சென்னை: ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற பெயரில் பெண்கள் அரை குறை ஆடையுடன் முக்குக்கு முக்கு ஆடுவது பார்க்கவே வருத்தமாக இருக்கிறது. எனக்கு மட்டும் பவர் இருந்தால் புடுச்சு எல்லாத்தையும் உள்ளே போட்டு ஆயுள் தண்டனை கொடுப்பேன் என்று நடிகர் ரஞ்சித் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டு நகரங்களில் ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற பெயரிலான வாரா வாரம் பொது இடத்தில் மக்கள் கூடி மகிழ்ச்சியுடன் பொழுதைக் கழிக்கும் நிகழ்வுகள் தற்போது பிரபலமாகி வருகின்றன. சென்னை, கோவை, புதுச்சேரி, மதுரை, கடலூர், சேலம் என்று பல்வேறு ஊர்களிலும் இது நடைபெறுகிறது.
அந்த ஊரின் முக்கியமான இடத்தில் பொதுமக்கள் பெரும்பாலும் இளைஞர்கள், இளம் பெண்கள்தான் அதிகம் திரளுகிறார்கள். கூடி ஆடிப் பாடுகிறார்கள். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. குழந்தைகளுக்கும் இதில் பல நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. வாரம் முழுவதும் கடுமையாக உழைக்கும் மக்களுக்கு இந்த ஒரு நாள் சற்று ரிலாக்ஸ் தரட்டும் என்ற நோக்கில் இது நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் கலாச்சாரத்தை கிண்டலடித்து விமர்சித்துள்ளார் நடிகர் ரஞ்சத். இதுகுறித்து கோவையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சமீப காலமாக நிறைய மனக்கசப்பான சம்பவங்கள் நடக்குது. முக்குக்கு முக்கு எங்க பார்த்தாலும் தெருவில் ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற பெயரில் நடக்குது. எங்கருந்ததுடா வர்றீங்க நீங்கல்லாம்.. உங்க அம்மா அப்பா யாரு. இதை டிவியில பார்த்து, அதுவும் கோயம்பத்தூர்ல ஆர்எஸ்புரத்துல.. எனக்கெல்லாம் அரசு அதிகாரி பவர் இருந்தா புடுச்சு ஆயுள் தண்டனைதான் கொடுப்பேன்.
பூராப் பேரும் அரைகுறை ஆடையோட, யார் வேண்டுமானாலும் யாரோட வேண்டுமானாலும் ஆடுவது. கூத்தடிப்பது. இதுக்குப் பாராட்டு.. தொலைக்காட்சி, பத்திரிகைகள் இதை பாராட்டுகின்றன. பெற்றோர்கள் தயவு செய்து, இது அடுத்த கட்டத்துக்கு கண்டிப்பா போகும். தாய்லாந்து போலவோ, சிங்கப்பூர் போலவோ வரக் கூடாது.. வரவும் விடக் கூடாது.
இதே கோயம்பத்தூர்ல,அழகா, நல்லா புடவை கட்டி குடும்பத்தோட வள்ளிக்கும்மிங்கிற நடனத்தை எல்லோரும் ஊக்குவிக்கணும். இந்த நிகழ்ச்சி எங்க போட்டாலும் நான் போயிருவேன். இதுதானே கலாச்சாரம்.. மனசார சந்தோஷப்பட்டு வந்திருக்கேன். அழிந்து போன, கண்ணியம் காக்குற கலைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு போய் தர்றது நம்மோட கடமைன்னு நினைக்கிறேன் என்றார் ரஞ்சித்.
விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு
இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?
Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு
மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!
உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?
Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி
சந்தோஷம்!
{{comments.comment}}