செப்டம்பர் 30ம் தேதி கிரீம்ஸ்ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்திலிருந்து செல்லும் முக்கிய ரத்த நாளத்தில் வீக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அறுவைச் சிகிச்சை இல்லாமல், டிரான்ஸ்கத்தீட்டர் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மூத்த இருதயவியல் நிபுணர் டாக்டர் சாய் சதீஷ், வீங்கியிருந்த ரத்த நாளத்தில் அதை சரி செய்து விட்டு அங்கு ஸ்டென்ட் பொருத்தினார். ரஜினிகாந்த் நலம் விரும்பிகளுக்கும், அவரது ரசிகர்களுக்கும் நாங்கள் சொல்லும் செய்தியானது, ரஜினிகாந்த்துக்கான சிகிச்சை திட்டமிட்டபடி சிறப்பாக நடந்து முடிந்தது. அவரது உடல் நலம் ஸ்திரமாக உள்ளது, அவர் நலமாக உள்ளார். இன்னும் 2 நாட்களில் ரஜினிகாந்த் வீடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா.. மறக்க முடியாத செளகார் ஜானகி.. பின்னி எடுத்த வேடங்கள்..!
"திமுக எம்எல்ஏ.,க்களுக்கு கார் வேண்டாம்!" – சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!
ஃபைலை திறக்க ஜோசியக்காரர் சொல்லணுமா? உதயநிதி காரசார பேச்சு
எம்எல்ஏ.,க்களுக்கு கார் கொடுப்பது ஏன்? அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்
ஏ டி எம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி? நேரில் செயல் விளக்கம் பெற்ற மாணவர்கள்!
டெல்லியில் டிஜிபி அலுவலகம் முன்பு ராகுல் காந்தி திடீர் தர்ணா போராட்டம்
Varalakshmi Nonbu: வரலட்சுமி பூஜை ஏன் செய்யப்படுகிறது?
சிந்தனைச் சிதறல்: எந்த ஒன்றையும் உதாசீனப்படுத்தி விடாதீர்கள்!
{{comments.comment}}