"ஹேப்பி ஸ்ட்ரீட்" என்ற பெயரில்  அரைகுறையாக ஆடறாங்களே.. நடிகர் ரஞ்சித் விளாசல்

Nov 05, 2023,10:06 AM IST

சென்னை: ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற பெயரில் பெண்கள் அரை குறை ஆடையுடன் முக்குக்கு முக்கு ஆடுவது பார்க்கவே வருத்தமாக இருக்கிறது. எனக்கு மட்டும் பவர் இருந்தால் புடுச்சு எல்லாத்தையும் உள்ளே போட்டு ஆயுள் தண்டனை கொடுப்பேன் என்று நடிகர் ரஞ்சித் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ்நாட்டு நகரங்களில் ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற பெயரிலான வாரா வாரம் பொது இடத்தில் மக்கள் கூடி மகிழ்ச்சியுடன் பொழுதைக் கழிக்கும் நிகழ்வுகள் தற்போது பிரபலமாகி வருகின்றன. சென்னை, கோவை, புதுச்சேரி, மதுரை, கடலூர், சேலம் என்று பல்வேறு ஊர்களிலும் இது நடைபெறுகிறது.


அந்த ஊரின் முக்கியமான இடத்தில் பொதுமக்கள் பெரும்பாலும் இளைஞர்கள், இளம் பெண்கள்தான் அதிகம் திரளுகிறார்கள். கூடி ஆடிப் பாடுகிறார்கள். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. குழந்தைகளுக்கும் இதில் பல நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. வாரம் முழுவதும் கடுமையாக உழைக்கும் மக்களுக்கு இந்த ஒரு நாள் சற்று ரிலாக்ஸ் தரட்டும் என்ற நோக்கில் இது நடைபெறுவதாக கூறப்படுகிறது.




இந்த நிலையில் இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் கலாச்சாரத்தை கிண்டலடித்து விமர்சித்துள்ளார் நடிகர் ரஞ்சத். இதுகுறித்து கோவையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  சமீப காலமாக நிறைய மனக்கசப்பான சம்பவங்கள் நடக்குது. முக்குக்கு முக்கு எங்க பார்த்தாலும் தெருவில் ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற பெயரில் நடக்குது. எங்கருந்ததுடா வர்றீங்க நீங்கல்லாம்.. உங்க அம்மா அப்பா யாரு. இதை டிவியில பார்த்து, அதுவும் கோயம்பத்தூர்ல ஆர்எஸ்புரத்துல.. எனக்கெல்லாம் அரசு அதிகாரி பவர் இருந்தா புடுச்சு ஆயுள் தண்டனைதான் கொடுப்பேன்.


பூராப் பேரும் அரைகுறை ஆடையோட, யார் வேண்டுமானாலும் யாரோட வேண்டுமானாலும் ஆடுவது. கூத்தடிப்பது. இதுக்குப் பாராட்டு.. தொலைக்காட்சி, பத்திரிகைகள் இதை பாராட்டுகின்றன. பெற்றோர்கள் தயவு செய்து,  இது அடுத்த கட்டத்துக்கு கண்டிப்பா போகும். தாய்லாந்து போலவோ, சிங்கப்பூர் போலவோ வரக் கூடாது.. வரவும் விடக் கூடாது. 


இதே கோயம்பத்தூர்ல,அழகா, நல்லா புடவை கட்டி குடும்பத்தோட வள்ளிக்கும்மிங்கிற நடனத்தை எல்லோரும் ஊக்குவிக்கணும். இந்த நிகழ்ச்சி எங்க போட்டாலும் நான் போயிருவேன். இதுதானே கலாச்சாரம்.. மனசார சந்தோஷப்பட்டு வந்திருக்கேன். அழிந்து போன, கண்ணியம் காக்குற கலைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு போய் தர்றது நம்மோட கடமைன்னு நினைக்கிறேன் என்றார் ரஞ்சித்.


சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்